’கைதான எவரையும் விடுவிக்குமாறு நான் கோரவில்லை’

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்காவிடம், தான் ஒருபோ​தும் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லையென, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

’சந்தேகநபரை விடுவிக்குமாறு, ரிஷாட் என்னிடம் 3 முறை கோரினார்’

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் சம்பவங்களை அடுத்து, இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலொன்றின் போது, தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேநபர் தொடர்பில், அமைச்சர் ரிஷாட் பதியூதீன், இரண்டு தடவைகள் தன்னுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உதவி கோரியதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க ​தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பிள்ளைகளைப் பறிகொடுத்த டென்மார்க் தம்பதி, உருக்கமான அறிக்கை

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில், தங்களது மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த டென்மார்க்கைச் சேர்ந்த கோடீஸ்வர தம்பதி, உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

’இலங்கைக்கு ஷரியா பல்கலைக்கழகம் தேவையில்லை’

இலங்கைக்கு, ஷரியா பல்கலைக்கழகமொன்று தேவையில்லையென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையில் வைத்து, இன்று (17) அறிவித்தார். மத்ரஸாக்கள் உள்ளிட்ட இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டமூலம் தொடர்பில், தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்…

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும் இலங்கையிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை முற்றாக ஒழிக்கக்கோரியும், பாரிய ஆப்பாட்டம் மற்றும் பேரணி என்பன, ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து, இன்று (17) புத்தளத்தில் இடம்பெற்றது.

மனிதத்தை தொலைத்து விட்டு நாம் எங்கே செல்கிறோம்…….!!

(Arunthathy Gunaseelan)

கொலைகளும்,கொள்ளைகளும், குண்டுவெடித்தலும் மட்டுமே மனிதநேயமற்ற செயல் என நாம் நினைக்கிறோம். ஆனால்
இதை விடக் கேவலமானது சகமனித நேசிப்பின்றி,மனிதரால் பின்பற்றப்படும் சில நம்பிக்கைகளும், செயல்களும், பழக்கவழக் கங்களும் தான் உறவுகளே…….!!

செவ்விந்தியக் காந்தி.

(Rathan Chandrasekar)
பல்லாயிரம் செவ்விந்தியரைக் கொன்று – அவர்களது ரத்தச்சேற்றில் எழுப்பப்பட்ட
அவலக் கோபுரம்தான் அமெரிக்கா .

கொலம்பஸின் கண்களில் பட்டதுதான்
இந்த மண் செய்த பெரும் பாவம்.

’23ஆம் திகதி வருக’ எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் சோனியா

டெல்லியில் புதிய ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்கு, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இம்மாதம் 23ஆம் திகதி சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்துக்க, மொத்தமுள்ள 543 இடங்களில், வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு, எதிர்வரும் 19ஆம் திகதியுடன், தேர்தல் நிறைவடையவுள்ள நிலையில், 23ஆம் திகதி, 542 தொகுதிகளின் வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

சகல அதிகாரங்களுடன் கூடிய தெரிவுக்குழுவை அமைக்க யோசனை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும், அதற்கு பின்னர் எமது நாட்டில் இடம்பெறும் வன்முறைகளுக்கும் பாதுகாப்புத்துறையில் ஏற்பட்ட தளர்வே காரணம் எனக் குறிப்பிட்ட திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன, பாதுகாப்பில் எவ்வாறு தளர்வு ஏற்பட்டது. ஏன் நடந்தது? இதற்கு பொறுப்பானவர்கள் பொறுப்புக் கூறலிலிருந்து ஏன் விலகியுள்ளனர். என்பவை தொடர்பில் ஆராய சகல அதிகாரங்களு​முடைய தெரிவுக் குழுவொன்றை அமைக்க சபாநாயகர் முன்வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

மஹிந்தவின் கோரிக்கை

தற்போதைய சூழ்நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்குமாறு, தனது அரசியல் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.