’வடக்கு, கிழக்கில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாகும்’

மீன்பிடித் துறை அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், அடுத்த ஐந்து வருடங்களில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்குத் தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

’மினுவாங்கொடை கொத்தணி உக்ரேன் பிரஜையிடம் ஆரம்பம்’

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உக்ரேனிலிருந்து வருகை தந்த விமான ஊழியரால் ஏற்பட்டது என்று நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர், மருத்துவர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நாடாளுமன்றில் இன்று (07) இதனைக் கூறியுள்ளார்.

“நக்குண்டார் நாவிழந்தார்” அரசியலுக்குள் சிக்காது, சாணக்கியன் ராகுல் ராஜபுத்திரன் இராசமாணிக்கமாக நிலைத்திருப்பாரா?

தமிழரசுக் கட்சியின் தூண்களில் ஒருவரான மூத்ததம்பி இராசமாணிக்கத்தின் மகன் மருத்துவர் இராசமாணிக்கம் இராஜபுத்திரன் இலங்கை சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர். இவரின் மகன் ராஜபுத்திரன் சாணக்கியனும் ஆரம்பத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர்.
ஆனால் அவர் 2020 தேர்தலில் சாணக்கியன் ராகுல் ராஜபுத்திரன் இராசமாணிக்கமாக பாட்டனாரின் அரசியலைப் பற்றிக்கொண்டார்.

வறுமையை முற்றாகவே ஒழித்துக் கட்டியது சீனா

ஐ. நாவின் 2030 நிகழ்ச்சித் திட்ட இலக்கை 10 வருடம் முன்கூட்டியே அடைந்ததன் மூலம் பெரும் சாதனை. நாட்டின் வறுமைப் பட்டியலில் இருந்து எஞ்சியிருந்த சகல மாவட்டங்களையும் நீக்கி சீனா சாதனையைப் படைத்திருக்கிறது. வறுமையில் பாதிக்கப்பட்டிருந்த கடைசி ஒன்பது மாகாணங்களுமே தென்மேற்கு சீனாவின் குயிஷூ மாகாணத்தைச் சேர்ந்தவை. அவை முற்றுமுழுதான வறுமையை ஒழித்திருப்பதாக மாகாண அரசாங்கம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. இதன் அர்த்தம் சீனாவில் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 832 வறுமைப்பட்ட மாவட்டங்களுமே வறுமையை ஒழித்து விட்டன என்பதாகும்.

வேலையைச் சரியாகச் செய்த சாணக்கியன்!

(சீவகன் பூபாலரட்ணம் — அரங்கம் பத்திரிகையிலிருந்து )

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் மற்றுமொரு உரை பல ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சுற்றுலாப் பயணத்துறை அமைச்சு, கப்பல் மற்றும் துறைமுகங்கள் அமைச்சு மற்றும் விமானப்போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலயங்கள் ஆகியவற்றுக்கான இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் அவர் ஆற்றிய உரையே இங்கு வரவேற்கப்பட்டுள்ளது. இந்த உரை சுமார் 29 நிமிடங்கள் வரை நீட்சியானது.

நெல்சன் மண்டேலா என்ற தலைவன்

(சாகரன்)

கறுப்பின மக்களை பாகுபடுத்திப் பார்க்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின் அடையாளம் என்றால் அது நெல்சன் மண்டேலாவை குறிக்கும். நூறு வயதை நெருங்கியும் தனது விடாப்பிடியான போராட்ட வாழ்வை தொடர்ந்தவர். உலகில் அதிகம் ஒடுக்கப்படும், பாகுபடுத்திப் பார்க்கப்படும் ஒரு இன அடையாளத்தின் குரலாக ஒலித்துக் கொண்டே இருப்பவர்.தனது இருப்பையும், தனது அடையாளத்தையும் முன்னிறுத்தாது தான் சார்ந்த சமூகத்தின் ஒடுக்கு முறையை முன்னிறுத்தி ஆயுள் தண்டனைக்கு உள்ளாகி கால் நூற்றாண்டிற்கு மேல் சிறை வாழ்விற்குள் உள்ளாக்கப்பட்டவர்.

குளங்களை காத்து புனரமைக்காதுவிடின் யாழ் நீருள் மூழ்கும்”

இரண்டு ஆண்டுக்குமுன்னரே எச்சரித்தார் எந்திரி ராமதாசன்
குடாநாட்டில் எதிர்கொள்ளப்படும் நீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள குளங்கள் அனைத்தையும் பராமரிக்கவேண்டிய தேவையேற்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.ஆனால் அவற்றில் 300 குளங்கள் வரை இருந்த இடமே தெரியாது போயிருப்பதாக சிரேஸ்ட பொறியியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான மா.இராமதாசன் தெரிவித்துள்ளார்.

துன்பத்தில் உரியும் துரோகிகளிடம் கவனமாய் இருக்கவும்

ஒரு சாண் வயிற்றை நிரப்பிக்கொள்வதற்காக, கையேந்தி நிற்போரை ஏறெடுத்துப் பார்க்கவோ, வீதியோரங்களில் வீழ்ந்து கிடப்போரைக் கைகொடுத்துத் தூக்கிவிடவோ முடியாத நிலைமையொன்றுக்குள், மனங்களை இறுகக் கட்டிப்போட்டு வைத்துவிட்டது இந்தக் கொரோனா வைரஸ்.

புரெவிச் சூறாவளி தாக்கம்; 72 ஆயிரத்து 410 பேர் பாதிப்பு

புரெவி சூறாவளியின் தாக்கத்தையடுத்து,அசாதாரண காலநிலை காரணமாக, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 21 ஆயிரத்து 884 குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் மூடப்பட்டது

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் நாளை (7) முதல் காலவரையறையின்றி மூடப்படவுள்ளதாக, மஸ்கெலியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டி. சந்திரராஜன் தெரிவித்தார்.