(மீன்பாடும் தேனாடான்)
கடந்த கால உள்நாட்டு யுத்தத்தில் பல அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.அதில் பல தமிழ் தலைவர்களை புலி பயங்கரவாதிகளே கொன்றனர். 2004ன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் புலிகள் இரண்டாக பிளவு பட்டு நின்றபோது இதுபோன்ற பல கொலைகள் இடம் பெற்றது. அப்போது தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் கிழக்கு மாகாணத்தில் கொல்லப்பட்டனர். குறிப்பாக 2004 பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளாராக போட்டியிட்ட இராஜன் சத்தியமூர்த்தி 2004 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளாராக போட்டியிட்டு வென்ற பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி இராசநாயகம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராச சிங்கம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, மட்டகளப்பு தொழில் நுட்பகல்லூரி அதிபர் கைலைநாதன் என இப்பட்டியல் நீளும்.