தோல்வியை வெற்றியாக்கும் மோடி

மக்களை ஓரணியில் பிரதமர் மோடி திரள வைக்கிறார்; ஏராளமானோர் அவரை ஆழமாக வெறுக்கின்றனர், அதைப் போலவே ஏராளமானோர் அவரை விரும்புகின்றனர் – அதிலும் குறிப்பாக இளைஞர்கள். குஜராத்திலும் கர்நாடகத்திலும் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள தோல்விகளைக் கொண்டு, ‘2019 மக்களவை பொதுத் தேர்தல் முடிவும் இப்படித்தான் அமையும்’ என்று கணிப்பது மெத்தனமான நடவடிக்கையாகவே அமையும். கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களிலிருந்து நான் அறிந்துகொண்டது, மக்களிடம் ‘அவருக்கு’ தனிப்பட்ட ஈர்ப்பாற்றல் தொடர்ந்து நிலவுகிறது என்பதுதான். மக்கள் எதற்கெல்லாம் கோபப்படுவார்களோ அதற்கெல்லாம் இந்த ஆட்சியிலும் கோபப்படுகிறார்கள். விலை உயர்வு (குறிப்பாக பெட்ரோல் – டீசல்), விவசாயிகளின் துயரங்கள், வேலைவாய்ப்பு இன்மை, தொழில் வளர்ச்சி குன்றுவது, பணமதிப்பு நீக்கம், பொது சரக்கு – சேவை வரி என்று எல்லாவற்றுக்கும் மக்கள் நிச்சயமாகவே கோபப்படுகிறார்கள். அந்தக் கோபத்தின் பெரும் பகுதி பாஜக மீதும் அது ஆளும் மாநில அரசுகள், மத்திய அரசு ஆகியவற்றின் மீதும் தான் இருக்கிறது.

(“தோல்வியை வெற்றியாக்கும் மோடி” தொடர்ந்து வாசிக்க…)

8 பேர் பலி; 38,048 பேர் பாதிப்பு

சீரற்ற வானிலையால், இதுவரையிலும் 9,817 குடும்பங்களைச் சேர்ந்த 38,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறான அனர்த்தங்களினால் இதுவரையிலும் 8 பேர் மரணமடைந்துள்ளனர். இதேவேளை 7 பேர் காய​மடைந்துள்ளனர். 19 வீடுகள் முழுமையாகவும், பகுதியளவில் 918 வீடுகளும் ​சேதமடைந்துள்ளனவென தெரிவித்துள்ள அந்த நிலையம்,1,625 குடும்பங்களைச் சேர்ந்த 6,090 பேர், 80 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

(“8 பேர் பலி; 38,048 பேர் பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

பலவீனங்களுக்குப் பரிகாரம் தராத பலவீனங்கள்

(காரை துர்க்கா)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பலவீனம் அடைந்துள்ளது” என அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் இதையே சுட்டி நிற்கின்றன.

(“பலவீனங்களுக்குப் பரிகாரம் தராத பலவீனங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் நிலை

(அ.விஜயன்)

சிவகங்கை மாவட்டம் தாழையூர் முகாமில்  வசித்துவரும், சுரேஸ்குமார், சிவாஜினி தம்பதிகள் யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் எற்பட்ட அசாதாரன சூழ்நிலையால் 2009 இல் அகதிகளாக தழிகத்துக்கு இடம்பெயர்ந்தவர்கள்  வினோதரன், சாதுரியா என இரண்டு பிள்ளைகள் இதில் வினோதரன் தேவகோட்டையில் உள்ள இன்பான் ஜீசஸ் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.

(“தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் நிலை” தொடர்ந்து வாசிக்க…)

கர்நாடகாவில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியில் துணை முதல்வர், அமைச்சர் பதவியை பகிர்வதில் இழுபறி

கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ், மஜத கூட்டணியில் துணை முதல்வர், அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் புதிதாக அமையும் மஜத, காங்கிரஸ் கூட்டணி அரசில் எந்த கட்சிக்கு கூடுதல் முக்கியத்துவம், எத்தனை அமைச்சர்கள், துணை முதல்வர் உள்ளிட்ட பதவிகளை பகிர்ந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மஜத தேசிய தலைவர் தேவகவுடா தலைமையில் நடக்கும் இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர் பரமேஷ்வர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

(“கர்நாடகாவில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியில் துணை முதல்வர், அமைச்சர் பதவியை பகிர்வதில் இழுபறி” தொடர்ந்து வாசிக்க…)

உலகக் கிண்ணத்தில் யார் யார் விளையாடுவர்?

(Shanmugan Murugavel)

ரஷ்யாவில் இவ்வாண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான அணிகளை அறிவிப்பதற்கு முன்னராக இறுதிச் சுற்று சிநேகபூர்வ கால்பந்தாட்ட போட்டிகள் இவ்வாரம் முடிவடைந்திருந்தன. இந்நிலையில், ஏறத்தாழ உலகக் கிண்ணத்தில் தாம் களமிறக்கப் போகும் அணிகளையே இவ்வார, கடந்த வார போட்டிகளில் அணிகள் களமிறக்கியிருந்தன.

(“உலகக் கிண்ணத்தில் யார் யார் விளையாடுவர்?” தொடர்ந்து வாசிக்க…)

மதுரோவுக்கு வெற்றி; புதிய தடைகள் வரும்?

வெனிசுவேலாவின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தற்போதைய ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, அடுத்த 6 ஆண்டுகளுக்கும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். ஆனால், அவரது இவ்வெற்றி, வெனிசுவேலா மீது புதிய தடைகளைக் கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் (20) இடம்பெற்ற வாக்கெடுப்பில், ஜனாதிபதி மதுரோவுக்கு 5.8 மில்லியன் வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதம வேட்பாளர் ஹென்றி ஃபல்கொன்னுக்கு, 1.8 மில்லியன் வாக்குகள் கிடைத்தன.

(“மதுரோவுக்கு வெற்றி; புதிய தடைகள் வரும்?” தொடர்ந்து வாசிக்க…)

இன்று ராஜிவ் நினைவு நாள்.

‘ஏ தாழ்ந்த தமிழினமே’ என்று
ஏய்க்கிறவனுக்கு இரையானதைத் தவிர
பிழையேதுமில்லை தமிழனிடம்.

(“இன்று ராஜிவ் நினைவு நாள்.” தொடர்ந்து வாசிக்க…)

ஜனநாயகம் பிழைத்திருக்கிறது தற்காலிகமாகவேனும்!

கர்நாடகத்தில் முதல்வராகப் பதவியேற்ற வேகத்தில் ராஜினாமா செய்திருக்கிறார் எடியூரப்பா. ஜனநாயகம் தற்காலிகமாகத் தப்பிப் பிழைத்திருக்கிறது. 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்ட மன்றத்தில் 222 இடங் களுக்குத் தேர்தல் நடந்தது. 104 இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தாலும், ஆட்சி அமைப்பதற் கான எண்ணிக்கை அதனிடம் இல்லை. மாறாக, 78 தொகுதிகளில் வென்ற காங்கிரஸின் ஆதரவுடன், 37 தொகுதிகளில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைப்பதற்குப் போதிய எண்ணிக்கையுடன் ஆளுநரை அணுகியது. மஜத தலைவர் குமாரசாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்திருக்க வேண்டியதே ஆளுநர் வஜுபாய் வாலா எடுத்திருக்க வேண்டிய சரியான முடிவு. ஆனால், குமாரசாமியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, அந்த வாய்ப்பை பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு வழங்கினார் ஆளுநர். கூடவே, பெரும்பான்மை வலுவை நிரூபிக்க தாராளமாக 15 நாட்கள் அவகாசமும் எடியூரப்பாவுக்கு அளித்தார் ஆளுநர்.

(“ஜனநாயகம் பிழைத்திருக்கிறது தற்காலிகமாகவேனும்!” தொடர்ந்து வாசிக்க…)

கர்நாடகத் தேர்தல் காங்கிரஸுக்குக் கற்றுத்தந்த பாடம்!

(ஷிவ் விசுவநாதன்)

இந்தியாவில் எங்கு, எப்போது தேர்தல் நடந்தாலும் தோற்பதே காங்கிரஸின் வழக்கமாகிக்கொண்டிருக் கிறது. பார்வையாளர்களான மக்கள் திகைத்துக் கரகோஷம் செய்யும்போது, தொப்பிக்குள்ளிருந்து முயல்களாக இழுத்துத் தள்ளும் மந்திரவாதியைப் போல, பாஜக தொடர்ந்து வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறது.

(“கர்நாடகத் தேர்தல் காங்கிரஸுக்குக் கற்றுத்தந்த பாடம்!” தொடர்ந்து வாசிக்க…)