நான் பார்த்து வியந்த ஒரு மனிதன்

கிளிநொச்சிக்கு ஓர் அரசியல் வாதி வருவதாக இருந்தால் அவருடைய ஊடக செயலாளர் எம்மை தொடர்பு கொள்வார் இந்த திகதியில் இத்தனை மணிக்கு நாம் வருவோம் என்று இல்லை எனில் சக ஊடகவியாளர் ஒருவருக்காவது தகவல் வழங்கப்படும். இன்று எனக்கு ஓர் அழைப்பு வந்தது ஓர் அமைச்சர் கிணறுகளை சுத்தம் செய்கிறார் என்று நான் குறித்த இடத்துக்கு செல்லும் போது அங்கு அவர் இருக்கவில்லை அருகில் நின்றவர்களை விசாரித்தேன் ஓர் அமைச்சர் வந்து இந்த கிணற்றை துப்பரவு செய்தாரம் எங்கே போயிருக்கிறார் என்று அவர்கள் சொன்னார்கள் அமைச்சர் வந்ததாக தெரியவில்லை சிலர் வந்து நீரை இறைத்து துப்பரவு செய்தார்கள் என்று பின்னர் அத்தகவல் அறிந்து அவர் இருந்த இடத்துக்கு சென்றேன். (“நான் பார்த்து வியந்த ஒரு மனிதன்” தொடர்ந்து வாசிக்க…)

இயக்குநர் ம்ருணாள் சென் மரணமடைந்துவிட்டார்.

2018.
ஆண்டின் கடைசி நாள்.

புத்தாண்டைப் பார்க்க விரும்பவில்லை அவர்.

எல்லா நேரிய கலைஞர்களையும்போலவே-
குமைந்த மனோநிலையில்
இருந்திருக்கக்கூடும் .

இல்லாமலிருந்திருந்தால்தான் வியப்பு.

இடதுசாரிச் சிந்தனைகளைத் திரையில் கோர்த்த இயக்குநர் ம்ருணாள் சென்
நேற்று மரணமடைந்துவிட்டார்.

தரமான இந்திய சினமா என்றாலே
சத்யஜித் ரே, ம்ருணாள்சென் என்று
எவர் வாயும் முணுமுணுக்கும் வரலாற்றை நிறுவியவர்களுள் ரெண்டாமவரும் விடைபெற்றுச் சென்றார்.

கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றி
மேற்கு வங்க சமூகத்திலும், அரசியலிலும்
மார்க்சியத் தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞன்…

உலக சினமாவின் ஓர் இந்திய முகம்…

வங்காளம்,ஹிந்தி, தெலுங்கு, ஒடிசா மொழிகளில் ஏறக்குறைய 30 திரைப்படங்கள்…

மேலும் குறும்படங்கள், ஆவணப்படங்கள்…

சிறந்த திரைக்கதை – சிறந்த படம் – சிறந்த இயக்கம் என
18 தேசிய விருதுகளைப் பெற்ற திரைப்படங்கள்….

தாதாசாகேப் பால்கே,பத்மபூஷண்,
சோவியத்நாட்டின் நேரு சோவியத் விருதுகளுடன்…….

பிலிம்பேர் விருதுகள்….
1975 மாஸ்கோ திரைப்பட விழா விருது…
1979 மாஸ்கோ திரைப்பட விழா விருது…
1977 கர்லோவை வரை திரை விழா சிறப்பு விருது…
1979 பெர்லின் Interfilm விருது…
1981 பெர்லின் Interfilm விருது…
1981 பெர்லின் – Grand Jury விருது…
1983 கேன்ஸ் திரைப்பட விழா விருது…
1983 வல்லாடோலிட் Gold spike விருது…
1984 சிகாகோ திரைப்பட விழா விருது…
1984 மான்ட்ரியல் திரைப்பட விழா விருது…
1989 வெனிஸ் திரைப்பட விழா விருது…
2002 கெய்ரோ திரைப்பட விழா விருது…

– என்று பெருமைகள் சூழ்ந்த பெருமகன்.

2002இல் வெளியான அவரது
கடைசித் திரைப்படத்துக்கு
இப்படிப் பேர் வைத்தார் :

‘இது என் பூமி’.

அது நிலைபெறும். ஆமாம்.

வருத்தமுடன் அல்ல.
வாழ்த்தி வழியனுப்புகிறோம்
தோழர் ம்ருணாள்.

(Rathan Chandrasekar)

இந்திய அரசியலுக்கு 2019 எப்படி அமையும்?

(எம். காசிநாதன்)

புத்தாண்டு 2019 நாளை பிறக்கப் போகிறது. இந்தியாவில், புதிய ஆட்சியை மத்தியில் அமைக்க, காங்கிரஸ் கட்சியின் தலைமையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும், இருக்கின்ற ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, பிரதமராக இருக்கும் நரேந்திரமோடியும் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அமித்ஷாவும் ‘பம்பரமாக’ இயங்கத் தொடங்கி விட்டார்கள். (“இந்திய அரசியலுக்கு 2019 எப்படி அமையும்?” தொடர்ந்து வாசிக்க…)

‘அமைச்ச​ரவைத் தொடர்பில் ஐ.தே.க உறுப்பினர்களுக்கு ஏமாற்றம்’

புதிய அமைச்சரவைத் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஏமாற்றமடைந்துள்ளனரென, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். (“‘அமைச்ச​ரவைத் தொடர்பில் ஐ.தே.க உறுப்பினர்களுக்கு ஏமாற்றம்’” தொடர்ந்து வாசிக்க…)

அருமைத் தோழர் நல்லக்கண்ணு

1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.

சுதந்திரம் கேட்டுப் போராடினாயா “நீதிபதி கேட்கிறார்.”

இல்லை,

நான் போராட வில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை, இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்! (“அருமைத் தோழர் நல்லக்கண்ணு” தொடர்ந்து வாசிக்க…)

உ/த பெறுபேற்றில், முதல் மூன்றிடம் … தமிழ் மாணவர்கள் யாரும் இல்லை

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (29) வெளியாகின. அதற்கமைய தேசிய ரீதியாக முதல் மூன்றிடங்களை பிடித்த மாணவர்களின் விவரங்கள்.. (“உ/த பெறுபேற்றில், முதல் மூன்றிடம் … தமிழ் மாணவர்கள் யாரும் இல்லை” தொடர்ந்து வாசிக்க…)

ஷொங்சிங் விமான நிறுவனம் இலங்கைக்கான முதலாவது சேவையை ஆர​ம்பித்துள்ளது

சீனாவின் ஷொங்சிங் விமான சேவையைானது ஷொங்சிங் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்துக்கான நேர​டி விமானசேவையை நேற்று முன்தினம் (28) ஆரம்பித்துள்ளது. சீனாவின் ஷொங்சிங் விமான நிலையத்திலிருந்து முதன் முதலாக பயணத்தை ஆரம்பித்த ஓ.கியு. 2393 என்ற விமானம் நேற்று முன்தினம் 9.10 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த இந்த விமானத்தில் 152 பயணிகளும் 11 விமான பணியாளர்களும் பயணித்துள்ளனர். குறித்த விமானம் வாரத்தில் திங்கள், புதன், வௌ்ளி ஆகிய நாள்களில் இரவு 9.10 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடையும் என்பதுடன், குறித்த தினமே இரவு 10.10 மணியளவில் இவ் விமானம் சீனாவை நோக்கி புறப்படவுள்ளது.

‘பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’

அரசமைப்பு மீறப்படும் போது, பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்ற ரீதியில், அரசியலமைப்பு மீறப்படும் போது, தடுத்து நிறுத்துவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கே உரியதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த ஒரு வரைவு வெளிவருமெனவும் அவர் குறிப்பிட்டார். (“‘பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’” தொடர்ந்து வாசிக்க…)

பிரண்டை தண்டு

எம்மிடம் வேலைபார்க்கும் இருவருக்கு முழங்கால் வலி அதிகமாக இருந்தன ஏதாவது பண்ணுங்க என்றார்கள்……

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள் எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க. பிரண்டையை சிறிது நேரம் மோரில் ஊற வைத்து பிறகு அதில்,மல்லிதலை,தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் …… (“பிரண்டை தண்டு” தொடர்ந்து வாசிக்க…)

2018: கடந்து போகும் காலம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இன்னோர் ஆண்டு எம்மைக் கடந்து போகிறது. முந்தைய ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும் ஏராளமான அல்லல்களையும் ஆச்சரியங்களையும் தந்துவிட்டு அப்பால் நகர்கிறது. இதன் தாக்கம், இனிவரும் ஆண்டுகளிலும் செல்வாக்குச் செலுத்தும் என்பதில் ஐயமில்லை. இது, இவ்வாண்டை எவ்வாறு நினைவுகூருவது என்ற வினாவை எழுப்புகிறது. (“2018: கடந்து போகும் காலம்” தொடர்ந்து வாசிக்க…)