மனிதத்தை தொலைத்து விட்டு நாம் எங்கே செல்கிறோம்…….!!

(Arunthathy Gunaseelan)

கொலைகளும்,கொள்ளைகளும், குண்டுவெடித்தலும் மட்டுமே மனிதநேயமற்ற செயல் என நாம் நினைக்கிறோம். ஆனால்
இதை விடக் கேவலமானது சகமனித நேசிப்பின்றி,மனிதரால் பின்பற்றப்படும் சில நம்பிக்கைகளும், செயல்களும், பழக்கவழக் கங்களும் தான் உறவுகளே…….!!

செவ்விந்தியக் காந்தி.

(Rathan Chandrasekar)
பல்லாயிரம் செவ்விந்தியரைக் கொன்று – அவர்களது ரத்தச்சேற்றில் எழுப்பப்பட்ட
அவலக் கோபுரம்தான் அமெரிக்கா .

கொலம்பஸின் கண்களில் பட்டதுதான்
இந்த மண் செய்த பெரும் பாவம்.

இனங்களின் இணைவு மட்டுமே இனக்கலவரங்களை தடுத்து நிறுத்தும்

இலங்கை மீண்டும் எரிகிறது. அநகாரிக தர்மபால போன்ற இனவெறிபிக்குகள் எடுத்துக் கொடுத்த சிங்கள பவுத்த நாடு என்னும் இனவெறிக் கோட்பாட்டை டி.எஸ் சேனநாயக்கா, ஜெ.ஆர் ஜெயவர்த்தனா என்னும் மக்கள் விரோதிகள் தூக்கிப் பிடித்து மூட்டிய சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான தீ தொடர்ந்து எரிகிறது. பெரும்பான்மை சிங்கள மக்களின் மனதில் தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும் எதிரிகள் என்று சுயநல அரசியல்வாதிகள் தொடர்ந்து விதைத்த வெறுப்பினால் இலங்கை எரிகிறது.

புலிகளிடமிருந்து சிறிலங்காவை காப்பாற்றிய மகிந்த! மைத்திரியிடமிருந்து ஜனநாயகத்தை காப்பாற்றி ரணில்! இந்த இருவரிடமிருந்தும் சஹ்ரான் போன்றவர்களையே காப்பாற்றி வைத்திருந்த மைத்திரி!

(ப. தெய்வீகன்)
கடந்த இரண்டு வாரங்களாகவே முஸ்லிம் மக்களின் வீடுகள், மசூதிகள் போன்றவற்றில் சிறிலங்கா பொலீஸாராலும் சிறப்பு படையினராலும் தேடித்தேடி கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட கத்திகள் மற்றும் வாள்களைவிடவும் கூரான ஆயுதங்களோடு அந்த தம்பிமார் வீதி வீதியாக கத்தியபடி வருகிறார்கள். கடைகளின் மீது கற்களை வீசியெறிந்து உடைந்து நொருங்கும் கண்ணாடி சத்தங்களில் ஆனந்தம் கொள்கிறார்கள். மேலும் மேலும் சத்தமிட்டவாறு கையில் கிடப்பவற்றையெல்லாம் வீசியெறிந்து இயன்றளவு சேதம் செய்கிறார்கள். வீடு வீடாகவும் வீதி வீதியாகவும் கால் நடையாகவும் வாகனங்களிலும் சென்று கண்டதையும் உடைக்கிறார்கள். தீயிட்டு கொழுத்துகிறார்கள். கடைகள், மசூதிகள், வீடுகள் எல்லாம் ஒங்கிய ஒளிப்பிழம்புகளாக இரவெல்லாம் எரிந்துகொண்டிருந்தன.

யாரு கண்ணுபட்டுப் போனதோ….? அந்த மாதிரி இருந்த ஊரு இந்த மாதிரிப் போனதே…..?

(சாகரன்)

2009 ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுற்று சில வருடங்களில் கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் என்றும் தமிழர் பிரதேசம் எங்கும் கட்டுமானங்கள் நடைபெற்றன. இலங்கையின் ஏனைய பாகங்களுடன் தமிழ் பிரதேசங்கள் வேக வழிச்சாலைகள் உருவாக்கப்பட்டன. பின்பு படிப்படியாக வீதித் தடைச் சோதனைகளும் அகற்றப்பட்டன. புலம் பெயர் தேசத்து உறவுகள் தாயகம் திரும்பி தமது ஊர்களுக்கு சென்று தாம் நிரந்தரமாக தங்கிவிடும் புலம் பெயர் தேசத்திற்கு திரும்பி வந்ததும் ஊர் எப்படி இருக்கின்றது என்றதற்கு ‘….அந்த மாதிரி இருக்குது ஊர்…” என்று கூவி மகிழ்ந்ததற்குள் இந்த பெரும் தெரு வேக இணைப்புகளும் மக்களின் அன்றாட தேவைகளுக்கான அபிவிருத்திகளும் தங்கு தடையற்ற வடக்கு கிழக்கிற்கு அப்பால் தெற்கிற்கும் பயணம் செய்து இடங்களைப் பார்த்து வருவதற்கும் உரிய இயல்பு நிலையொன்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ளது என்ற செய்திகளே ஒழித்திருந்தன.

என் உணர்வுகளை பிரபலித்திருக்கும் முகிலன்

(Saakaran)

நான் பல முஸ்லீம் நண்பர்கள் நண்பிகளோடு பழகியிருக்கிறேன்.

அவர்கள் ஒரு தடவையேனும் வார்த்தைகளால் கூட என்னை காயப்படுத்தவில்லை…

பெண்கள் என்றால் முகத்தை மூடி இருப்பார்கள் 
பெரும்பாலான ஆண்கள் தாடி வைத்திருப்பதால் பாதி முகத்தை மூடி இருப்பார்கள் . ஆனாலும் அவர்கள் மனசைத் திறந்து என்னோடு பழகினார்கள்.

நான் எந்த மார்க்கத்தையும் வெறுப்பதில்லை அது ஒவ்வொருவரின் விருப்பத்தை பொறுத்தது.

அவர்கள் எல்லோருடைய வார்த்தைகளிலும் அல்லா ஒருவனே இறைவன் என்ற நம்பிக்கை மட்டுமே தெரிந்தது.

பொதுவாக என் வாழ்க்கையில் இன்னொருவருக்காக நான் நேரத்தை செலவழிப்பது மிகக் குறைவு.

அவர்கள் நாள் ஒன்றுக்கு பலமுறை தொழுவதை பார்த்து நான் பிரமித்திருக்கிறேன்.

நோன்பு காலங்களில் ஓரிரு தடவை பள்ளிவாசல் சென்று இருக்கிறேன்.

அவர்கள் வீடுகளுக்கு செல்லும்போது வரவேற்பும் உபசரிப்பும் மறக்கவே முடியாதது.

என் மதத்தைப் பற்றி அவர்கள் ஒருபோதும் தாழ்வான கருத்துக்களை பகிர்ந்ததில்லை…

அவர்களின் மத பரப்புரைகளை என்னில் திணித்ததும் இல்லை…

நான் எப்படி அவர்களை சகமனிதர்களாக பார்த்தேனோ அவர்களும் அதே போலவே என்னை நேசித்தார்கள்.

என் துயரங்களில் பங்கு எடுத்திருக்கிறார்கள் என் சந்தோசங்களை மிக படுத்தியிருக்கிறார்கள்.

குர்ஆன் வாசிப்பதை வழமையான பழக்கமாக வைத்திருந்தார்கள்.

ரம்ஜான் காலங்களில் என்னையும் கொண்டாட்டங்களில் இணைத்துக் கொள்வார்கள்.

கடவுளிடத்தில் பயமும் உயிர்களிடத்தில் அன்பும் அவர்களின் இஸ்லாமில் நான் பார்த்தேன்.

இப்போதைய சூழ்நிலையில் தயவு செய்து எல்லா முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக பார்க்காதீர்கள் !

நெடுந்தீவு முகிலன்

சீமானுக்கு யாரும் சொல்லுங்கப்பா….?

(Kanniappan Elangovan)


தமிழ் சமூகம் அறிவியல், சமூக அறிவியல் இரண்டிலும் முட்டாள் இல்லை என இந்த சீமானுக்கு யாரும் சொல்லுங்கப்பா… Big Bang theory. ஆதிபகவன் என்றெல்லாம் தமிழின் பெயரால், வள்ளுவன் பெயரால் வெட்கமற்ற உளரல்கள் கேட்க சகிக்கவில்லை. இந்த தொழில்நுட்ப உலகத்தில் இப்படி மேடை ஏறி முட்டாள் தனத்தை அரங்கேற்றுவது யாரை அழிக்க? திமுக, அஇஅதிமுக வேண்டாம் என இவர்கள் கிளம்பியது பிரபாகரன் மரணித்த பிறகல்லவா?

‘சஹ்ரான் உயிர் வாழ்கிறார்’ என்ற கதையின் பின்புலம்

(இலட்சுமணன்)

சஹ்ரான் நாட்டைவிட்டுச் சென்றுவிட்டார் என்று ஒரு கதை, இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அவர் தற்கொலைத் தாக்குதலில் இறந்துவிட்டார் என்று, கடந்த வாரம் வரை சொல்லிக் கொண்டிருந்த பாதுகாப்புத் தரப்பு, திடீரென்று இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கியிருக்கிறது.

எமது குழந்தைகளின் எதிர்காலம்: வளமா, வங்குரோத்தா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
குழந்தைகளின் எதிர்காலம் முற்றிலும் அவர்களின் கைகளில் இல்லை; அவர்களின் பெற்றோரின் கைகளிலும் இல்லை; அவர்கள் வாழும் சமூகத்திடமும் இல்லை. மாறாக, உலகத்தின் ஒவ்வோர் மூலையில் இடம்பெறும் சம்பவங்கள்தான், அவர்களின் வாழ்வில் தாக்கம் செலுத்துமாறு, உலகமும் உலக அரசியலும் மாறிவிட்டன.