சமூக இடைவெளியை பேணும் பொருட்டு சந்தை இடமாற்றம்

ஊரடங்கு சட்டம் 12 நாள்களின் பின்னர் நேற்று (28) காலை தளர்த்தப்பட்ட நிலையில், அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில், மக்கள் சமூக இடைவெளியை பேணி பொருள்கொள்வனவில் ஈடுபட்டதை காண முடிந்தது.

தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு யாழில் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் அராலிதுறையில் உள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதியிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

என்னத்த சொல்றது…

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களே. உண்மையாக நீங்கள் யார்.?

ஒவ்வொரு நாளிலும் பத்திரிகை பேட்டியில் பேசுவது கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு நாள் சொன்னீர்கள், கவலை வேண்டாம்.
கவனம் போதும் என்று.

‘கொரோனாவும் முதலாளித்துவமும்’- மதுரையில் இருந்தபடி புத்தகம் எழுதும் தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியனுக்கும், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் இடையே ஒரு பிணைப்பு உண்டு. 1991-ல் ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காக நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், இறந்தோர் பட்டியலில் தவறுதலாகக் குறிப்பிடப்பட்ட தா.பாண்டியன், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுதான் உயிர் பிழைத்தார். சமீபத்தில் உடல் நலம் குன்றியபோதும் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்ற அவர், வாரத்தில் மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்து கொள்வதும்கூட அங்கேதான்.

வூஹானில் கடைசி நோயாளியும் குணமடைந்தார்

முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் நகரில், சிகிச்சையில் இருந்த கடைசி நோயாளியும் குணமடைந்ததாக சீனாவின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தோருக்கு பரிசோதனை

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தோருக்கான கொரோனா பரிசோதனையானது யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகின்றன.

கோப்பாயில் பொலிஸார் குவிப்பு

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இரண்டு விடுதிகள் கோப்பாய் பிரதேசத்தில் கடமையாற்றி தற்போது விடுமுறையில் உள்ள இராணுவ வீரர்களை இருபத்தொரு நாள்கள் தனிமைப்படுத்துவதற்காக, நேற்று முன்தினம் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுருந்த நிலையில், நேற்றைய தினம் அந்த பகுதியில் பொது மக்களின் எதிர்ப்பு ஏதாவது ஏற்படலாம் என்ற ரீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு, பொலிஸார் ரோந்து நடவடிக்கையும் பலப்படுத்தப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது. எனினும் அந்த இடத்தில் எந்தவொரு போராட்டமும் பொதுமக்களால் முன்னெடுக்கப்படவில்லை.

விவசாயிகளுக்காக அரசு செய்ய வேண்டியது என்ன?

ஊரடங்கால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது விளைபொருட்களைத் தடையின்றி விற்கவும், விளைபொருட்களுக்குத் தகுந்த விலை கிடைக்கவும் மா.சா.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், அரசுக்குச் சில பரிந்துரைகளை முன்வைக்கிறது. இந்தப் பரிந்துரைகள் திண்டுக்கல், விழுப்புரம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்ட விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலானவை.

ஜிம்பாப்வேயில் இருமுனைத் தாக்குதல்

ஜிம்பாப்வே இரண்டு முனைகளில் போராடிக்கொண்டிருக்கிறது. ஆம்! அங்கே மலேரியா பெருந்தொற்றும் ஏற்பட்டிருக்கிறது. 1.35 லட்சம் பேருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது. வெப்பமும் ஈரப்பதமும் கொண்ட பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில்தான் ஜிம்பாப்வேயில் மலேரியா போன்ற தொற்றுக்கள் ஏற்படும். ஏற்கெனவே, வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் அந்த நாட்டில் கடந்த இருபதாண்டுகளாக மருத்துவக் கட்டமைப்பும் சீர்குலைந்துபோயிருக்கிறது. இந்த நிலையில் கரோனா, மலேரியா என்று இரண்டு பக்கத் தாக்குதல் அங்கு ஏற்பட்டிருக்கிறது. மலேரியா மட்டுமல்ல; எய்ட்ஸ், காசநோய் ஆகியவையும் அங்கே அதிகம் பேரைக் கொல்லும் நோய்கள். செய்வதறியாது தவிக்கிறது ஜிம்பாப்வே.

ஜோதிகாவின் அண்மைய கருத்து…

(சாவித்திரி கண்ணன்)

புதுசா நான் சொல்றதுக்கு ஒன்னுமில்லை,ஜோதிகா விவகாரத்தில்!
அவர் பேசியது நிஜமான சமூக அக்கறை சார்ந்து என்பதை நிருபிக்க எந்த மெனக்கிடலும் அவசியமில்லை!