கஜா புயல் பாதிப்பு: கேரள அரசு ரூ.10 கோடி நிதி, 14 லாரிகளில் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டப் பகுதி மக்களுக்கு உதவும் வகையில் 14 நிவாரணப் பொருட்களும், ரூ.10 கோடி நிதியும் கேரள அரசு சார்பில் வழங்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

(“கஜா புயல் பாதிப்பு: கேரள அரசு ரூ.10 கோடி நிதி, 14 லாரிகளில் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

பேரவையை அலைக்கழிக்கும் முன்னணி

(புருஜோத்தமன் தங்கமயில்)

தேர்தலைப் பிரதானப்படுத்திய அரசியல் கூட்டணிகள், இலாப நட்டக் கணக்கின் அடிப்படையில் தோற்றம் பெறுபவை. அங்கு கொள்கை, கோட்பாடுகளுக்கான இடம் என்பது, இரண்டாம் பட்சமானதே. அதனால்தான், முன்னாள் வைரிகளான சந்திரிகாவும் ரணிலும், தமது பொது வைரியான மஹிந்தவை எதிர்கொள்வதற்கான கூட்டணியை, 2014இல் அமைக்க முடிந்தது. இப்போது, மைத்திரியும் மஹிந்தவும், ரணிலை எதிர்கொள்வதற்காகப் புதிய உடன்பாட்டுக்கு வந்திருப்பதும் அதன்போக்கிலானதுதான்.

(“பேரவையை அலைக்கழிக்கும் முன்னணி” தொடர்ந்து வாசிக்க…)

அந்தமான் தீவில் உயிரிழந்த அமெரிக்க இளைஞரின் டைரிக் குறிப்புகள்

அந்தமான் தீவில் பழங்குடியினரால் கொல்லப்பட்ட அமெரிக்க இளைஞரைப் பற்றி அவரது நண்பர் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபர் தீவுகள் பகுதியில் வடக்கு சென்டினல் தீவு உள்ளது. அங்கு பழங்குடியின மக்கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளாக வெளியுலகத் தொடர்பு இல்லாமல் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தங்கள் பகுதிக்குள் வெளியாட்கள் யாரையும் அனுமதிப்பதில்லை என நம்பப்படுகிறது. இதையும் மீறி அங்கு சென்ற சிலரை அவர்கள் கொன்றுவிட்டதுடன் அவர்களுடைய உடலை மீட்கவும் அனுமதித்ததில்லை. (“அந்தமான் தீவில் உயிரிழந்த அமெரிக்க இளைஞரின் டைரிக் குறிப்புகள்” தொடர்ந்து வாசிக்க…)

சட்டப்பேரவைத் தேர்தல்: ம.பி.யில் 65.5% – மிசோரமில் 73% வாக்குப்பதிவு

இன்று நடந்த தேர்தலில் மத்தியப்பிரதேத்தில் 65.5 சதவீதமும், மிசோரமில் 73 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் சத்தீஸ்கரில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசம் மற்றும் மிசோரமில் இன்று தேர்தல் நடைபெற்றது.

(“சட்டப்பேரவைத் தேர்தல்: ம.பி.யில் 65.5% – மிசோரமில் 73% வாக்குப்பதிவு” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் றேகனின் 33 வது நினைவுதினம்.

வவுனியா மாவட்டத்தில் பிறந்த இன்பராசா என்னும் இயற்பெயருடைய தோழர் றேகன் 23.11.1985ம் ஆண்டு புலிகளினால் படுகொலை செய்யப்பட்டார். 1980 களின் ஆரம்பத்தில் ஈழ மாணவர்
பொதுமன்றம்(Gues) என்னும் மாணவர் அமைப்பினூடாக தனது அரசியல் பணியை ஆரம்பத்தவர் . மக்களின் மீதும் மண்ணின் மீதும் அளவுகடந்த நேசத்துக்குரியவராகவிருந்தார். அதற்காக தன்னுடைய பல்கலைக்களக பட்டப்படிப்பையும் தூக்கியெறிந்து விட்டு பெற்றோர்கள் உயர்கல்வியை கற்பதிற்கு தேவையென கொடுத்த பணத்துடன் தன்னை போராட்டத்துடன் முழுமையாக இனைத்துக்கொண்டவர். EPRLF இராணுவப்பிரிவான மக்கள் விடுதலைப் படையில் இனைந்து இராணுவப்பயிற்சியைப் பெற்று மேலதிக சிறப்புப் பயிற்சிக்காக பாலஸ்தீன விடுதலை இயக்கமொன்றின் பயிற்சிமுகாமில் பயிற்சியை முடித்திருந்தார்.அதன்பின்பாக கட்சியினால் வன்னி பிராந்திய இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டார் .மக்கள் விடுதலைப் படையை பலப்படுத்தி வெற்றிகரமான தாக்குதல்களுக்கு தலைமைதாங்கினார். (“தோழர் றேகனின் 33 வது நினைவுதினம்.” தொடர்ந்து வாசிக்க…)

நாடாளுமன்றம் கலைப்பு விவகாரம்: 7 பேரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்

நாடாளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதியினால் வெ ளியிடப்பட்ட அதி​விஷேட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணை செய்வதற்கு ஏழு நீதியரசர்கள் குழாமை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். இந்த வழக்கு, எதிர்வரும் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பிரெக்சிற் ஒப்பந்தத்தை அனுமதித்தனர் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்

வரலாற்று ரீதியிலான ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் (பிரெக்சிற்) ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இலங்கை நேரப்படி நேற்று மாலை அனுமதித்தனர். பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே இல்லாமல் பெல்ஜியத்தின் பிரஸல்ஸில் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 தலைவர்களும் ஏறத்தாழ 30 நிமிடத்திலேயே பிரெக்சிற் ஒப்பந்தத்துக்கு இணங்கியிருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அடுத்தாண்டு மார்ச் 29ஆம் திகதியிலிருந்து பிரித்தானியா விலகவுள்ளது.

(“பிரெக்சிற் ஒப்பந்தத்தை அனுமதித்தனர் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதி – மஹிந்த – ரணில் ஏன் கூட்டாட்சி நடத்த முடியாது

– வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடனான நேர்காணல்…

(சுமித்தி தங்கராசா)
தான் எந்தக் கட்சிக்கும் பக்க சார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாது. இது எமக்கிடையிலான ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும். பிரிவினைகளை மேலும் ஏற்படுத்தும் என்கின்றார் வட மாகாண முன்னாள் முதல்வர் சீ.வி விக்கினேஸ்வரன். அவ்வாறு தான் பக்கச் சார்பாகச் செயற்படுவது தமிழ் மக்கள் பேரவைக்குள் பிளவை ஏற்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.தினகரன் வாரமஞ்சரிக்கான அவரது நேர்காணலிலேயே அவர் அவ்வாறு கூறினார். நேர்காணல் வருமாறு…..

(“ஜனாதிபதி – மஹிந்த – ரணில் ஏன் கூட்டாட்சி நடத்த முடியாது” தொடர்ந்து வாசிக்க…)

நிலையியல் கட்டளையும் நிலையில்லா குழப்பமும்

கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு பிறகு பாராளுமன்ற அமர்வு இரண்டாவது தடவையும் மிகவும் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. சுமார் ஏழு மணிநேரம் இடம்பெற்ற அமர்வில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றாலும் உயரிய சபையின் கண்ணியம் பேணப்பட்டிருக்கிறதென்பது திருப்தி தரக்கூடியது.

(“நிலையியல் கட்டளையும் நிலையில்லா குழப்பமும்” தொடர்ந்து வாசிக்க…)

சின்னத்திரையால் சீரழியும் பெண்கள்

முன்பு எல்லாம் பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் நகமும் சதையும் என்று சொல்வார்கள். இப்பொழுது அப்படி இல்லை. யாரிடமாவது அந்தக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். மெகா தொடர்களும், பெண்களும் என்றுதான் சொல்வார்கள். அந்த அளவிற்கு இன்றைய தமிழ்ப் பெண்களில் பலர், தொலைக்காட்சித் தொடர்களுக்கு அடிமைகளாக மாறி வருகிறார்கள். எல்லாப் பெண்களையும் சொல்லவில்லை. ஒரு சில பெண்களுக்குப் பைத்தியமே பிடித்து விடும் அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது.

(“சின்னத்திரையால் சீரழியும் பெண்கள்” தொடர்ந்து வாசிக்க…)