குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா தேவியை நான் பார்த்தது கூட இல்லை. எனக்கு 78 வயதாகிறது. பேரன் பேத்தி எடுத்த என்னை யாரும் குற்றம் சாட்ட முடியாது என்று ஆளுநர் பன்வாரிலால் பேட்டி அளித்தார். பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு வலை விரிக்கும் வகையில் பேசி சிக்கிய பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை குறித்தும் நிர்மலா தேவி பேசியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.