பாலம் கல்யாணசுந்தரம்

பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் ?

35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார். பாலம் கல்யாண சுந்தரம் ஐயா.

அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை முன்னெடுக்க தீர்மானம்

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கை முன்னெடுத்து செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் ஜி. புஞ்சிஹேவா ஆகியோர் இன்றி தொடர்ந்தும் வழங்கினை முன்னெடுத்து செல்லவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று (29) வழங்கியுள்ளது. வழக்கின் மேலதிக விசாரணை அடுத்த மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்: பொறியில் சிக்கிய அரசாங்கம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள், நாட்டு மக்கள் மனதில் கட்டி எழுப்பிய, “எமது பதவிக் காலத்தில், மாகாண சபை முறைமையை இரத்துச் செய்வோம்” என்ற அபிப்பிராயம், முற்றாக ஒழிந்துவிட்டது. மாகாண சபைகளை இரத்துச் செய்வதைப் பற்றி, அரசாங்கத்தின் தலைவர்களில் எவரும் இப்போது பேசுவதில்லை. மாறாக, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதைப் பற்றியே, இப்போது கலந்தாலோசித்து வருகிறார்கள்.

இலங்கை: கொரனா செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகள் பல, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் மூடப்பட்டன. இன்றுக்காலை 7 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன என கொரோனா வைரஸ் தொற்று வியாபிப்பதைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிராதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருகின்றது.   இந் நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா” எதிர் வரும் நாட்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால்  பல  இடங்களை முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.   எனவே அத்தியாவசியப் பொருட்களுடன் மக்கள் தயாராக இருப்பது நல்லது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இத்தியடி சந்தி

எமது ஊரில் நிறைய வீதிகளின் சந்திப்பு காணப்பட்டாலும் முக்கிய பிரபல்யமான சந்தி இத்தியடி சந்தியாகும்! மின்சார இணைப்பு எம் ஊருக்கு ஏற்படுத்து முன்பு இருந்த நிலையினை இங்கு முதலில் பார்க்கலாம். நடுவே ஒரு இத்திமரம், தெற்கே மலைவேம்பு, மேற்கே நிழல் வாகைமரமும்,வடபுறம் நிழல்வாகையும் இத்திமரமும் ஓங்கி படர்ந்து வளர்ந்து நல்லதொரு அருமையான அழகான சூழலினை அமைதியானவகையாக தந்து கொண்டிருந்தன.

மணலூர் மணியம்மாள்

திராவிட இயக்கம் பார்ப்பனர்களின் சூழ்ச்சி குறித்து தமிழகத்தில் வன்மையான பரப்புரைகளை மேற்கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் தஞ்சைப்பகுதியில் ஒரு பார்ப்பனப் பெண்மணி தனது உடைமைகளையெல்லாம் தாழ்த்தப் பட்டோருக்கு பகிர்ந்தளித்து சாதித் தீண்டாமைக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தினார். அவர்தான் மணலூர் மணியம்மாள்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிக அனுமதி: மீண்டும் திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி: ஒக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?

(என்.கே. அஷோக்பரன்)

தற்போதைய நிலையில், இலங்கையில் எந்தவொரு மாகாண சபையும் இயங்கும் நிலையில் இல்லை. 2019 ஒக்டோபர் எட்டாம் திகதி, ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததோடு, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளும் இயங்கா நிலையை அடைந்தன.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஆபத்தானவை

ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஆபத்தானவை; அவதானமாக இருங்கள்!

கண்முன்னே நின்று, சண்டைப்போடுபவர்களை விடவும் பின்னால் நின்று முதுகில் குத்துவோர் தொடர்பில் கவனமாக இருக்கவேண்டுமென்பர். ஆனால், கண்களுக்கே தெரியாமல், உலகையே ஆட்டிப் படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸைக் கண்டுகொள்ளாமல் அசட்டையாக இருந்தமையால், வீட்டுக்குள்ளே முடங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.