சஹ்ரானின் முதலாவது இலக்கு தப்பியது

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் ஆவார். அவருடைய முதலாவது திட்டம் தவறிவிட்டது என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிவிக்கையில் மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டம் நான்கு வருட நிறைவை எட்டியது

வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறையலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியது.

நாட்டை வந்தடைந்தார் இம்ரான் கான்

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்றும் சில மணிநேரத்துக்குள் இலங்கையை வந்தடையவுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது அரச தலைவர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவார்.

இலங்கை: கொரனா நிலவரம்

கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 732 பேர் இன்று(23) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 75,842 ஆக அதிகரித்துள்ளது.

இந்நாள் மேயரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் முன்னாள் மேயர்

அரசியல் நோக்கம் கொண்ட ஆதாரமற்று குற்றச்சாட்டுகளை, யாழ்ப்பாண மாநகர சபை மேயர் சாட்டுகிறாரென, முன்னாள் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில், யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு இணங்கியதன்

ஊடகவியலாளர் ரிச்சார்ட் டீ சொய்சா

(Ruban Mariarajan)

ஊடகவியலாளர் ரிச்சார்ட் டீ சொய்சா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தினம் 18 பெப்ரவரி 1990. ஜனாதிபதி பிரேமதாச ஆட்சியில் இச்சம்பவம் இடம்பெற்றது.தமிழரான தாயார் கொழும்பில் பிரபல மருத்துவர் மனோராணி சரவணமுத்து.தந்தையார் பெரும்பான்மை இனத்தவர். ராஜகிரி-வெலிக்கடவத்த இல்லத்தில் இரவு ஆயுதங்களுடன் வந்த சிலர்,எந்தவித கேள்வியுமின்றி பிடித்து இழுத்துச்சென்றனர்.வெளிநாட்டு ஊடகம் ஒன்றின் இலங்கை ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டது இதுவே முதல் தடவை.

ஜெனீவாவுக்குப் பிறகு, எங்கே கையேந்துவது?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கடந்த பத்தாண்டுகளாக, ஈழத்தமிழ் அரசியலின் மையப்புள்ளிகளில் ஒன்றாக ஜெனீவா இருந்துவருகின்றது. ஒருபுறம் இலங்கையில் இருந்து பிரமுகர்கள் அங்கு காவடியெடுக்க, ‘புலம்பெயர் புத்திமான்கள்’ நடைபவனி, பேரணி, ஈருளிப் பயணம் என ஐரோப்பியத் தலைநகரங்களில் இருந்து, ஜெனீவாவை நிறைத்தார்கள்.

இலங்கை: கொரனா நிலவரம்

நாட்டில் மேலும் 254 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 299ஆக அதிகரித்துள்ளது.

சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற 15 பெண்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம், 15 தற்கொலை குண்டுதாரிகiளை பயிற்றுவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மனிதர்கள்தான் கடவுள்

(R Ram Doss)

வோளாங்கண்ணி போகும் வழியில்,
மதிய உணவுக்காக பஸ்ஸை திருவாரூரில் ஹோட்டலில் நிறுத்திய
போது தான்,
அவரை கவனித்தேன்,
அந்த பெரியவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும்…
கையில் சிக்னல் ஸ்டிக்கர் லைட்டும்,
வாயில் விசிலுமாய்,
ஹைவேஸில் போகின்ற வண்டிகளை எல்லாம் சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தார்…