அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோ

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் வெளியிட்டார்.  20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்தபடி பழச்சாறு அருந்துவது போல் காட்சிகள் உள்ளன.
வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலிடம் செய்தியாளர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினர். (“அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோ” தொடர்ந்து வாசிக்க…)

நாபா என்ற மானிடன்

அந்த மனிதர் மிக மிக எளிமையானவர். மனித குலத்தின் மகத்தான லட்சியங்களை கனவுகளில் நிறைத்தவர்.
அந்த கனவுகள் நபாவை மானிடவிடிவு என்னும் மகத்தான தேடலுடன் ஒன்றுரை தசாப்தங்கள் அலைய வைத்தது.
எளிமையும் ,சமூக மாற்றம் கருதிய பேரார்வமும்- சர்வதேச சகோதரத்துவமும் நபாவின் நெஞ்சில் நிரம்பி வழிந்தன.
மாபெரும் தலைவர் மாத்திரமல்ல . மனிதர்களின் சின்ன சின்ன விடயங்களையும் புரிந்து கொண்ட மானிடன்.
கனிவாகப் சத்தமில்லாமல் பேசுவது -நடந்து கொள்வது- சிறியோர் பெரியோர் என்ற பதகளிப்புக்கள் இல்லாதது- எல்லாவற்றையும் அமைதியாக ஆரவாரமில்லாமல் நோக்குவது
வெறுப்பு –காழ்ப்புணர்வு இவற்றின் சுவடுகளைக் கூட காணமுடியாது.
இடையறாத தன்னலமற்ற உழைப்பு- தோழமை- வழிகாட்டல் இது நாபா என்ற மானிடன்.
(“நாபா என்ற மானிடன்” தொடர்ந்து வாசிக்க…)

பரா மாஸ்டர் என அழைக்கப்படும் தோழர் பரா குமாரசாமி

பரா மாஸ்டர் என அழைக்கப்படும் தோழர் பரா குமாரசாமி 1960க்குப் பின்னான இலங்கை இடதுசாரி, மற்றும் தொழிற்சங்க வரலாற்றுக் காலகட்டம் தொடக்கம் புகலிட அரசியல் -சமூக -கலை- பண்பாட்டு துறை , எழுத்து- செயற்பாட்டுத் தளம் வரை பங்களித்த அனுபவமிகு மூத்த மனிதர்களில் ஒருவர்.

(“பரா மாஸ்டர் என அழைக்கப்படும் தோழர் பரா குமாரசாமி” தொடர்ந்து வாசிக்க…)

ஊருக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை – 09

மக்களுடைய நம்பிக்கைகளைக் கட்சிகளும் தலைமைகளும் சிதைத்து விட்டன. இதனால், இப்பொழுது மக்கள் தலைமைகளை நம்பத் தயாராக இல்லை. கட்சிகளை நம்பத் தயாராக இல்லை. சின்னங்களை நம்பத் தயாராக இல்லை. இவற்றுக்கு வெளியேதான் தங்களுக்கான அரசியலை அவர்கள் தேடுகிறார்கள். உண்மையும் அதுதான். மக்களுக்கான அரசியல் என்பது கட்சிகளுக்கும் பாரம்பரிய சின்னங்களுக்கும் உளுத்துப்போன தலைமைகளுக்கும் வெளியேதான் உண்டு. இதை இன்னும் ஊடகங்கள் கண்டு கொள்ளாதிருப்பது அவற்றின் வரலாற்றுத் துயரமாகும்.

(“ஊருக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை – 09” தொடர்ந்து வாசிக்க…)

மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!

காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்… ஆனால்…!

அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் . அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்கா ட்டுவார் (“மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!” தொடர்ந்து வாசிக்க…)

கேரளாவில் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஹைடெக் மருத்துவமனை

(கா.சு.வேலாயுதன்)

தமிழகத்தில், கூட்டுறவு சங்கங்களை அரசில்வாதிகள் சம்மணம்போட்டு அமர்ந்து சம்பாதிக்கும் மையங்களாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், பக்கத்து மாநிலமான கேரளத்தில் கூட்டுறவு சங்கத்தின் மூலம், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான வசதிகள் கொண்ட ஒரு மருத்துவமனையை செம்மையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

(“கேரளாவில் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஹைடெக் மருத்துவமனை” தொடர்ந்து வாசிக்க…)

மலையகத்தில் இராமையாவுடன் வரதராஜப்பெருமாள்

அன்று தோழர் வரதராஜ பெருமாள்வடகீழ் மாகாணமுதலமைச்சராக இருந்த சமயம். மலைநாட்டில் செங்கொடி சங்கம் அதன் பொதுச் செயலாளர் ஓ.ஏ.இராமையா தலைமையில் அட்டனில் அவருக்கு பெரும் வரவேற்பளித்தது. அட்டன் டன்பார் கிரௌண்டில் ஹெலியில் வந்திறங்கிய அவர் வரவேற்பு இடம்பெற்ற அட்டன் நகரசபை மண்டபத்திற்கு வாகனத்தில் வந்தார. சுமார் ஒரு கி.மீட்டருக்கு அதிகமான தூரம். பாதுகாப்பிற்கு வழி நெடுக, அட்டன் நகரெங்கும் ஈ.பீ.ஆர்.எல்.எவ் இராணுவம் நிறுத்தப்பட்டிருந்து. வாழ்வில் முதன் முதலாக ஒரு தமிழ் இராணுவத்தைக் கண்ட மக்கள் உளம் பூரித்துப் போனார்கள். வரவேற்பில் இராமையாவுடன் நானும் முன்னின்றேன். தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க தயங்கமாட்டேன் என தோழர் வரதராஜ பெருமாள் மிகவும் ஆக்ரோசமாக முழங்கினார். தோழர். இராமையா இன்று இல்லை. என்றாலும், அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே……..

– (Muthulingam Vanni Kathan)

(“மலையகத்தில் இராமையாவுடன் வரதராஜப்பெருமாள்” தொடர்ந்து வாசிக்க…)

தேவானந்தா காட்டிய பாதையில்….

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் திடீரென தேர்தற் கால ஞானோதயம், அருளோதயம், சிந்தனாதோதயம் என்ற எதோ ஒன்றைப் பெற்று விட்டதைப்போல, ஊரூராகச் சென்று வீதி அபிவிருத்திப் பணிகளைச் செய்கிறார்கள். குளங்களைப் ஆழப்படுத் வேண்டும். வாய்க்கால்களையும் வடிகால்களையும் சீரமைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். கிராம அபிவிருத்திச் சங்கம், சனசமூக நிலையம் போன்றவற்றைப் புனரமைக்க உதவுகிறார்கள். விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்குகிறார்கள். இப்படிப் பல நற்பணிகள் அவசர கதியில் மேற்கொள்ளப்படுகின்றன.

(“தேவானந்தா காட்டிய பாதையில்….” தொடர்ந்து வாசிக்க…)

போடு புள்ளடி வீட்டுக்கு நேரே…????

அன்றைய தேர்தல் காலங்களில் தெருவெங்கும் ஒலித்தகோசம்.இப்போது மீண்டும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
இந்தப் பாட்டு கோவில் உடுக்கு இசைபோல சகல தமிழனையும் கண்மண் தெரியாமல் ஆட வைக்கும். தமிழர்களை ஏமாற்றும் கலை அறிந்த கட்சி.இந்தக் கட்சியை தமிழர்களிடம் இருந்து அகற்றுவது சுலபமான காரியம் அல்ல.தமிழர்களிடம் அரசியல் செய்ய கொள்கைகள் எதுவும் தேவையில்லை. இனவாதம், மதவாதம், சாதிவாதம் இவைகளை இலகுவில் உள்வாங்கும் இனம் தமிழினம்.

(“போடு புள்ளடி வீட்டுக்கு நேரே…????” தொடர்ந்து வாசிக்க…)