ஜனாதிபதித் தேர்தலில்12 பேர் போட்டி

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருவதுடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை, 10 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனரென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கனடாவின் நாடாளுமன்றத் தேர்தல் 2019 : வெளிநாட்டுத் தலையீடு

(ஜனகன் முத்துக்குமார்)

கனடாவின் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற இந்நிலையில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்தது என அறியப்படுகின்றமை போல, கனேடியத் தேர்தலிலும் வெளிநாட்டு குறுக்கீடு, உள்நாட்டு அரசியல் மற்றும் கட்சி கொள்கைகள் மற்றும் அரசியலுள் உட்புகுந்து தவறான – அல்லது முறையற்ற வகையில் ஆனால், தேர்தலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய இணையத்தள தகவல் தாக்குதல்களை மேற்கொள்ளல் தொடர்பில் கனேடிய மக்களும், ஊடகங்களும், கட்சிகளும், கனேடிய பாதுகாப்பு துறையும் மிகவும் கவனமாக இருக்கின்றமை, ஜனநாயகத்தை பிரதிபலிப்பதற்கான தேர்தல் தொடர்பில் மக்கள் ஏற்கெனவே விழிப்புடன் இருப்பதை காட்டுகின்றது.

மொட்டுடன் இணையாதிருக்க தீர்மானம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையாமல் இருப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்திருக்கின்றார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்துக்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அநுராதபுரத்தில் இன்று (29) இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் கூறியிருக்கின்றார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பின்னடைய செய்வதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

‘7ஆம் திகதிக்கு முன்னர் இடதுசாரி அணியினர் மொட்டுடன் இணைவர்’

எதிர்வரும் மாதம் 7ஆம் திகதியாகும்போது, அனைத்து இடதுசாரி அணிகளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளும் என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக மகேஸ் சேனநாயக்க அறிவிப்பு

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் மகேஸ் சேனநாயக்க போட்டியிடவுள்ளார். பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாடு இன்று (29) பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இந்த மாநாட்டிலேயே, தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரான மகேஸ்சேனாநாயக்க அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

சஜித்துக்கு ம.மு. கூ ஆதரவு

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க தமது கட்சி தீமானித்துக்கதாகத் தெரிவித்துள்ள மக்கள் முன்னேற்ற கூட்டணியின் செயலாள நாயகம் கணேஷ் வேலாயுதம், தமது ஆதரவின் ஊடாக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். யாழ். ஊடக அமையத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்!(பகுதி 6)


(அந்தோணி!)

எங்களுடன் வந்த ஏனைய இரண்டு லொறிகளும் எங்கு சென்றன என்பது தெரியாது. நாங்கள் முப்பத்தைந்து பேரும் இரண்டு அறைகளிலும் பிரிக்கப்பட்டு உறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டோம். நாளைக் காலை டொமினிக் அண்ணன் வருவார் என்று கூறினர் அங்கிருந்தவர்கள். முதலில் ஏன்தான் விடிந்ததோ என்று நினைத்தநான், இப்போது இன்னும் ஏன் விடியவில்லை என்று சிந்திக்கலானேன்! விடிந்தது. கிணத்தடிக்குச் சென்று முகம் கழுவும்படி கூறினர். அங்கே சவற்காரம் இருந்தது. ஒன்றுக்கு நான்கு தடவை முகத்துக்கு சோப் போட்டு உரஞ்சிக் கழுவினேன். ஏனையோரும் அப்படித்தான் செய்தனர். காலை உணவாக இடியாப்பமும் சொதியும், சாம்பாரும் கொடுத்தார்கள். உண்டுவிட்டு டொமினிக் அண்ணன் வருகைக்காகக் காத்திருந்தோம்.

காந்தி: 150 ஆண்டுகள்

காந்தியார் கோவில்களுக்குச் சென்று
இறைவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டவரில்லை.

இருக்கும் இடத்தில் தொண்டர்களுடன்
அமர்ந்து பிரார்த்தனை செய்வதே வழக்கம்.

அவர் ஒரு கோவிலுக்குச் செல்ல
முடிவெடுத்தார்.

கோட்டாவுக்கு பிரசாரத்துக்கும் யாழுக்கு வர முடியாது

யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கு பாதுகாப்பு இல்லை என நீதிமன்றத்துக்கு கட்டளை அனுப்பும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசார காலத்திலும் யாழ்ப்பாணத்துக்கு வரமுடியாது என, முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்ண தெரிவித்தார்.

நீதிமன்ற தீர்;ப்புக்கு மாறாக முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் அ. வரதராஜப்பெருமாள்.

(காணொளியை காண….)