தளர்ந்து வரும் மஹிந்தவின் ‘பிடி’

(கே. சஞ்சயன்)
‘ஆடி போய் ஆவணி பிறந்தால், நல்லது நடக்கும்’ என்று சோதிடர்கள் கூறுவது வழக்கம். அதுபோல, ஆடி மாதம் முடிந்து, ஆவணி மாதம் எப்போது பிறக்கும் என்று, பிரதான அரசியல் கட்சிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில், ஐ.தே.க வரும் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி, தனது புதிய கூட்டணியை அறிவிக்கப் போகிறது. அதை ஒட்டியதாக, ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

மலர்ந்தது மொட்டின் புதுக்கூட்டு

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும், மேலும் சில கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், இன்று முற்பகல் கையெழுத்திடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றில் அங்கத்துவம் வகிக்காக 10 கட்சிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, 29 அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதுடன், அவற்றில் 10 கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது”?

(-புஷ்பராணி சிதம்பரி)

ஈழத்தின் வடபுலத்தில் மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும் புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TELO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப் போராட்ட வரலாறில் முதன் முதலாகச் சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில் பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப் போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் இவர் ஆயுதப் போராட்டத்தினாலேயே எமக்குத் தீர்வு உண்டு என்று அப்பொழுதே எண்ணத்தொடங்கியவர். அண்மையில் இவரால் தமிழ் எழுத்துப் பரப்புக்கு “அகாலம் ” என்ற நூல் எமக்கு கிடைத்துள்ளது.

இந்திய பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளராக ஒரு விவசாய தொழிலாளியின் மகன்.

கம்யூனிஸ்ட் கட்சி யில் மட்டுமே இந்த அதிசயம் நடக்கும்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டி. ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றின் தலைமைப் பதவிக்கு வருவது இதுவே முதல் முறை.

பப்ஜி: வினையாகும் விளையாட்டு!

(ஆ.காட்சன்)

‘ப்ளூ வேல்’ இணைய விளையாட்டுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது, இனி, நாம் கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும்போதே இளம் தலைமுறையினரைப் புதிதாக ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது ‘பப்ஜி’ (PUBG). சுமார் 30 கோடி பேர் இந்த விளையாட்டைப் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், ஒரே நேரத்தில் உலகளவில் சுமார் 5 கோடி பேர் விளையாடிவருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நீரின்றி அமையாது உலகு.. தண்ணீர் சிக்கனத்தை முன்னெடுக்கும் பிளம்பர்கள் சங்கம்!


(The Hindu)
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, `நீரின்றி அமையாது உலகு’ என்று தண்ணீரின் முக்கியத்துவத்தை ஒரே வரியில் விளக்கியுள்ளார் திருவள்ளுவர். தற்போதைய சூழல் தண்ணீரின் முக்கியத்துவத்தை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. தண்ணீருக்காக சென்னை மக்கள் படும்பாடு நாமெல்லாம் அறிந்ததுதான். எனவேதான், தண்ணீர் சிக்கனமும், சேமிப்பும் மிக மிக அவசியமானதாகியுள்ளது. இந்த நிலையில், தண்ணீர் சிக்கனத்தை பெரிய இயக்கமாக முன்னெடுக்கிறது இந்திய பிளம்பர்கள் சங்கம்.

நடிகர் சூர்யா மிரட்டல் விவகாரம்: சகிப்புத்தன்மையை உறுதி செய்யவேண்டும் – மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

புதுடெல்லி: மக்களவையில் இன்று நடிகர் சூர்யா மிரட்டல் விவகாரம் எழுப்பப்பட்டது. இதை எழுப்பிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.பியான சு.வெங்கடேசன், சகிப்புத்தன்மையை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

சுடு தேநீரும் சுடலை ஞானமும்

பௌத்த பேரினவாதம், இந்து மக்களிடம் கோரிய ஒற்றுமை, எத்தகையது என்பதைக் கடந்த வாரம், கன்னியா நிகழ்வுகள் உணர்த்தி இருக்க வேண்டும். காலச்சக்கரம் மெதுமெதுவாக நகர்ந்து, கல்முனையில் இருந்து கன்னியா நோக்கி வந்துள்ளது. கல்முனையில் களமாடியவர்களே, கன்னியாவிலும் களமாடினார்கள். கல்முனையில் பேசிய அதே குரல்கள்தான், கன்னியாவிலும் பேசின.

6வது ஆண்டு நினைவில் …………

தோழர் சுதன் EPRLF இன் ஆரம்பகால பிரச்சார ,இராணுவ நடவடிக்கைகளில் பிதான பாத்திரம் வகித்தவர். இரானுவத்தினரின் சுற்றிவளைப்பு தேடுதல்களுக்கு மத்தியில்
தோழர் றொபேட்டுடன் இனைந்து வடகிழக்கில் பிரதான வேலைத்திட்டங்களில் ஆரவாரமின்றியும் உறுதுனையாகவும் கருமமாற்றியவர். அவரிடம் எத்தகைய சந்தர்ப்பத்திலும் பதட்டத்தையோ அச்சத்தையோ காணமுடியாது . இவர் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் தோழர் றொபேட் தோழர், ரமேஸ், தோழர் மோகன், தோழர் குமார்(வோல்ட்டன்) போன்றவர்களுடன் இனைந்து பணியாற்றியுள்ளார் .தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த அவர் நீரிழிவு நோயின் பாதிப்பால் 25.07.2013 அன்று எம்மைவிட்டுப் பிரிந்தார். அவருக்கு எமது அஞ்சலிகள்.

மூதூர் பிரதேச பிரிப்பு சம்மந்தமாக…

தற்போது மூதூர் பிரதேச செயலக விடயம் ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கியுள்ளது. தோப்பூர் என்ற புதிய பிரதேச செயலகம் உருவாக்கம் நிறைவடையும் நிலையில் தோப்பூர் பிரதேச செயலக எல்லைக்குள் கீழ்க்காணும் தமிழ் கிராமங்கள் இனணக்கப்பட்டுள்ளததாக அறியக் கிடைத்துள்ளது.