சோனியா, மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா காந்தி சத்தியாகிரப் போராட்டம்

இந்தியாவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ராஜ்கட் பகுதியில் சோனியா, மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா காந்தி ’ஒற்றுமைக்கான சத்தியாகிரம்’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி ராஜ்கட் பகுதியில் ’ஒற்றுமைக்கான சத்தியாகிரம்’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாள்வெட்டு ரௌடிகளை குறிவைத்து அதிரடி வேட்டை முப்படையினரும் இணைந்து யாழில் நடவடிக்கை!

கௌரவ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய யாழ்ப்பாணத்தில் இயக்கும் ரௌடிக்குழுக்களை இலக்கு வைத்து அதிரடி வேட்டையை இன்று பொலிசார், மற்றும் முப்படையினரும் கூட்டாக ஆரம்பித்துள்ளனர்.

‘கடலுணவு உற்பத்தியின் கேந்திர நிலையமாக தீவகப் பகுதி மாறும்’

தீவகப் பகுதியில், கடல் உணவு உற்பத்தி சார் தொழிற்றுறைகளைக் கட்டியெழுப்பி, அதனூடாக கடலுணவு உற்பத்தியின் கேந்திர நிலையமாக தீவகப் பகுதி மாற்றியமைக்கப்படுமென, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில், நீரியல் வள மூலங்கள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

’அருளர்’ நினைவேந்தல் நிகழ்வு

ஈரோஸ் அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவராகவும், தமிழர் அரசியல் சார்பான ஆய்வு நூல்கள் பலவற்றின் ஆசிரியராகவும் விளங்கி அண்மையில் காலமான ‘அருளர்’ எனப் பரவலாக அறியப்படும் அருட்பிரகாசத்தின் நினைவேந்தல் நிகழ்வு, யாழ். முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், நல்லூரிலுள்ள யூரோவில் மண்டபத்தில், நேற்று (21) நடைபெற்றது.

இந்திய குடியுரிமைச் சட்டத் திருத்தம் என்ன கூறுகிறது? எதிர்ப்பு ஏன்? – முழுமையான அலசல்

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது. அதன்படி பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2-ம் முறையாகப் பதவியேற்ற பிறகு தற்போது, குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அகதிகளாக எத்தனை வருடம்தான் வாழ்வது? எங்கள் குழந்தைகள் அகதிகளாக வாழக் கூடாது: இலங்கைத் தமிழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை

அகதிகளாக நாங்கள் எத்தனை வருடம் வாழ்வது… அகதி என்ற வேதனையை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எங்கள் குழந்தைகள் நிச்சயம் அகதிகளாக வாழக் கூடாது. இதிலிருந்து நிச்சயம் எங்களுக்கு இந்திய அரசு விடுதலை தரும் என்று நம்புகிறோம்

சகோதர மொழி அறிவின்மை வெட்கத்துகுரியது

நாட்டிலுள்ள சகோதர மொழிகளை அறியாதிருப்பது வெட்கப்பட வேண்டிய காரணம் எனத் தெரிக்கும் கல்வி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும, கல்வித்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் (புதிய)குடியுரிமைச் சட்டம் இலங்கை தமிழருக்கு நன்மைகளை ஏற்படுத்துமா…?

(சாகரன்)

மோடி அரசின் மத்திய உள்துறை அமைச்சர் அமிர்த்ஷா இனால் கொண்டுவரப்பட்ட இந்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய நாடு தழுவிய ரீதியில் எதிர்பலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. குடியுரிமை சட்டத்தில் பொதுமையாக இஸ்லாமியரை தள்ளி வைத்தல், இலங்கை தமிழருக்கு குடியுரிமை வழங்குவதை தவிர்த்தல, மியான்மார் ரோங்கிய முஸ்லீம்களை அகதிகளாகவோ அல்லது குடியுரிமை வழங்கலுக்குள் தவிர்தல் என்ற போக்குகள் உள்ளாகியிருப்பது எதிர்பலைகளுக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளன.

“இப்போதாவது எழுந்து நில்லுங்கள்” : அருந்ததி ராய் அறிக்கை !

“நமது அரசியலமைப்பின் முதுகெலும்பை உடைத்து, நம் காலடியில் ஒரு குழியை வெட்டுவதற்கு இந்த அரசாங்கம் தயாராக உள்ளது” – “இப்போதாவது எழுந்து நில்லுங்கள்”