(Shanmugan Murugavel)
சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரானது இங்கிலாந்தில் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், இத்தொடரில் சம்பியனாகக் கூடிய அணியாக எதிர்பார்க்கப்படும் இந்தியாவை இப்பத்தி ஆராய்கிறது.
The Formula
(By Lasanda Kurukulasuriya)
While the contents of the proposed Status of Forces Agreement (SOFA) between the governments of Sri Lanka and the US still remain hidden from the public eye, parliament was told last week that the government had not entered into such an agreement – yet. The negotiations however are going on, and Foreign Minister Tilak Marapana has reportedly indicated to the US that some of its provisions could not be implemented. One was the provision seeking exemption for visiting US personnel from criminal jurisdiction under Sri Lankan law, while in Sri Lanka. Another was a clause that would give effect to the agreement through an ‘exchange of notes.’
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
தேர்தல்களே ஜனநாயகத்தின் அளவுகோல்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகம் எவ்வகையான தெரிவுகளையெல்லாம் வழங்குகின்றது என்பதை, நாம் அடிக்கடி காண்கிறோம். ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்றதொரு முதுமொழியை நாம் துணைக்கழைக்கிறோம். மக்கள் தீர்ப்புகள் எல்லாம், மகேசன் தீர்ப்புகள் தானா என்பதை, எல்லோரையும் விட இலங்கையர்கள் நன்கறிவர். இப்போது, மகேசன் தீர்ப்பை, இந்திய மக்கள் வழங்கி இருக்கிறார்கள். அதற்கான பலன்களை, வருங்காலத்தில் அவர்கள் அனுபவிப்பர்.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவிலுள்ள தேசிய விசாரணை முகவரான,என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். இந்திய பொலிஸ் பிரதானி ஆலோக் மிதாலின் தலைமையிலான அதிகாரிகள் குழுவே இலங்கைக்கு வந்துள்ளனர். இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய, பயங்கரவாதிகள் இந்தியாவுடன் தொடர்பைக் கொண்டிருந்தமைத் தொடர்பில், விசாரணை செய்வதற்காக, இந்த குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.
தேசிய புலனாய்வுத்துறைத் தலைவர் பதவியில் இருந்தாலும், தனக்குப் போதிய அதிகாரம் இல்லை என்றும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் குறித்து தனக்குக் கிடைத்த தகவல் ஒன்றை, பொலிஸ் மா அதிபருக்குத் தெரிவித்ததாகவும், அது குறித்து, கடிதம் மூலம் அறிவித்ததாகவும் கூறிய தேசிய புலனாய்வுத்துறைத் தலைவர் சிரிர மெண்டிஸ், இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தனக்குத் தெரியாது என்றும் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலும் ஆராயப்படவில்லை என்றும் சாட்சியமளித்தார்.
(காரை துர்க்கா)
நாட்டின் சமகால நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முல்லைத்தீவு, வற்றாப்பளை அம்மனைத் தரிசித்தால் எமது நெருக்கடிகள் தீரும் என்ற அளப்பரிய நம்பிக்கையுடன், அம்பாளின் வைகாசிப் பொங்கலுக்கு (மே20) சென்றிருந்தோம். அன்னையிடம் மக்கள் தங்களது ஆற்றொனாத் துன்பங்களைக் கொட்டிக் கதறி வழிபட்டனர். மனதில் அடக்கி வைத்திருக்கும் ஆதங்கங்களை, ஆற்றாமைகளை இவ்வாறாகக் கொட்டுவது ஒருவித உளவியல் ஆற்றுப்படுத்தல் ஆகும்.
1971 புரட்சியின் காரணமாக , அன்றைய சிறிமாவின் ஆட்சியில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் ரோஹண விஜேவீரவும் , அவர் தம் சக தோழர்களும் 1977 இல் எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென சிறையிலிருந்து விடுவிக்கப்படும் காட்சியுடன் இப்படம் தொடங்குகிறது. 1989 இல் தலைமறைவாக இருந்த நிலையில் இலங்கைப் படையினரால் கைது செய்யப்படும் காலம் வரையான கிட்டத்தட்ட 13 வருட ஜேவிபி தலைமையினதும் , அது நடாத்திய அரசியலினதும் வரலாற்றை பதிவு செய்வதே இப்படத்தின் நோக்கம் எனலாம்.