தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு கோருவது ஒரு பிழையான செயற்பாடு எனத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், “தேர்தலைப் பகிஸ்கரிக்கும் முடிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வராது” என்றார். ஊடகங்களுக்கு நேற்று (16) கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
Author: ஆசிரியர்
பலாலியில் இந்திய விமானம் தரையிறங்கியது
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு, இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவுடன் எயார் இந்திய அலைன்ஸ் விமானம் இன்று (15) வருகை தந்தது.
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு பணிகள் நிறைவு பெற்று நாளை மறுதினம் (17) திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிலையில், விமான நிலையப் பணிகளை ஆராயும் பொருட்டு இன்று (15) நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு குறித்த விமானம் வருகை தந்துள்ளது.
இவ்வாறு வருகை தந்த குறித்த விமானம் இன்று (15) மாலை இந்தியாவிற்கு திரும்பிப் புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவை சந்தித்த முன்னாள் தமிழ் முதலமைச்சர்
வடக்கு கிழக்கு இணைந்த மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாளிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு உள்ளுராட்சி சபை பிரதிநிதிகள் பலரும் பிரசன்னாகியிருந்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்குவதாக இதன்போது வரதராஜா பெருமாள், மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார்.
விசுவானந்த தேவனுடன் அந்த இரண்டு நாட்கள்
ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது குறித்து சர்ச்சைப் பேச்சு: கைதாகிறாரா சீமான்?
அபிஜித் பானர்ஜி: பொருளாதார நோபல் இந்தியர்
காங்கிரஸும் பவாரும் வளர்ந்து தேய்ந்த கதை
பம்பாய் எப்போதுமே காங்கிரஸின் கோட்டையாகத்தான் இருந்திருக்கிறது. 1960-ல் மாநில எல்லை மறுவரையறைக் குழுவால் அது மகாராஷ்டிரமாகவும் குஜராத்தாகவும் பிரிக்கப்பட்டதற்கு வரலாற்றில் காங்கிரஸ் எதிர்ப்பாக இருந்துவந்திருந்தாலும், இப்பிரிவினை தேர்தல் முடிவுகளில் புதிய மாநிலங்களில் பெரிய தாக்கம் எதையும் உடனடியாக உண்டாக்கிவிடவில்லை. குறிப்பாக, மகாராஷ்டிரத்தில்!
மக்களோடு மக்களாய்
ஈச்சலம்பற்று முட்டிசேனை மாவடிச்சேனை கங்குவெளி போன்ற கிராமத்தில் முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர்வரதராஜபெருமாள் மக்கள் பிரச்சனையை கேட்டுக்கொண்டுள்ள வேளை
புத்தளம் -மன்னார் பழைய வீதிக்கு பூட்டு
நடுக்கடலில் மரணித்த மீனவருக்கு சபையில் அனுதாபம்
நடுக்கடலில் மரணித்த காரைதீவு மீனவர் சிறிகிருஸ்ணனுக்கு, காரைதீவு பிரதேச சபையில் அனுதாபம் நிறைவேற்றப்பட்டதுடன், அவரது மூன்று பெண் பிள்ளைகளில் ஒருவருக்கு தற்காலிக சிற்றூழியர் தொழிலொன்றை வழங்கவும் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காரைதீவு பிரதேச சபையின் 20ஆவது மாதாந்த அமர்வு, சபை மேயர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில், சபாமண்டபத்தில் இன்று (14) நடைபெற்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெண்உறுப்பினர் திருமதி சின்னையா ஜெயராணி, “மரணித்த மீனவரின் குடும்பத்துக்கு உண்மையில் உதவ வேண்டுமானால் மீண்டும் நிதி வழங்குவதை விடுத்து, பிள்ளைகளில் ஒருவருக்கு ஒரு சிறுதொழிலையாவது வழங்குங்கள். அது அக்குடும்பத்துக்கு பேருதவியாகவிருக்கும்” என்ற விசேட பிரேரணையை முன்வைத்தார்.
இப்பிரேரணையை, தவிசாளர் உள்ளிட்ட 11 உறுப்பினர்கள் மனிதாபிமானத்தோடு கையை உயர்த்தி ஆதரித்தனர்.