என் கண்ணில் நீர் கசிவை தராத கலைஞர் மறைவு!.

பன்முகத்தன்மை கொண்ட ஒரு முதியவர் தன் மூச்சை நிறுத்திக்கொண்டார். தமிழ்நாட்டின் ஐம்பது வருடத்துக்கு மேலான ஆழுமை அமரராகிவிட்டார். ஒரு வரலாற்று நாயகன் தன் பயணத்தை முடித்துக்கொண்டார். பள்ளிபருவத்திலேயே கையெழுத்து பிரதியாக தன் எழுத்து பணியை தொடங்கி நாடக கலைஞனாக பரிணமித்து திரையுலக ஜாம்பவானாக உச்சம் தொட்ட மனிதர் மௌனித்து விட்டார்.

(“என் கண்ணில் நீர் கசிவை தராத கலைஞர் மறைவு!.” தொடர்ந்து வாசிக்க…)

வெட்கம் இல்லையா?

1974 இல் சிவகுமாரன் தற்கொலைசெய்தார்.1975 இல் துரையப்பா தமிழ் துரோகி என சுடப்பட்டார்.2009 இல் புலிகள் அழிக்கப்பட்டனர்.தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி 35 வருடங்கள் போராடி இருக்கிறார்கள்.

(“வெட்கம் இல்லையா?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 1)

(Thiruchchelvam Kathiravelippillai)


எண்பதுகளின் முன்னர் தமிழ் பேசும் மக்களிடையே நெருங்கிய உறவு இருந்தது. தமிழர்கள் தமிழ் பேசுகின்ற மக்களாவர். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் மெதுவாக கூர்மையடையத் தொடங்கிய வேளையிலும் தமிழ் பேசும் மக்களிடையே நெருங்கிய உறவு நிலவியது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கூட பல நூறு முஸ்லிம் இளைஞர்களும் உறுப்பினர்களாகவும் இருந்தனர்.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 1)” தொடர்ந்து வாசிக்க…)

கலைஞரே சென்று வாருங்கள்

உன் தமிழ் என்னையும் கவர்ந்தது. உன் பேச்சு என்னை ஈர்த்து. உன் எழுத்து என்னையும் எழுதத் தூண்டியது. உன் (திராவிட)இயக்கம் எனக்கு பிரமிப்பை தந்தது. உன் அரசியல் 25 இலட்சம் ஈழத் தமிழ் மக்களின் மேல் உனக்கிருந்த பற்று அக்கறையை மாகாண சபையை கலைத்து விடு என்ற போது எனக்கு புரிந்தது. உன் வன்மம் என் தோழன் நாபாவின் கொலையில் எனக்கு பாடம் சொன்னது. உன் ஆழுமை தனி ஒருவனாக மட்டும் வென்று(ராஜீவ் கொலைக்கு பின்பு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில்) சட்டசபை சென்ற போது புரிந்தது.

(“கலைஞரே சென்று வாருங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

கலைஞரை, தேர்தல் அரசியலுக்கு அப்பால் கௌரவமாக வழியனுப்பி வைப்பதே தமிழர்களுக்கு அழகு

1983க்கும் 1987க்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் அவரை அடிக்கடி சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். அப்போது வாய் நிறைய அவர் பேராசிரியர் என்று அழைக்கும் பெருமையும் பெற்றேன். தமிழகம் என்னும் ஏழு கோடி மக்களைக் கொண்ட மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அவர் இலங்கையில் இருபத்தைந்து லட்சம் மக்களைக் கொண்ட வடக்கு கிழக்கு முதலமைச்சரான என்னை சரியாசனம் தந்து கௌரவித்த வரலாற்றைப் பெற்றேன்.

(“கலைஞரை, தேர்தல் அரசியலுக்கு அப்பால் கௌரவமாக வழியனுப்பி வைப்பதே தமிழர்களுக்கு அழகு” தொடர்ந்து வாசிக்க…)

கலைஞர் கருணாநிதி காலமானார்

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது. சூத்திரம் இணைத்தளத்தின் சார்பில் அவருக்கு எமது அஞ்சலி

OPERATION சுமந்திரன்!

(ப. தெய்வீகன்)
மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு மம்மல் பொழுதில் வீடு செல்லும்போது லோட்டன் வீதியில் காத்திருந்து நாயொன்று ஒவ்வொரு நாளும் கலைக்கும். அந்த நாயின் எரிச்சலை தவிர்த்துவிட்டு வேறுவீதி வழியாக வீட்டுக்கு போகமுடியாது என்றில்லை. ஆனாலும், நாயா நாமா என்றொரு கௌரவப்போரட்டாத்தில் போயும் போயும் அந்த நாயிடம் தோற்றுப்போவதா என்ற உள்மன எரிச்சல் எப்போதும் திரும்ப திரும்ப அந்த வீதி வழியாகத்தான் எங்களை வீரத்துடன் போகவைக்கும். அந்த நாயும் தவறாமல் எங்களை பார்த்து குலைக்கும். பிறகு கலைக்கும். அதற்கு ஊச்சு காட்டிக்கொண்டே இரண்டு கால்களையும் ஹாண்டிலுக்கு மேல் தூக்கிவைத்துக்கொண்டே எங்களுடன் வரும் சிலர் தப்பித்துவிடுவர். நானும் இன்னும் சிலரும் செருப்பை கழற்றிவிட்டு, கலைத்துக்கொண்டு வரும் “தோழருக்கு” இரண்டு அடிகொடுத்துவிட்டுப்போவதுதான் வழக்கம். அடியை ஞாபகம் வைத்துக்கொண்டு அந்த நாய், முதல்நாள் அடிக்காதவர்களையும் அடுத்தநாள் கலைக்கும். இவ்வளவும் ஏன், அடிகொடுத்தது நாங்கள்தான் என்பதை மறந்துகொண்டு அந்த வழியால் போகும் வேறுபலரையும் கலைத்துக்கொண்டோடும். மொத்தத்தில் அந்த நாயின் வேலை அந்த வீதியில் படுத்துக்கிடந்து இரவு பகல் பாராது போய் வருவோரை கலைப்பதும் குரைப்பதும்தான்.

(“OPERATION சுமந்திரன்!” தொடர்ந்து வாசிக்க…)

கறி மணக்கும்… (Part2)

(SLM ஹனிபா)

இந்த நினைவுகளின் தொடரில் ஒரு போதும் கற்பனைகளை அவிழ்த்து விடுவதில்லை என இதை எழுதுபவர் உங்களுக்கு வாக்குறுதியளிக்கிறார். இங்கே இன்றிலிருந்து விதானைப் பொண்டிலை சீமாட்டி என்று அழைக்கப்போகிறேன்.

(“கறி மணக்கும்… (Part2)” தொடர்ந்து வாசிக்க…)

உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா?

அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை.

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.

போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை.

(“உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா?” தொடர்ந்து வாசிக்க…)

கறி மணக்கும்…..(Part1)

(SLM ஹனிபா)

1970ம் ஆண்டு சுதந்திர இலங்கையின் 7வது பொதுத் தேர்தல். அக்கரைப்பற்றிலிருந்து வெலிக்கந்தைக்கு மாற்றம் பெற்று வந்த ஓரிரு மாதங்களில் நிகழ்ந்தது. இந்த நாட்களில் தான் பொலன்னறுவை மாவட்டத்தில் TA ஆக கடமையாற்றிய உமா மகேஷ்வரன் அவர்களையும் மூன்று வருடங்களுக்கு முதல் காலமான திரு. அம்பிகை பாகன் (கூபா முதலாளி) அவர்களையும் சந்திக்கிறேன்.

(“கறி மணக்கும்…..(Part1)” தொடர்ந்து வாசிக்க…)