புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part14)

இதேவேளை இந்த இராணுவத் தாக்குதல்களால் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புகள் மட்டுமல்லாமல் இராணுவக் கட்டமைப்பும் ஆட்டம் கண்டது. குறிப்பாகப் புலிகளின் வெடிபொருட் தொழிற்சாலைகள் இடப்பெயர்வுக்கும் குண்டுவீச்சுக்கும் இலக்காகின. புது மாத்தளன், அம்பலவன் பொக்களையில் ஏப்ரல் 19, 20ஆம் திகதிகளில் இராணுவமும் உள்நுழைந்தவுடன் மாறிய நிலைமைகள் புலிகளுக்கு மேலும் நெருக்கடிகளைக் கொடுத்தன. கடலில் தீவிரக் கண்காணிப்பு, சிறிய நிலப்பகுதி, வெளிச்செல்ல முடியாத அளவுக்குச் சுற்றிவளைப்புஇராணுவ வளையத்தின் இறுக்கம், தளர்வடைந்த தளபதிகள், எந்தப் போருபாயத்தாலும் இனி வெற்றி கொள்ள முடியாது என்ற நிலை நிச்சயமாகிவிட்டது. ஆனால், அப்போதும் தங்களால் போரில் வெற்றிபெற முடியும் என அவர்கள் சனங்களுக்குச் சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். புலிகளின் குரல் வானொலி போர் வெற்றி குறித்த நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளையும் அறிவிப்புகளையும் செய்துகொண்டேயிருந்தது. ஆட்பிடிப்பும் குறைவில்லை. அதேவேளை புலிகள் தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தனர்.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part14)” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part13)

புலம்பெயர் மக்களின் போராட்டம் நிச்சயமாக ஏதாவது நல்விளைவுகளைத் தரும் என்று பிரபாகரன் நம்பினார். முதல் தடவையாக அவர் துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் நம்பிக்கை இழந்த நிகழ்ச்சி இது. அதுவரையும் எப்படியும் இராணுவத்தை ஏதாவது ஒரு புள்ளியில் வைத்து முறியடித்துத் தோல்வியைத் தழுவச் செய்யலாம் என்று இருந்த நம்பிக்கையைப் பிரபாகரன் மெல்ல மெல்ல இழந்திருந்தார்.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part13)” தொடர்ந்து வாசிக்க…)

‘கூட்டமைப்போடு இணைய வேண்டுமென்ற அவசியமில்லை’

மக்களாலேயே தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் கேட்டுக்கொண்டதாலேயே தான் இன்று பிரதிஅமைச்சு பதவியை பெற்றுக்கொண்டதாகவும் கிழக்கு அபிவிருத்திப் பிரதியமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து, இன்று (17) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“‘கூட்டமைப்போடு இணைய வேண்டுமென்ற அவசியமில்லை’” தொடர்ந்து வாசிக்க…)

விலைபோன வியாழேந்திரன் விலக்கப்படுவார்

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள வியாழேந்திரன் எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டவுடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்த இரா.சம்பந்தன், மேலும் கூறுகையில்,

(“விலைபோன வியாழேந்திரன் விலக்கப்படுவார்” தொடர்ந்து வாசிக்க…)

உண்மைகளின் வெளிப்பாட்டு அனுபவம்

காங்கேசன்துறையிலிருந்து புகையிரதம் காலை 5.30 மணிக்குப் புறப்பட்டது. மேற்கு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த அந்த தமிழ் மகனும் பயணியாக இருந்தார். புகையிரதம் மல்லாகம், இணுவில், யாழ்ப்பாணம்,சாவகச்சேரி என நிலையங்கள் ஒவ்வொன்றாக கடந்து பயணித்துக் கொண்டிருந்தது. மேற்கு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த அந்த தமிழ் மகனுக்கு பசிக்களைப்பு. சிற்றுண்டி சாப்பிட்டு தேநீர் குடிக்கும் வேண்டும் போல ஓர் தவிப்பு . (“உண்மைகளின் வெளிப்பாட்டு அனுபவம்” தொடர்ந்து வாசிக்க…)

சபாநாயகர் ஆசனம் சுற்றிவளைப்பு; சபையில் பெரும் குழப்பம்

சபாநாயகர் ஆசனத்தை ஆளுங்கட்சியினர் சுற்றி வளைத்ததால் சபையில் குழப்ப நிலை தோன்றியுள்ளது. பிரதமர் மஹிந்த அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் எதிராக வாக்கெடுப்பை நடத்துமாறு, லக்ஸ்மன் கிரியெல்ல கோரியதையடுத்து, ச​பையில் அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் ஆசனத்துக்கு அருகில் சென்றதும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகருக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக சபாநாயகரை சுற்றி வளைத்தனர்.

அமெரிக்க இடைத் தேர்தல்: முடிவுகள் கூறுவது என்ன?

அமெரிக்காவில் நவம்பர் 6-ல் நடந்த இடைத் தேர்தலில், பிரதிநிதிகள் அவையில் பெரும்பான்மை வலு ஜனநாயகக் கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. 435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் அவையில் குடியரசுக் கட்சியிடமிருந்து 26 இடங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, செனட், பிரதிநிதிகள் அவை இரண்டிலும் குடியரசுக் கட்சிக்கு இருந்த பெரும்பான்மை குறைந்திருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் தனக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி என்று டிரம்ப் சொல்லிக்கொண்டாலும், இரு அவைகளிலும் பெரும்பான்மை குறைந்துவிட்டதால் தனது எஞ்சிய பதவிக் காலத்தில், கொள்கைகளை மறுபரிசீலனை செய்து அமல்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார் டிரம்ப்.

(“அமெரிக்க இடைத் தேர்தல்: முடிவுகள் கூறுவது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

பத்திரிகைகளுக்காக வெளியிடப்படும் அறிக்கை – 13-11-2018 – SDPT

ஆளுநரின் ஆட்சிக் காலத்தில் மாகாண சபையின் அதிகாரங்கள் பறிபோகாது ஜனாதிபதியும் ஆளுநரும் அதனை பராமரித்து பாதுகாக்க வேண்டும்.

– அ. வரதராஜா பெருமாள்

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண சபைகள் கலைக்கப்பட்டு இப்போது ஆளுநரின் தலைமையின் கீழ் மாகாண ஆட்சி நடைபெறுகிறது. இதனvaratha் அர்த்தம் மாகாண ஆட்சி முறை குலைந்து போனதாக அர்த்தமாகாது. இவ்வாறான காலகட்டத்தில் மத்திய அரசாங்கம் மாகாண ஆட்சியின் அதிகாரங்களைக் கையிலெடுத்து செயற்படும் எனக் கருதுவதும் தவறாகும். அவ்வாறான தவறான அர்த்தத்தில் மாகாண ஆட்சி முறையை கடந்த காலங்களில் கையாண்டதனாலேயே 13வது அரசியல் யாப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் மாகாண சபை முறை கொண்டிருந்த ஆட்சித் தத்துவங்களெல்லாம் காலப்போக்கில் கரைக்கப்பட்டு மலினப்படுத்தப்பட்டன.

(“பத்திரிகைகளுக்காக வெளியிடப்படும் அறிக்கை – 13-11-2018 – SDPT” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அந்த மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வைக்க முடியாது என மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் – ரணில்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தவுடன் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படுவது உறுதியென ரணில் – சம்பந்தனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.

(“நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் – ரணில்” தொடர்ந்து வாசிக்க…)