தவறுகளை திருத்த முற்படுவதையே தவறாகப்பார்க்கும் ஒரு சமூகம்,

(Thamil Mathy)

தமிழீழ தேசத்தின் விடுதலைக்கான பயணத்தில் ஆயுதப்போராட்டத்திற்கான தேடலின் பிதாமகனும் இலங்கை இராணுவவத்தினரிடம் கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்கு சயனைட் உட்கொண்டு தனது உயிரை தன் இனவிடுலைக்காகவும், தன் தேசவிடுலைக்காகவும் கொடையாக கொடுத்த மாவீரன் பொன் சிவகுமாரன் அவர்கள் தமிழீழ மண்ணில் விதைக்கப்பட்ட நாள் இன்றாகும், எமது மூதாதையரும் எமது வழிகாட்டியுமான இந்த மாவீரருக்கு தமிழீழ மண்ணும் மக்களும் தமது வீரவணக்கத்தை தெரிவிக்கட்டும்,

(“தவறுகளை திருத்த முற்படுவதையே தவறாகப்பார்க்கும் ஒரு சமூகம்,” தொடர்ந்து வாசிக்க…)

கிண்ணத்தைத் தக்க வைக்குமா ஜேர்மனி?

(Shanmugan Murugavel)
கால்பந்தாட்ட உலகக் கிண்ணம், 21ஆவது தடவையாக ரஷ்யாவில் அடுத்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கின்ற நிலையில், உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றக் கூடிய அணிகளிலொன்றாக, ஜேர்மனி காணப்படுகின்றது.

(“கிண்ணத்தைத் தக்க வைக்குமா ஜேர்மனி?” தொடர்ந்து வாசிக்க…)

‘பிளவு இல்லை’

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் எவ்விதமான வேறுபாடுகளும் இன்றி, புதிய அதிகாரிகள் தெரிவு இடம்பெற்றது என்று தெரிவித்த கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் 45 நாட்களுக்குள் நிறைவடையும் எனவும் கட்சிக்குள் எவ்விதமான பிளவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

(“‘பிளவு இல்லை’” தொடர்ந்து வாசிக்க…)

அண்ணன் சிவகுமாரன்.

(Amirthalingam Baheerathan)

திரு பொன்னுத்துரை சிவகுமாரன் தமிழரின் உரிமைப் போராட்டத்தில் நிரந்தரமாக நிலைத்துவிட்ட ஒரு பெயர். அன்றைய கால கட்டத்தில் ஆயுதப் போராட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பெயர். ஆனால் ஜனநாயக போராட்டத்தை மதித்து அதன் பங்கையும் உணர்ந்து போராடப்புறப்பட்ட இளைஞனின் அடையாளம். உரும்பிராய் மண் பெற்றெடுத்த புனித ஆத்மாவின் பெயர்.

(“அண்ணன் சிவகுமாரன்.” தொடர்ந்து வாசிக்க…)

48 வது இலக்கிய சந்திப்பு – ரகறொன்ரோ – கனடா

(சாகரன்)

இரண்டு நாள் நிகழ்வாக ஜுன் 2, 3ம் திகதிகளில் நடைபெற்று முடிந்திருகின்றது. பார்வையாளனாக கலந்துகொள்ளும் வாய்பு எனக்கு கிடைத்தது. கடந்த வருடம் மலையகத்தில் நடைபெற்ற போது நான் இலங்கையில் நின்றிருந்து போது நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்ளும் விருப்பு இறுதியாக நேரடிக் காணொளியில் காணும் வாய்பிற்குள் சுருங்கிப் போய்விட்ட வருத்தத்தை இம்முறை நீக்கிவிட்ட உணர்வு எனக்குள் ஏற்பட்டது.

(“48 வது இலக்கிய சந்திப்பு – ரகறொன்ரோ – கனடா” தொடர்ந்து வாசிக்க…)

தமிழினத்தின் முடிவுறாத சாபம்; அதுவே தென்னிலங்கையின் வரம்

(காரை துர்க்கா)
“முல்லைதீவு மாவட்டத்தின் கொக்கிளாய், நாயாறு, சாலை, சுண்டிக்குளம் எனப் பல பிரதேசங்களைத் தாண்டிய, தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பு, தற்போது யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு வரை சென்று விட்டது. இப்படியே சென்றால், யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்துக்கு அருகில் விகாரை அமையப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் வடக்கு மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார்.

(“தமிழினத்தின் முடிவுறாத சாபம்; அதுவே தென்னிலங்கையின் வரம்” தொடர்ந்து வாசிக்க…)

முகமட் அலியின் நினைவு தினம் – 3 யூன்

 10000 மைல்களுக்கு அப்பால் போய் அந்த மண்ணிற மனிதர்கள்மீது (வியட்நாம் மீது) அமெரிக்க இராணுவ உடையணிந்து குண்டுகள் வீசவும் படுகொலை செய்யவும் என்னைக் கேட்கிறார்கள். இங்கு கறுப்பின மக்களை நாய்போல நடாத்தவும் அவர்களது மனித உரிமைகளை மறுக்கவும் செய்கிற வெள்ளை எசமானர்கள் உலகம் முழுமையும் நிற மனிதர்கள் மீதான தமது மேலாதிக்கத்தை நிறுவ முனைகிறார்கள். இவர்களுக்காக அந்த ஏழை மக்களின் வீடுகளை எரிக்கவும் படுகொலை செய்யவும் என்னால் முடியாது. இது முடிவுக்கு வரவேண்டும்.

(“முகமட் அலியின் நினைவு தினம் – 3 யூன்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் விசுவானந்ததேவன் நூல் பற்றிய எஸ்.கே. விக்னேஸ்வரனின் குறிப்புகளுக்கு, பா.பாலசூரியனின் எதிர்வினை

ஏப்பிரல் மாதம் 25ந் திகதி தங்களது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ‘எதுவரை’ இதழ் 21 இல், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகிய ‘1952-1986 தோழர் விசுவானந்ததேவன்’ நினைவு நூல் பற்றி எஸ்.கே.விக்கினேஸ்வரன் எழுதிய எதிர்வினைக் குறிப்புகளைப் படித்தேன்………..

(“தோழர் விசுவானந்ததேவன் நூல் பற்றிய எஸ்.கே. விக்னேஸ்வரனின் குறிப்புகளுக்கு, பா.பாலசூரியனின் எதிர்வினை” தொடர்ந்து வாசிக்க…)

‘சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலளிக்க முயல வேண்டாம்’

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரரின் 76ஆவது பிறந்தநாள் வைபவத்தில் கலந்துகொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரைக்கு, எவ்வகையிலும் பதிலளிப்பதற்கு முயல வேண்டாமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்டளையிட்டுள்ளார்.

(“‘சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலளிக்க முயல வேண்டாம்’” தொடர்ந்து வாசிக்க…)