ஜூலைக் கலவரம் தந்த பயன்களும் வீணாகிவிட்டன

(எம்.எஸ்.எம். ஐயூப்)
நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைத்த ‘கறுப்பு ஜூலை’ என்று பொதுவாக அழைக்கப்படும், தமிழர்களுக்கு எதிராக 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற கலவரங்கள் ஆரம்பித்து, இன்றோடு 36 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால், அந்தக் கொடுமைக்கு மூலகாரணமாக அமைந்த இனப் பிரச்சினைக்கு, நிலையான தீர்வொன்று இன்னமும் காணப்படவில்லை.

சுதந்திரக் கட்சி ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில், ஸ்ரீ லங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம், இலங்கையில் முதல் தடவையாக கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு, எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை, பிற்பகல் 3 மணிக்கு, இலங்கை மன்றக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று, 36 வருடங்கள் கடந்துவிட்டதை நினைவுக்கூர்ந்தும், கலவரத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

’தாக்குதலுடன் ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சாட்சிகள் இல்லை’

குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு அமைய, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன், ஐ.எஸ் அமைப்புக்கு ​தொடர்பு இருப்பதாக, எவ்வித சாட்சிகளும் கிடைக்கவில்லையென, குற்றப்புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பான, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், இன்று சாட்சியம் வழங்கும் போதே,அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எத்தனைபேர் மக்களுடைய பிரச்சினைகளுக்காகத் துணிவோடு குரல்கொடுக்கின்றனர்?

(Karunakaran)

இன்று தமிழ்த்தேசிய நிலைப்பாட்டையும் அதனுடைய அரசியலையும் ஆதரிக்கின்ற எழுத்தாளர்கள் மற்றும் கலை வெளிப்பாட்டாளர்களில் எத்தனைபேர் அந்த அரசியலின் வழி மக்கள் போராட்டங்களில் பங்கேற்றனர்? (இதில் போராளிகள் விலக்கு) தொடர்ந்து பங்கேற்கின்றனர்? எத்தனைபேர் மக்களுடைய பிரச்சினைகளுக்காகத் துணிவோடு குரல்கொடுக்கின்றனர்? எவ்வளவு பேர் மக்களோடிணைந்து எளிய வாழ்க்கையை வாழ்கின்றனர்? மக்கள் சந்தித்த, சந்திக்கும் நெருக்கடிகளில் தம்மையும் இணைத்தவர்கள் யார் யார்? இழப்புகளையும் வலிகளையும் நேரடியாகச் சந்தித்தவர்கள், தாங்கியவர்கள் எத்தனைபேர்? எத்தனைபேர் சமூகப் பிரச்சினைகளிலும் சமூகத்தில் நிலவும் சாதி, பிரதேச வேறுபாடு, பால் நிலை ஆதிக்கம் போன்ற அசமத்துவ நடைமுறைகளுக்கு எதிராகப் போரிடுகின்றனர்?

மனோகணேசனால் முடியுமென்றால் கூட்டமைப்பால் ஏன் முடியாது?: முன்னாள் முதலமைச்சர் கேள்வி!!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மனோ கணேசனால் கொடுத்திருக்கின்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடிந்தால் 13 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் ஏன் நிறைவேற்ற முடியாமலிருக்கின்றது. ஏன் அவர்கள் சென்று அந்த வாக்குறுதியை அளிக்கவில்லை என இணைந்த வட- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான அ. வரதராஜப் பெருமாள் கேள்வியெழுப்பியுள்ளார்.

குடிக்கிற தண்ணிக்காக ஊரே அல்லாடிக்கிட்டிருக்கு.

ஒருத்தருக்கொருத்தர் மாத்தி மாத்தி பழி சொல்லி காரணம் சொல்லிட்டிருக்க –

நம்ப வேலூர் பொம்பளைக மட்டும் – 
15 வருசத்துக்குமுந்தி காஞ்சுபோன ஒரு ஆத்தையே தூர் வாரி சாதனை பண்ணிருக்காங்க.

மஹாத்மா காந்தி தேசிய ஊரக 
வேலை வாய்ப்புத் திட்டம் !

பிரித்தானியாவின் புதிய பிரதமர்-திரு பொரிஸ் ஜோன்ஸன்


(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)

இன்று மதியம் கொன்சர்வேட்டிவ் கட்சி; தலைவராகவும் பிரித்தானியாவின புதிய பிரதமராகவும் திரு. பொரிஸ் ஜோன்ஸன் என்பவரைத் தெரிவுசெய்திருக்கிறது.இவரின் தெரிவு அவர்களின் கடசியினர் மட்டுமல்லாது பிரித்தானிய பொது மக்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்டதொன்றாகும்.

1983 யூலை 23 …..?

(வேதநாயகம் தபேந்திரன்)

1983 யூலை 23 இல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு நாடு முழுவதும் ஆரம்பித்தாக சமூக வலைத் தளங்களில் பரவலாகப் பதிவிடப்படுகிறது.
அது தவறு.
யூலை 24 முதல் 31 ஆம் திகதி வரை தாள் நடந்தது.

ஸ்ரீ வித்யா… அதிசய ராகம்! – இன்று ஸ்ரீவித்யா பிறந்தநாள்

(வி.ராம்ஜி)
சினிமா என்பது பொழுதுபோக்கு சாதனம். ஆனால் இதில் உள்ள இயக்குநர்களையோ தயாரிப்பாளர்களையோ, இசையமைப்பாளர்களையோ ஒளிப்பதிவாளர்களையோ, நடிகர்களையோ நடிகைகளையோ… ஓர் கலைஞராக, திறமைசாலியாக மட்டுமே நாம் பார்ப்பதில்லை. மனசுக்குள் இடமிட்டு, ஓர் சிம்மாசனத்தையும் போட்டு, அமரவைத்து அழகுபார்க்கிறோம். அவர்கள் அமரர்களாகிவிட்ட போதும், அந்த இடம் அவர்களுக்குத்தான்! அப்படியொரு இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர்… ஸ்ரீவித்யா.
மிகப்பெரிய இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவர் ஸ்ரீவித்யா. இவரின் தாயார் எம்.எல்.வசந்தகுமாரி என்கிற எம்.எல்.வி. கர்நாடக சங்கீத உலகின் தனிப்பெருங்குயில். அப்பேர்ப்பட்ட பாரம்பரியக் குடும்பத்தில் இருந்து திரையுலகுக்கு வந்தார் ஸ்ரீவித்யா.

கர்நாடக அரசு கவிழ்ந்தது: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. இதன் மூலம் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவியது. நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவாகின.