க.அன்பழகன்: ஒரு யுகத்தின் இறுதி அத்தியாயம்!

(செல்வ புவியரசன்)

அரசியலின் சில விழுமியங்களைக் கடைசிவரையிலும் கட்டிக்காத்துவந்த ஒரு பெரும் வரலாற்றுக்குச் சாட்சியமாக இருந்தவர் க.அன்பழகன். ஒரு கட்சியின் நெடுநாள் பொதுச்செயலாளர் என்பதைத் தாண்டி, மக்கள் நல அரசின் முக்கியப் பொறுப்புகளான மக்கள் நல்வாழ்வு, கல்வி, நிதி ஆகிய துறைகளில் அமைச்சராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்ட அனுபவங்களின் திரட்சியாக இருந்தவர். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் என்பதைத் தாண்டி, ஜனநாயக அரசியலில் அமைச்சரவையிலும் எதிர்க்கட்சி வரிசையிலும் அவர் ஆற்றியிருக்கும் பணிகளையும் சேர்த்து நினைவுகூர்வதே அவருக்கான அஞ்சலியாக இருக்க முடியும்.

அச்சமூட்டும் கரோனா: இத்தாலியில் 230 பேர் பலி;6 ஆயிரம் பேர் பாதிப்பு: தியேட்டர், அருங்காட்சியகம் நாடுமுழுவதும் மூடல்

உலகத்தை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் அதிகமான உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இதுவரை இத்தாலியில் 233 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர், 5,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா அச்சம்: இந்தியா உள்பட 13 நாடுகளிலிருந்து வரும் மக்கள் நுழையத் தடை: கத்தார் அரசு திடீர் உத்தரவு

உலகிற்குப் பெரும் அச்சுறுத்தல் விடுத்து வரும் கரோனா வைரஸ் பரவும் வேகம் தீவிரமடைந்திருப்பதை அடுத்து, இந்தியா உள்பட 13 நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு தற்காலிகமாகத் தடை விதித்து கத்தார் நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

‘துரோகம் செய்தவர்களையே வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்’ – கருணா

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரையில் எதுவிதப் பயனுமில்லாத கட்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களால் பார்க்கப்படுவதாகவும் பல தேசத் துரோகங்களைச் செய்தவர்களையெல்லாம் தங்கள் கட்சியில் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாகவும், முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) குற்றஞ்சாட்டினார்.

கிழக்கில் கொரோனா தடுப்பு முகாம்: சிறுபான்மையினர் சந்தேகம்

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை, கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதானது, சிறுபான்மை சமூகத்தைப் பழிவாங்கும் நோக்கில் செய்யப்படுகின்ற நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

அருவி பெண்கள் அமைப்பால் மகளிர் தின நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் அமைப்பால் மகளிர் தின நிகழ்வு, கிரான் பிரதேசத்தில் இன்று (09) ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்படி அமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான திருமதி மயூரி ஜனகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு சுயதொழில் உபகரணங்கள், தையல் இயந்திரம், வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

பழங்குடி தமிழ் மக்கள் காப்பாற்றபடுவார்களா?

(மு.தமிழ்ச்செல்வன்)

எங்களுடைய கண்ணுக்கு முன்னே நாங்கள் பயிர் செய்த நிலம் பறிக்கப்பட்டுள்ளது. எங்களது குடியிருப்பு காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அநாதைகளாக வாழ்கின்றோம். என அதிருப்திகளை அடுக்கிக்கொண்டே சென்றார் நடராஜா கனகரட்னம் ஐயா.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் காலமானார்

ஆழ்ந்த இரங்கல்கள்

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று (மார்ச் 7) காலமானார். அவருக்கு வயது 98.

வடக்கில் தலைகாட்டும் மதவாதம்

(கே. சஞ்சயன்)
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ் அரசியல் பரப்பும் சூடுபிடித்திருக்கிறது.

’100 நாள்களில் திருப்தி இல்லை’ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

ஜனாதிபதியாகப் பதவியேற்று நூறு நாள்களைக் கடந்துள்ளபோதிலும், தன்னுடைய தகுதிக்கேற்ற விதத்தில் நாட்டு மக்களுக்கு நூறு சதவீதம் பணியாற்றியதாகத் தன்னால் திருப்திகொள்ள முடியவில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.