ஜெகனின் விஸ்வரூபம்: ஆந்திராவில் மீண்டும் சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆவாரா? தீர்மானிக்கும் சக்தியாக பவன் கல்யாண்

பவன் கல்யாண், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு: கோப்புப்படம்

(போத்திராஜ்)

ஆந்திராவில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் சந்திரபாபு நாயுடு காய்களை நகர்த்த, அரசியல் களத்தில் அவரின் முதல்வர் கனவுக்கு கடும் போட்டியாக ஒய் எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி வளர்ந்து கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம் ஆந்திராவில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால், ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக பவன் கல்யாண் எழுச்சி பெற்று வருகிறார். இந்த 3 பேருக்கும் இடையில்தான் ஆந்திராவில் நடக்கும் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் போட்டி இருக்கும்.

தமிழ்க் கட்சிகளுக்கு ஆதாயம்; தமிழ் மக்களுக்குச் சேதாரம்

(இலட்சுமணன்)

போட்டிபோட்டுக் கொண்டு அலைபேசிக் கம்பனிகள் வெகுமதிகளை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அநேக மக்கள் அது குறித்து ஆர்வம் இல்லாது இருக்கின்றார்கள். அதைப்போலத்தான் சேதாரங்களை நினைத்தே, அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கும் நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் இருக்கிறார்கள். பொதுவாகவே, அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்பதில் நாம் எல்லோரும் கெட்டிக்காரர்கள்தான். ஆனால், பதில்களைக் கண்டுபிடிப்பதில்தான் சிரமங்களை எதிர் கொள்கிறோம்.

ஜனாதிபதி பதவிக்கான மஹிந்த – மைத்திரி பனிப்போர்

(எம்.எஸ்.எம். ஐயூப்)
அரசியல் என்பது ஒரு வகையில் விசித்திரமானது. தமக்கு உடல் வலிமை இருக்கும் வரை, ஜனாதிபதியாக இருந்து, அதன் பின்னர், தமது மகனுக்கு அப்பதவியைக் கைமாற்ற நினைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை, 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடித்து, அவரது கனவுகளைச் சிதறடிக்கச் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது அதே மஹிந்தவின் வாக்கு வங்கியைப் பாவித்து, மீண்டும் ஜனாதிபதியாக நினைப்பதாக இருந்தால், அந்த அரசியல், எவ்வளவு விசித்திரமானது என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

‘வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீர்’

தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரை அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். முன்னாள் போராளிகளையும் நிம்மதியாக இருக்கவிட மாட்டீர்கள் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கடுமையாகச் சாடியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, இனியும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாது மக்களை வாழ விடுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘குடிநீர்ப் பிரச்சினையால், பெண்கள் கருத்தரிக்கும் வீதம் குறைந்துள்ளது’

யாழில் உள்ள குடிநீர் பிரச்சனை காரணமாக பெண்கள் கருத்தரிக்கும் வீதம் குறைவடைந்து செல்வதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தனது அலுவலகத்தில் நேற்று (26) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

‘6 மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல்’

இன்னும் 6 மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் அதேவேளை, தேர்தலில் ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தெரிவாகும் நிலை காணப்படுவதாக, மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

’சர்வாதிகார ஆட்சியமைக்க முயற்சி’

தேர்தல்கள் எதனையும் நடத்தாது சர்வாதிகார ஆட்சியை உருவாக்க முயற்சிப்பதாக லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினூடாக போராடும் உரிமை பறிக்கப்படுமெனவும், எதிர்க்கட்சியினரின் கூட்டங்களின்போது, பொலிஸாருடன் முரண்படுவது, பயங்கரவாத செயற்பாடாக கருதப்பட்டு கட்சியை நீக்குவதற்கும் இடமிருப்பதாகவும் அவர் இதன்போது கூறினார்.

Lord Naseby has his say on UNHRC sessions on Sri Lanka


(Lord Naseby)


Lord Naseby PC, President of the All Party British Sri Lanka Parliamentary Group in the UK Parliament, has issued a statement on Sri Lanka with reference to the recently concluded 40th Sessions of the United Nations Human Rights Council in Geneva.

”சீமானால் ஈர்க்கப்பட்ட பெண் வேட்பாளர்கள்”- வெடித்த சர்ச்சை; மருத்துவர் ஷாலினி விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்கள் குறித்த தனது பதிவால் வெடித்த சர்ச்சையை அடுத்து, மனநல மருத்துவர் ஷாலினி விளக்கம் அளித்துள்ளார்.நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது. 20 தொகுதிகளில் கட்சியின் சார்பில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பெண்களுக்கு சம உரிமை என்ற வகையில் நாம் தமிழர் கட்சி முன்னுதாரணத்துடன் செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதற்கிடையே ”இனிமையாகப் பேசும் ஆண்களால் பெண்கள் ஈர்க்கப்படுவது மனித இனத்துக்கே உரிய அவலம்” என்று மனநல மருத்துவர் ஷாலினி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன் பெண் வேட்பாளர்கள் அடங்கிய புகைப்படத்தையும் அதில் பகிர்ந்திருந்தார்.

அவரின் கருத்துக்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், #ShameonyouShalini உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஷாலினி, ”ஒரு வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக falling for என்றால் காதலிப்பது மட்டுமல்ல, ஒரு உத்தியையோ, ஜோக்கையோ உண்மை என்று நம்புவதும் அதில் சேர்த்திதான்.

உதாரணத்துக்கு: How could you fall for such an obvious trick?

ஆங்கில அகராதியைப் படிக்காமல்

1) ‘ஷேம் ஆன் யூ ஷாலினி’ என்று சொல்லுவதும்,

2) முதலில் நீங்கள் போய் பைத்தியத்துக்கு வைத்தியம் பண்ணிக்கொள்ளுங்கள் என்று சொல்லுவதும்,

3) என் உதவியாளருக்கு போன் செய்து பிதற்றுவதும்

4) சம்பந்தமே இல்லாமல் யார் யாரையோ இதில் கோர்த்து விடுவதும், இப்படியான இன்ன பிற சதிகளும் உச்சகட்ட அறியாமை. அதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு குப்பையும் ‘கொழுப்பு’ அரசியலும்

(முகம்மது தம்பி மரைக்கார்)
நமது கைகளை அகல விரிக்கும் போது, நமக்கான சுதந்திரம் என்பது, அடுத்தவரின் மூக்கை, நமது கைகள் தொடாத வரையில்தான் என்பார்கள். நமது சுந்திரம் என்பது, அடுத்தவருக்கு அத்துமீறலாக இருக்கும் போதுதான் முரண்பாடுகளும் பிரச்சினைகளும் எழுகின்றன. ஆனால், அதிகாரம் உள்ளவர்கள், சாதாரண மனிதர்களின் தலைகளில், அநேக தருணங்களில் கூடுகளைக் கூட, கட்டத் தொடங்குகின்றனர்.