‘யாழில் வன்முறைகள் குறைந்துள்ளன…?’

அதிக வன்முறைச் சம்பங்கள் இடம்பெறும் பிரதேசங்களின் தகவல்களை, இரகசியமான முறையில், தொலைபேசி மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக தெரிவிக்குமாறு, வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான்  பெர்ணான்டோ பொது மக்களைக் கேட்டுக்கொண்டார். அத்துடன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் ஓரளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் – தலைமைப் பொலிஸ் நிலையத்தில், இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

(“‘யாழில் வன்முறைகள் குறைந்துள்ளன…?’” தொடர்ந்து வாசிக்க…)

பாலியல் குற்றச்சாட்டு; தனியார் கல்வி நிலைய நிர்வாகிக்கு மறியல்

தர்மபுரம்  பகுதியில் இயங்கிவந்த தனியார் கல்வி நிலையத்தில், தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்துக்கு கல்வி கற்க வந்த மாணவிகள் சிலருக்கு , பாலியல் தொந்தரவு  மற்றும் பாலியல் துஷ்பிரயோக முயற்சி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட அதன் உரிமையாளரை,  எதிர்வரும்  30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி பதில் நீதவான் சிவபாலன், நேற்று (17) உத்தரவிட்டுள்ளார்.

“இனி எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கு”- வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட நடிகை அனன்யா உருக்கம்

சில நிமிடங்களில் வெள்ள நீர் கிடுகிடுவென அதிகரித்துவிட்டது, 2 நாட்களாக வெள்ளத்தில் சிக்கி மிகவும் வேதனைப்பட்டேன், இனி எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கிறது என்று மீட்கப்பட்ட நடிகை அனன்யா தெரிவித்துள்ளார். கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து கடந்த 10 நாட்களாக இடைவிடாது பெய்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாநிலத்தின் பெரும்பகுதியான மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

(““இனி எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கு”- வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட நடிகை அனன்யா உருக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part1)

மே 18எங்கள் தேசத்தில் எம் இனத்தை கொலைகளத்தில் பலி கொடுக்கப்பட்ட நாள் , இறந்த அனைவருக்கும் எனது அஞ்சலிகள். ஆனால் இது யாரால் ஏற்பட்டது ? போரின் இறுதி நாட்கள் எவ்வாறு இருந்தன?வன்னியில் என்ன நடந்தது? பிரபாகரன் இறுதியாக The Three Hundred என்ற ஆங்கில படத்தை பார்த்த பின்னர் எடுத்த முடிவு என்ன? கொஞ்சம் நீளமான பதிவு ஆனால் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு பதிவு, ஒரு 20 நிமிடங்கள் ஒதுக்கி இதனை முழுவதும் படிக்கவும்.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part1)” தொடர்ந்து வாசிக்க…)

காலத்தின் திசைவழிகள்: போராட்டங்களின் உலகமயமாக்கல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

வாழ்க்கைத் தெரிவுகள் எதையும் வழங்காதபோது, போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என, மக்கள் உணர்கிறார்கள். ஒருபுறம் செல்வம், சிலரது கைகளில் மலைபோல் குவிகையில், இருந்த கொஞ்சமும் மெதுமெதுவாகக் களவாடப்படுவதை அவர்கள் உணர்கையில், அவர்களுக்குப் போக்கிடம் எதுவும் இல்லை. அமைதியாக இருத்தல், பொறுமை காத்தல் போன்ற போதிக்கப்பட்ட அஹிம்சை வழிமுறைகள் எதுவுமே, பயனளிக்காது என்பதை உணர்ந்த பின்னர், மக்களால் என்ன செய்ய முடியும்?

(“காலத்தின் திசைவழிகள்: போராட்டங்களின் உலகமயமாக்கல்” தொடர்ந்து வாசிக்க…)

8 வருடங்களின் பின்னர் அப்பிளுக்கு ஏற்பட்ட இழப்பு

உலகின் முன்னணி ஸ்மார்ட் கைத்தொலைபேசி உற்பத்தி அப்பிள் (Apple) நிறுவனத்தின் மிகப்பிரபலமான “ஐ போன்” கைத்தொலைபேசி விற்பனையை பின்தள்ளி சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் வுஹாவி (Huawei) கைத்தொலைபேசி விற்பனையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

(“8 வருடங்களின் பின்னர் அப்பிளுக்கு ஏற்பட்ட இழப்பு” தொடர்ந்து வாசிக்க…)

தடுமாறும் ஈழத் தமிழர் அரசியல்

(கே. சஞ்சயன்)

“கருணாநிதி தன்னுடைய அரசியலைச் செய்தார்; எம்.ஜி.ஆர் தனது அரசியலைச் செய்தார்; ஜெயலலிதா தனது அரசியலைச் செய்தார்; ஈழத்தமிழர்கள் தங்களுடைய அரசியலைச் செய்யட்டும்”. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவை முன்னிறுத்தி, தமிழக – ஈழ உறவுகள் தொடர்பாக, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் எழுதியிருந்த கட்டுரை, இவ்வாறு தான் நிறைவு செய்யப்பட்டிருந்தது. இந்த இடத்தில், ஈழத் தமிழரின் அரசியல் என்ன, அது எவ்வாறு கையாளப்படுகிறது என்பது இங்குள்ளவர்களாலும், வெளியில் உள்ளவர்களாலும் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

(“தடுமாறும் ஈழத் தமிழர் அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….(Part 3)

எனது ‘எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த……’ தொடரின் இரண்டாவது பாகம் தேனீரை அடிப்படையாக கொண்டு எமது மலையக மக்களைப் பற்றி ஒரு விவாத அரங்கை திறந்து வைக்கும் என எதிர்பார்த்தேன் அப்படி ஒன்றும் பெரிதாக நடைபெறவில்லை சற்று ஏமாற்றம்தான். எனது எழுத்து இந்த முனையைத் திறக்கும் அளவிற்கு கூரியதாக இருக்கவில்லையோ? அல்லது எமது மலையக மக்கள் பற்றிய கரிசனை எம் மத்தியில் அவ்வளவாக இல்லையோ? என்று என்னை சிந்திக்க வைக்கின்றது.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….(Part 3)” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 2)

சிறப்பு அதிரடிப்படை 1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. காவல்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களை உள்ளீர்த்து இராணுவத்தின் கொமாண்டோ பயிற்சிகள் வழங்கப்பட்டன. 1984 ஆம் ஆண்டு இஸ்ரவேல் பாதுகாப்பு முகவரகம் ( Israel security Agency ) இன் சின் பெத் (Shin Beth) பயிற்றுவிப்பாளராக சிறப்பு அதிரடிப்படைக்கு நியமிக்கப்பட்டார். அவர் ஆயதப் பயிற்சிகளுடன் சிறிலங்காவிலுள்ள தமிழ்பேசும் மக்களிடையே எவ்வாறு பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலமாக விடுதலை இயக்கங்களை பலவீனப்படுத்தலாம் என்ற ஆலோசனை மற்றும் திட்டமிடல்களையும் முன்வைத்தார். அவ்வாலோசனைகள் சிறிலங்கா அரசிற்கு தேவையானதாகவும் அவசியமானதாகவும் இருந்தது. 

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 2)” தொடர்ந்து வாசிக்க…)

போர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், அரசாங்கப் படைகள் வெற்றி பெற்றதில், அந்த வெற்றியின் போது, நாட்டை ஆட்சி புரிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பங்கு என்ன? அவர், அந்த வெற்றிக்காகத் தாமாக எந்த முடிவையாவது எடுத்துள்ளாரா? தனிப்பட்ட முறையில் எந்தச் சண்டையிலாவது ஈடுபட்டுள்ளாரா?

(“போர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா?” தொடர்ந்து வாசிக்க…)