நிலையியல் கட்டளையும் நிலையில்லா குழப்பமும்

கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு பிறகு பாராளுமன்ற அமர்வு இரண்டாவது தடவையும் மிகவும் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. சுமார் ஏழு மணிநேரம் இடம்பெற்ற அமர்வில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றாலும் உயரிய சபையின் கண்ணியம் பேணப்பட்டிருக்கிறதென்பது திருப்தி தரக்கூடியது.

(“நிலையியல் கட்டளையும் நிலையில்லா குழப்பமும்” தொடர்ந்து வாசிக்க…)

சின்னத்திரையால் சீரழியும் பெண்கள்

முன்பு எல்லாம் பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் நகமும் சதையும் என்று சொல்வார்கள். இப்பொழுது அப்படி இல்லை. யாரிடமாவது அந்தக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். மெகா தொடர்களும், பெண்களும் என்றுதான் சொல்வார்கள். அந்த அளவிற்கு இன்றைய தமிழ்ப் பெண்களில் பலர், தொலைக்காட்சித் தொடர்களுக்கு அடிமைகளாக மாறி வருகிறார்கள். எல்லாப் பெண்களையும் சொல்லவில்லை. ஒரு சில பெண்களுக்குப் பைத்தியமே பிடித்து விடும் அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது.

(“சின்னத்திரையால் சீரழியும் பெண்கள்” தொடர்ந்து வாசிக்க…)

60 ஆயிரம் ஆண்டு பழமையான நார்த் சென்டினல் தீவில் யார் வசிக்கிறார்கள்? அங்குச் செல்ல ஏன் அஞ்சுகிறார்கள்? தடை ஏன்?- ஓர் அலசல்

(போத்திராஜ்)

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் உள்ள மர்மமான நார்த் சென்டினல் தீவுக்கு பூர்வீக பழங்குடிகளான சென்டினல் மக்களைச் சந்திக்கச் சென்ற 26 வயது அமெரிக்க இளைஞர் ஜான் ஆலன் சாவ் சென்டினல் பழங்குடி மக்களால் கொல்லப்பட்ட சம்பவம்தான் கடந்த சில நாட்களாகத் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

(“60 ஆயிரம் ஆண்டு பழமையான நார்த் சென்டினல் தீவில் யார் வசிக்கிறார்கள்? அங்குச் செல்ல ஏன் அஞ்சுகிறார்கள்? தடை ஏன்?- ஓர் அலசல்” தொடர்ந்து வாசிக்க…)

நீர்கொழும்பு கடல்நீரேரி

நீர்கொழும்பில் அமைந்துள்ள இக்கடல் நீரேரியானது மூன்று மணிநேர மீன்பிடி அமர்வோடு, கடற்கரையிலிருந்து கரையோரத்தில் துவங்குகிறது. சுற்றுலாப் பயணிகள் காலை 8:00 மணி அல்லது மாலை 3:00 மணிக்கு காலை காலை அமர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் மற்றும் விளையாட்டு மீன்பிடி உபகரணங்கள் என்பன அங்கு வழங்கப்படுவதோடு, வழிகாட்டி ஒருவரும் துணைக்கு நியமிக்கப்படுவார்.

(“நீர்கொழும்பு கடல்நீரேரி” தொடர்ந்து வாசிக்க…)

உலகின் உன்னதம்: மும்பாய் விமானநிலையம்

(A.P.Mathan)

இலங்கையில் திடீரெனப் பிரதமரை மாற்றிய ஒக்டோபர் 26ஆம் திகதி இரவு, இந்தியாவுக்கான பயண ஆயத்தத்தில் இருந்தோம். இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில், இலங்கையிலிருந்து ஊடகத்துறைசார்ந்த 20 பேருக்கான சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்தப் பயணம், மும்பாயை நோக்கியதாக இருந்தது. ஒக்டோபர் 27ஆம் திகதி அதிகாலையில் மும்பாய்ப் பயணம் தொடங்கியது.

(“உலகின் உன்னதம்: மும்பாய் விமானநிலையம்” தொடர்ந்து வாசிக்க…)

தலைமன்னார் – இராமேஸ்வரத்துக்கு இடையில் கப்பல் சேவை

தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ள மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, சபரி மலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

(“தலைமன்னார் – இராமேஸ்வரத்துக்கு இடையில் கப்பல் சேவை” தொடர்ந்து வாசிக்க…)

பரபரப்பாக்கும் ‘மறுத்தான்’ ஆட்டங்கள்

(கே. சஞ்சயன்)

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்ட அரசியல் குழப்பங்கள், நாடாளுமன்றத்துக்கு உள்ளே தான், பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, நாடாளுமன்றத்தையும் கலைத்து விட்டால், எல்லாத் தடைகளும் நீங்கி விடும், புதிதாகத் தேர்தலை நடத்தி, ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று போடப்பட்ட திட்டம், இப்போது முட்டுச்சந்தியில் வந்து நிற்கிறது.

(“பரபரப்பாக்கும் ‘மறுத்தான்’ ஆட்டங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

’மஹிந்தவின் நியமனத்தை ஐ.தே.க ஏற்றது’

மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், நாட்டை நாளுக்கு நாள், அதள பாதாளத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது. அரசியல் ஸ்திரத்தன்மை மாத்திரமல்ல, பொருளாதாரம், நிர்வாகம் போன்ற துறைகளிலும் முடக்கம் ஏற்பட்டிருக்கின்றது. வருட இறுதியில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பத்தால், அடுத்த வருடத்துக்கான பாதீட்டுத் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.

(“மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள்” தொடர்ந்து வாசிக்க…)

ட்ரம்ப்பை எதிர்க்கிறார் இம்ரான் கான்

பாகிஸ்தான் தொடர்பாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதன்மூலம், ஒரு காலத்தில் மிக நெருங்கிய தோழமை நாடுகளாக இருந்த இவ்விரு நாடுகளும், தமக்கிடையிலான முரண்பாடுகள் மூலம், அதிக இடைவெளியே ஏற்படுத்திய வண்ணமுள்ளன.

(“ட்ரம்ப்பை எதிர்க்கிறார் இம்ரான் கான்” தொடர்ந்து வாசிக்க…)