1000 ரூபாய் சம்பளம்: மார்ச் 1 முதல் வழங்கப்படும்

தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு மார்ச் ​1 முதல் பெற்றுக்கொடுக்கப்படுமென அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அண்மையில் மேற்படி சம்பள அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கத்தால் கைசாத்திடப்படவிருந்த முத்தரப்பு ஒப்பந்தம் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

திருகோணமலை மாவட்ட தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், நகராட்சி மன்ற உறுப்பினருமான சிவகுமார் (சத்தியன்)அவருடைய தந்தை இன்று காலமானார். 27/02/2020 அன்னாரின் பூதவுடல் தில்லை நகர் இல்லத்தில் இருந்து மாலை 4.00 மணிக்கு இந்து மயானத்திற்கு கொண்டு செல்லப்படும்.

துரதிர்ஷ்டவசமானது.. இருதயம் நொறுங்குகிறது: டெல்லி வன்முறை குறித்து சேவாக், யுவராஜ் சிங்

டெல்லியில் நடைபெற்று வரும் சிஏஏ என்கிற குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாற இதுவரை பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

நாளை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை

நாட்டின் சில பிரதேசங்களில் நாளை வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென, வானிலை மத்திய நிலையம் ​தெரிவித்துள்ளது. விசேடமாக மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி, மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுசரணையில் இருந்து விலகியது இலங்கை; அறிவித்தார் தினேஷ்


2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அறிவித்துள்ளது. ஜெனிவாவில் இடம்பெறும் கூட்டத்தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இதனை உத்தியோகப்பூர்வமாக இன்று (26) அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

COVID-19-ஆல் புதிதாகத் தொற்றப்படுவோரின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி

சீனாவில் COVID-19-ஆல் புதிதாகத் தொற்றப்படுவோரின் எண்ணிக்கை இன்று சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய சுகாதார ஆணைக்குழுவின் தகவல்படி புதிதாக COVID-19-ஆல் தொற்றுண்டதாக உறுதிப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையானது நேற்றைய 1,749 பேர் என்ற நிலையிலிருந்து 394ஆக இன்று சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நூல் அறிமுகம்: “ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி”

காலஞ்சென்ற என்.கே. ரகுநாதன் எழுதிய தன்வரலாறு. சமீப காலத்தில் வந்து கொண்டிருக்கும் “ஈழத்து தலித்திய” நூல்களில் குறிப்பிடத் தக்க ஒன்று. “சாதிய அடக்குமுறை இப்போது இல்லைத்தானே…” என்ற சாட்டுடன் இந்த நூலை வாசிக்காமல் கடந்து சென்று விட முடியாது. சிறு வயதில் ஒருவர் அனுபவித்த சாதிய அடக்குமுறைக் காயத்தின் தழும்புகள் வளர்ந்து பெரியவர் ஆனாலும் இருந்து கொண்டேயிருக்கும்.

கனடாவில் மண் மீட்பு போராட்டம்

(சாகரன்)




அமெரிக்காவை கண்டு பிடித்தார் கொலம்பஸ் என்று நாம் அறிந்தவரால் இவர்களின் வாழ்நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது முதலில். பின்பு வட அமெரிக்காவின் பல பகுதிகளை ஓருங்கிணைத்து உருவான கனடாவில் ரெசிடென்சல் ஸ்கூல்(Residential School என்று ஆரம்பித்து செவ்விந்தியக் குழந்தைகளை அவர்களது பெற்றோரிடம் இருந்து பிரித்தனர்.

கொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஒரு நோய்த்தொற்று, உலகையே திகிலிலும் திக்குமுக்காட்டத்திலும் விட்டிருக்கிறது. அதன் பெயரைக் கேட்டாலே, எல்லோரும் பதறுகிறார்கள். சீனர்களைக் கண்டால், தலைதெறிக்க ஓடுகிறார்கள். பரவுமா, பரவாதா என்ற வினாவுக்கு, பதிலளிக்க இயலாமல், அரசாங்கங்கள் திணறுகின்றன. உலகத்தின் பொருளாதாரமே ஸ்தம்பித்து நிற்கிறது.

‘ஆடு’ நனைகிறதென்று ‘அமெரிக்கா’ அழுததாம்…

‘கேட்கிறவன் கேனயனாய் இருந்தால்….’ என்று தொடங்குகிற பழமொழி ஒன்றுண்டு. சில நாள்களாகவே அது, என் மனதில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை இராணுவத் தளபதிக்கு, அமெரிக்கா பயணத் தடை விதித்திருக்கிறது. இது, இரண்டு வகையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.