சறோவின் இழப்பு: ஆற்றுப்படுத்த முடியாத துயரம்

(சாகரன்)

1970 இன் பிற்கூற்றில் ஏற்பட்ட நட்பு. நீ எம்மை விட்டுப்பிரியும் வரை இடையறாது தொடர்ந்த நட்பு உறவு. இளைஞனாக தனித்தவனாக ஆரம்பித்த உறவு எனது மனைவியை நான் காதலியாக பெற்றபோது விரிவடைந்த நட்பு. அது என் திருமணத்தின் பின்பும் சறோவின் திருமணத்தின் பின்பும் குடும்ப நட்பாக தொடர்ந்த உறவு. உடன் பிறந்த சகோதரி போல் வளர்ந்த நட்பு.

வட. கிழக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படாது

தமிழத் தேசியக் கூட்டமைப்பு கோரினாலும் வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவத்தை ஒருபோதும் அகற்போவதில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

எங்களை மன்னித்துவிடு சிஸ்டர்!’- பெண் மருத்துவர் மரணத்தால் கொதிக்கும் மக்கள்

‘மனிதன்’ என்று சொல்லவே இழிவாக இருக்கிறது. மனிதம் செத்துவிட்டது எங்களை மன்னித்துவிடு சிஸ்டர்.
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் ஒருவர் கொடூரமாக எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. அவருக்கு நீதி வேண்டி கண்டனக் குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.எங்களை மன்னித்துவிடு சிஸ்டர்!’- பெண் மருத்துவர் மரணத்தால் கொதிக்கும் மக்கள்vபாதுகாப்பான இடத்துக்குச் சென்று விடு’ என்று கூறியுள்ளார். ஆனால், சிறிதுநேரம் கழித்து மீண்டும் பிரியங்காவைத் தொடர்பு கொண்டபோது, அவருடைய போன் `ஸ்விட்ச் ஆஃப்’ ஆகியுள்ளது தெரியவந்திருக்கிறது.

சுவிற்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய பெண்ணை கடத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் : பிரதமர்

சுவிற்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய பெண்ணை கடத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். இதுபோன்ற சம்பவங்கள் இடம்பறுவதற்கு இடமளிக்கமுடியாது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் இதுவரை வாக்குமூலம் அளிக்காமல் இருப்பதால் விசாரணைகளை தொடரமுடியாமல் இருக்கின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.

தமிழகத்தின் பிரபாகரன் சீமான்…???

சீமானிடம் ஆயுதம் இருந்திருந்தால் இங்கும் இலங்கையில் நடந்த அதே சகோதர அழித்தொழிப்பு முதலில் நடத்தப்பட்டு அன்பான சர்வாதிகாரம் என்றால் என்ன என்பது தெரிந்திருக்கும்.

வவுனியாவில் 510 பேருக்கு டெங்கு காய்ச்சல்

வவுனியாவில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரையான காலப்பகுதிவரையும் 510 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 13.09.2019 அன்றிலிருந்தே உள்ளூர் தொற்றுக்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் பருவ மழையினால் மேலும் டெங்கு நுளம்புகள் பெருக்கெடுக்கும் அபாய நிலை காணப்படுகின்றது.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை

(புளும்பேர்க்)

(தமிழில்- ரஜீபன்)

இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கு கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் விரும்புகின்றது. தேசிய நலன்களை கருத்தில்கொண்டே புதிய அரசாங்கம் உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கு ஆர்வமாகவுள்ளது.

தூதரக பணியாளருக்கு கொழும்பில் நடந்தது என்ன? சுவிஸ் தூதரகம் உத்தியோகபூர்வ அறிக்கை

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் தனது பணியாளர் கடத்தப்பட்டமை குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2019 நவம்பர் 25 ம் திகதி தூதரகத்தின் இலங்கை பணியாளர் தொடர்பில் பாரதூரமான சம்பவமொன்று இடம்பெற்றதாக தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தூதரக பணியாளர் பலவந்தமாக கொழும்பு வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டார், காரில் ஏறுமாறு மிரட்டப்பட்டார்,அதன் பின்னர் இனந்தெரியாத நபர்களால் கடுமையான அச்சுறுத்தப்பட்டதுடன் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு மிரட்டப்பட்டார் என தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பல பிழையான தகவல்கள் பரவுகின்றன,என தெரிவித்துள்ள சுவிஸ் தூதரகம் பின்வரும் தெளிவுபடுத்தல்களை வெளியிட விரும்புவதாக என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுவிஸ் தூதரகம் உடனடியாக உத்தியோகபூர்வமாக முறைப்பாட்டை தாக்கல் செய்ததுடன் பொலிஸ் விசாரணைக்கு ஆதரவாகவும்,விசாரணையை ஆரம்பிப்பதற்காகவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மோசமடைந்து வரும் உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டவர் தற்போது வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை எனவும் இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தை சேர்ந்த அதிகாரியொருவரை சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் மறுத்துவிட்டது என குற்றச்சாட்டுகள் வெளியாகின்றன, அவ்வாறான வேண்டுகோள் எவையும் விடுக்கப்படவில்லை எனவும் சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

‘இலங்கைக்கு நல்லிணக்க நடைமுறை தேவை’

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று, இலங்கையில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அத்தோடு, நாட்டின் உளவுத்துறையை மேலும் வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடன் வழங்கத் தயார் எனவும், பிரதமர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்ட உலகம்

லெபனான் தொடக்கம் ஸ்பெயின் வரை ஹொங்கொங் தொடக்கம் பொலிவியா வரை உலகில் எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டங்கள். நோக்கங்கள் வேறு, கோசங்கள் வேறு, போராட்ட உத்திகள் வேறு என்றாலும் எல்லாவற்றிலும் பொதுவான அம்சங்கள் இல்லாமல் இல்லை.