தரம் ஐந்து புலமைப்பரிசில் மாயையில் இருந்து பெற்றோர் விடுபட்டாக வேண்டும்

த ரம் ஐந்து புலமைப்பரிசில் திட்டம் என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் நடைமுறையில் உள்ளது. படிப்பில் ஆர்வமும் திறமையும் கொண்ட மாணவர்களை பத்து வயதிலேயே இனம் கண்டு, அம் மாணவர்கள் ஏழைகளாக இருப்பின் பண உதவி மூலமாகவும் சிறந்த பாடசாலைகளில் அம் மாணவர்களை சேர்ப்பதன் மூலமும் முழுமையான கற்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதன் ஊடாகவும் நாட்டின் எதிர்கால சுபீட்சத்துக்கு பங்களிப்பு செய்யக் கூடிய திறமைசாலிகளான இளைஞர்களை உருவாக்குவதே இந்த புலமைப் பரிசில் திட்டத்தின் நோக்கமாகும். எனினும் இருபது ஆண்டுகளுக்கு முன்னரெல்லாம் இப் புலமைப்பரிசிலை பெற்றோர் ‘நீயா நானா’ போட்டியாக எடுத்துக் கொள்ளவில்லை. தமது குழந்தைகள் தேர்ச்சி பெற்றால் மகிழ்ச்சி; தேர்ச்சி அடையாவிட்டால் பரவாயில்லை என்ற மன நிலையிலேயே பெற்றோரும் ஆசிரியர்களும் இருந்தனர்.

(“தரம் ஐந்து புலமைப்பரிசில் மாயையில் இருந்து பெற்றோர் விடுபட்டாக வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

பூநகரியில் ஒரு குளம் அமைக்கப்பட வேண்டும்

உவர் நீரையும், மண்ணையும் மாற்றி அமைப்பதற்கு

‘பூநகரியின் ஆறாயிரம் ஏக்கர் பயிர்ச்செய்கை நிலம் கடல் நீர் உட்புகுந்ததால் உவர் மண்ணாகவும், உவர் நீராகவும் மாறியுள்ளது. இங்குள்ள சில குளங்களை உள்ளடக்கி ஏழு கி.மீ. அணை ஒன்று அமைக்கப்பட்டு பெரிய குளம் ஒன்று அமைக்கப்படுமானால் உவர் நீராகக் காணப்படும் கிணறுகள் நன்னீராகும். இரு போகங்கள் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்’

(“பூநகரியில் ஒரு குளம் அமைக்கப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

புரட்சிகர இசை என்றாலே கத்தாரின் நினைவு வராமல் இருக்குமா?

நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்து – காங்கிரஸ் கட்சி தற்போது மேற்கொண்டுவரும் ‘அரசியல் சாசனப் பாதுகாப்பு இயக்கத்துக்கு’ தமது முழு ஆதரவையும் வழங்கப் போவதாக உறுதியளித்தார். (“புரட்சிகர இசை என்றாலே கத்தாரின் நினைவு வராமல் இருக்குமா?” தொடர்ந்து வாசிக்க…)

Me Too … எனக்கும் நடந்தது….! எனக்கும் இந்த கொடுமை நடந்தது….!!

(சாகரன்)

Me Too….. எனக்கும் நடந்தது…..! எனக்கும் இந்த கொடுமை நடந்தது…..!! என்று கடந்த ஒரு வருட காலமாக உலகில் ஏற்பட்டுவரும் பாலியல் பலாத்காரம் பற்றிய விழிப்பு பல பிரபல்யங்களை சுற்றி வந்து அது அமெரிக்கா என்று ஆரம்பித்து வட இந்தியா, கேரளா என்று ஆசியாவை நோக்கியும் நகர்ந்து இன்று தமிழ் நாடு வரை வந்துள்ளது. அமெரிக்க நீதித்துறை, வட இந்திய திரைப்பட பிரபல்யங்கள், கேரளத்து மத பீடங்கள், தமிழ்நாட்டு கவிஞர் என்று படர்ந்து அது இன்று அரசியலாக்கப்பட்டு மழுங்கடிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

(“Me Too … எனக்கும் நடந்தது….! எனக்கும் இந்த கொடுமை நடந்தது….!!” தொடர்ந்து வாசிக்க…)

நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு……….

……….. இன்னும் சேரி என்ற சொல்லும் வாழ்வும்
உங்கள் நாட்டில் இருப்பதால் சேரிப்பையன்
– மாரிசெல்வராஜ்

நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு
ஒரு சேரிப்பையனின் பகிரங்க கடிதம்:
வணக்கம் எனக்கு எட்டு வயசாகும்போது என் கண்முன்னே எங்கள் வீடு எரிந்துகொண்டிருந்த நடு இராத்திரி ஒன்றில் எழுத நினைத்த கடிதம் .வெகு காலதாமதம் ஆகிவிட்டது இந்த இருக்கையும் கணிப்பொறியும் எனக்கு கிடைப்பதற்கு .

(“நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு……….” தொடர்ந்து வாசிக்க…)

விழாவில் கலந்து கொள்ள வைரமுத்துவின் நிபந்தனை

கவிஞர் வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் கல்லூரி தமிழ் இலக்கிய விழாவில் உரை ஆற்ற அழைத்தோம்.
முதலில் அவர்களுடைய உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினோம். கவிஞரை நேரில் சந்திப்பதற்கு அனுமதி பெற்றோம். அவர்களை நேரில் சந்தித்தபோது அழைப்பிதழை வழங்கினோம். பின்பு விழாவினைப்பற்றிய விவரங்களை கேட்டறிந்தார் . அதன் பின் மகிழ்ச்சியோடு கலந்து கொள்வதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் தரப்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டது. அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றோம். இறுதியாக ஒரு நிபந்தனை அதில் அவர் எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற புத்தகத்தை 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார்கள். (“விழாவில் கலந்து கொள்ள வைரமுத்துவின் நிபந்தனை” தொடர்ந்து வாசிக்க…)

ஒன்று கூடிய முன்னாள் ஆயுதக் குழுக்களின் தலைவர்கள்!! யாழ் நகரில் கோலாகல விருந்து!!

முன்னாள் போராளியொருவரது குழந்தையின் பிறந்த நாள்(05/03/2018) விழாவிற்கு முன்னாள் ஆயுதக்குழுக்களது தலைவர்கள் ஒன்று திரண்டு பங்கெடுத்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான குறித்த நபர் தற்போது புளொட் அமைப்பின் முக்கியஸ்தராகியுள்ளார்.அவ்வகையில் ஒட்டுக்குழு புளொட் தலைவர் த.சித்தார்த்தன், மத்திய குழு உறுப்பினரும், மாமனிதர் சிவராம் கொலை முக்கிய சூத்திரதாரியுமான ஆர்.ஆர் எனப்படும் இராகவன் அவ்வமைப்பின் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்டோர் விழாவில் பங்கெடுத்திருந்தனர்.இதேவேளை பிளவுண்ட ஈபிஆர்எல்எவ் கட்சியின் அனைத்து தலைவர்களும் நீண்ட இடைவெளியின் பின்னர் ஒரே வைபவத்தில் பங்கெடுத்துள்ளனர். சுரேஸ்பிறேமசந்திரன், வரதராஜாப்பெருமாள்சுகு மற்றும் முன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய ஈ.பி.டி.பி செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா,அதிலிருந்து வெளியேறிய வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா என அனைவரும் வருகை தந்திருந்தனர்.இதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரான பசீர் காக்கா போன்றவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

(“ஒன்று கூடிய முன்னாள் ஆயுதக் குழுக்களின் தலைவர்கள்!! யாழ் நகரில் கோலாகல விருந்து!!” தொடர்ந்து வாசிக்க…)

துமிந்தவின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம், அதனை நிறைவேற்றுமாறு இன்று (11), உத்தரவிட்டுள்ளது.

(“துமிந்தவின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது” தொடர்ந்து வாசிக்க…)