இந்தியாவின் அணுவாயுத அரசியல்

(ஜனகன் முத்துக்குமார்)

இந்தியாவின் அணுசக்தி கொள்கையில் ஒரு புதிய மாற்றத்தை இந்தியாவின் பாதுகாப்பமைச்சரின் அறிக்கை பிரதிபலிக்கிறது. இந்தியா ஏற்கெனவே அதன் விநியோக முறைகளையும், ராடார் திறனையும் பூர்த்தி செய்துள்ளதாக குறித்த அறிக்கை மூலம் தெரிகிறது. இதன் ஒரு பிரதிபலிப்பாகவே தான் இரட்டை நோக்கங்களுடன் செவ்வாய் மற்றும் சந்திரன் பயணங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அண்மையில் ஏவியிருந்தது. இந்நிலை, பாகிஸ்தானில் அணுவாயுதங்கள் உள்ளிட்ட இலக்குகளை இந்திய வான்படை கண்டுபிடித்து சரிசெய்ய முடியும் என்று இந்திய வான்படை தலைவர் கூறுகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி; சில கேள்விகள்

2020ஆம் ஆண்டுக்குரிய ஜனாதிபதித் தேர்தலில், மூன்றாவது அணியாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தன்னை களமிறக்கியுள்ளது. ஜே.வி.பி, சில சிவில் அமைப்புகளுடன் சேர்ந்து உருவாக்கியுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’யின் ஜனாதிபதி வேட்பாளராக, அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாயநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அறிவிக்க, ஞாயிற்றுக்கிழமையன்று (18), காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், ஏராளமானோர் பங்குபற்றினர்.

ஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள்

(இலட்சுணனன்)

லங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்தாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ எனப் பெயரிட்டுள்ளது. இச்சூழலில், மக்கள் விடுதலை முன்னணியும் தனது வேட்பாளர் அநுரகுமார எனப் பிரகடனப்படுத்தியுள்ளது.

சிதம்பரத்துக்குத் தடுப்புக் காவல்

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், மோசடி, பணச் சலவையில் பங்கெடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை, தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு, சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கிரீன்லாந்தை விலைபேசல்; நாடுகள் விற்பனைக்கு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
காணிகளும் வீடுகளும் வாங்கி விற்கப்படுவது போல, நாடுகளும் வாங்கி விற்கப்படுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவ்வாறு ஒரு நாட்டையோ, அதன் பகுதியையோ விலை பேசுவதும் விற்கச் சொல்லிக் கேட்பதும், அதற்காகத் தயாரித்திருக்கும் பேரமும் அபத்தமாகத் தெரியுமல்லவா? ஆனால், இன்றைய உலக அரங்கு, அபத்தமும் அவலமும் ஆபத்தும் கலந்த கலவையாய் இருக்கின்றது. இதை மெய்யாக்கும் கதை ஒன்றையே, நாம் இன்று பார்க்கவிருக்கிறோம்.

வரதராஜப்பெருமாள் என் மதிப்புக்குரிய போராளி

(Arun Ambalavanar)
வரதராஜப்பெருமாள் என் மதிப்புக்குரிய போராளி-அரசியல்வாதிகளில் ஒருவர். ஒரு புத்திஜீவி. மிகவும் வறிய குடும்பப்பின்னணியிலிருந்து வந்து சுய படிப்பாலும் சுய முயற்சியாலும் முன்னேறி பல்கலைக்கழக விரிவுரையாளராகி முதல் ஈழத்தமிழரசின் நிறைவேற்று அதிகாரி- முதலமைச்சராக வந்த அவர் கதை ஒரு Fairy Tale ஸ்ரோறி . அவர் ஒரு போராளி இராணுவத்தளபதி அல்ல. அவர்கைகளில் இந்தியப்படைக்காலத்தில் ரத்தம் உண்டான குற்றச்சாட்டுக்களும் இல்லை. தன் பல்கலைக்கழககாலத்தில் சுயமாக ஆங்கிலம் கற்று ஆங்கிலத்தில் வாசித்து ஏட்டுச்சுரைக்காய் மார்க்சியத்தின் குறைபாடுகளை அறிந்தவர். பின் இந்திய வனவாச காலத்தில் ஆங்கிலத்தில் சட்டம் படித்தவர். புலிகள் எல்லா தமிழ் இயக்கங்களையும் “வைபோசாக” கூட்டமைப்புக்குள் கொண்டுவர அதை மறுத்து கொள்கை குன்றாக நின்றவர்.

கோட்டைக்கு செல்ல படகு சேவை

கொழும்பு நகரில் காணப்படும் பாரிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொம்பனிவீதியில் இருந்து கோட்டை வரையில் பேர வாவியில் படகு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை (22) முதல் மூன்று படகுகள் இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

ஓர் அழகிய பதிவு!

லண்டன்வாசியான கஸ்தூரியின் “தாத்தா, இன்னிக்கு ஒரு முக்கியமான இடத்துக்குப் போகணும் நீ கிளம்பு சீக்கிரம்.”

“வேண்டாம் சாமி, காலெல்லாம் வலிக்குது,
நடக்கக் கஷ்டம். வீட்ல இருக்கலாம்.’

“வீல்சேர் எடுத்துட்டு போலாம், நான் தள்ளிட்டு வர்றேன். கார்ல ஒரு மணிநேரம்தான் ஆகும்.”

‘சரி போலாம். இதென்ன இவ்வளவு தூரம்,
நம்மூர்ல இருந்து ஈரோடு போற தூரம் இருக்குமாட்ட இருக்குது?’

“அம்மா சீக்கிரமா வண்டியோட்டிரும் தாத்தா.”

இடம் வந்தவுடன்,

“இதென்ன சாமி இப்படி இருக்குது சமாதிகளாட்டம்!?”

“ஆமா தாத்தா, சமாதிகதான்.
உன்னோட பிரெண்ட் இருக்காரு இங்க வா…”

“என் பிரண்ட் யாரு இங்க இருப்பாங்க”ன்னு சிரித்துக்கொண்டே வந்து,

கண்களில் நீர் துளிர்க்க –
ஜெர்க் ஆகி நின்ற இடம் –

கார்ல் மார்க்ஸும் ஜென்னியும்
நிரந்தரமாகத் துயிலுமிடம்.

செவ்வணக்கம் காம்ரேட்!

ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை செல்வம் அடைக்கலநாதனின் உத்தரவில் நானே கொன்றேன்! ஜேர்மனியிலிருந்து TELO உறுப்பினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் 02.09.1985 அன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலோ அமைப்பினால் கொலை செய்யப்பட்டிருந்தனர். 34 வருடங்களின் பின்னர் தானே இக்கொலைகளை மேற்கொண்டதாக ஜேர்மனியில் வசித்துவரும் மன்மதன் என்பவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

2005, 2010, 2015, 2020

(காரை துர்க்கா)
நாட்டு மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற தீர்வுகள் காணப்படாத பல்வேறு பிரச்சினைகளையும் புறமொதுக்கி விட்டு, ஜனாதிபதித் தேர்தலே இன்று பேசு பொருளாகி விட்டது அல்லது, பேசு பொருளாக்கி விட்டார்கள். நம் நாட்டை ஜனாதிபதித் தேர்தல் காய்ச்சல் பீடித்து உள்ளது. ஆனாலும், எந்தத் தேர்தல்களும் கால ஒழுங்கில் நடத்த வேண்டியவைகளே. ஆகவே, அவை நடக்கட்டும்.