‘பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ‘Megxit’

(Rajes Bala)
பிரித்தானிய அரசகுடும்பத்தினர் இன்று வெளியிட்ட அறிக்கை,பிரித்தானியா மகாராணியின் மூத்த மகனின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரியும் அவரின் மனைவியான மேகனும் இன்றிலிருந்து பிரித்தானிய அரசகுடும்பத்துக் கடமைகளிலிருந்து வெளியேறிச் சாதாரண பிரஜைகளாக வாழ்க்கையை நடத்துவதை மகாராணியார் அங்கிகரிப்பதாக வெளியிடப்பட்டிருக்கிறது.

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடான் நிலை?

தோட்டத் தொழிலாளியின் தினசரி சம்பளத்தை 1000 ஆக உயர்த்த வேண்டாம் என கோரிக்கை. தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை 1000 ரூபாயாக உயர்த்த வேண்டாம் என இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பு , சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’

(காரை துர்க்கா)
யாழ்ப்பாணம், திருநெல்வேலி வழியாக, கடந்த மாதம் சென்று கொண்டிருந்த போது, திடீரென மழை கொட்டியது. அவ்வேளையில், வீதி ஓரமாக இருந்த கடையில் தரித்து நிற்கும் எண்ணத்துடன் ஒதுங்கும் போது, அவ்வாறு வேறு சிலரும் ஒதுங்கினார்கள். அவர்களில், நடுத்தர வயதுடைய ஒரு தம்பதியும் அடங்குவர். மழையின் இரைச்சலுக்கு மத்தியிலும் அருகில் நின்ற அத்தம்பதிகளின் உரையாடல் காதுகளில் விழுந்தது…

மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபாய் சம்பளம்; ஜனாதிபதி அதிரடி

மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த சம்பளம் ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இதனுடன் இணைந்ததாக உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தோட்டத் துறையின் அனைத்து பகுதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஐ. அமெரிக்கா – ஈரானிய முறுகல்களின் வெற்றியாளர் யார்?

(Shanmugan Murugavel)

சமகால விடயங்களில் தற்போது அனைவரினது முணுமுணுப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஈரானிடையேயான யுத்தத்தின் எதிர்பார்ப்பே காணப்படுகிறது அதன் விளைவே யாழ்ப்பாணத்தில் பெற்றோல் நிலையங்களில் நேற்று நிலவிய நீண்ட வரிசை முதல் மசகெண்ணை, தங்கம் விலை அதிகரிப்பு, பங்குச்சந்தை வீழ்ச்சி வரை நீள்கிறது.

கிழக்கின் நிலை உணர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப்

(இலட்சுமணன்)

இன்றைய சமகால அரசியல் சூழ்நிலையில் தமிழர் தேசிய அரசியல் போக்குகளும் அதுதொடர்பான கருத்தாடல்களும் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. கட்சிகளுக்கு இடையில் நிலவும் அதிகாரப் போட்டிகளும் தனிப்பட்ட குத்து வெட்டுகளும் காழ்ப்புணர்வுகளும் தமிழ்த் தேசிய அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது, இன்று தமிழ் மக்களுக்குள் எழுந்துள்ள அச்ச நிலையாக உள்ளது.

வடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை

தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி களப்புகளில் சுமார் 40 இலட்சம் மீன் குஞ்சுகளையும் 40 இலட்சம் இறால் குஞ்சுகளையும் இடுவதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2020இல் வட மாகணத்திலிருந்து 2,000 பொலிஸார் ஆட்சேர்ப்பு

வட மாகாணத்திலிருந்து 2,000 பேர் பொலிஸ் உத்தியோகத்தர்களாக இணைக்கப்படவுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கமைய அரச சேவையை மீள்கட்டமைத்தல் திட்டத்தின் கீழ், குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஈரான் தலைநகருக்கு அருகில் உக்ரைன் விமானம் விழுந்து 176 பேர் உயிரிழப்பு

ஈரான் தலைநகர் டெஹ்ரானின் இமாம் கொமைனி சர்வதேச விமானநிலையத்திற்கு அருகில் 176 பேருடன் புறப்பட்ட உக்ரைன் ஏர்லன்ஸ் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளது. ஈரானியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்திருப்பதாக ஈரான் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

180 பேருடன் சென்ற உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது

ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், 180 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையம் அருகே கீழே விழுந்து நொறுங்கியதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.