OPERATION சுமந்திரன்!

(ப. தெய்வீகன்)
மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு மம்மல் பொழுதில் வீடு செல்லும்போது லோட்டன் வீதியில் காத்திருந்து நாயொன்று ஒவ்வொரு நாளும் கலைக்கும். அந்த நாயின் எரிச்சலை தவிர்த்துவிட்டு வேறுவீதி வழியாக வீட்டுக்கு போகமுடியாது என்றில்லை. ஆனாலும், நாயா நாமா என்றொரு கௌரவப்போரட்டாத்தில் போயும் போயும் அந்த நாயிடம் தோற்றுப்போவதா என்ற உள்மன எரிச்சல் எப்போதும் திரும்ப திரும்ப அந்த வீதி வழியாகத்தான் எங்களை வீரத்துடன் போகவைக்கும். அந்த நாயும் தவறாமல் எங்களை பார்த்து குலைக்கும். பிறகு கலைக்கும். அதற்கு ஊச்சு காட்டிக்கொண்டே இரண்டு கால்களையும் ஹாண்டிலுக்கு மேல் தூக்கிவைத்துக்கொண்டே எங்களுடன் வரும் சிலர் தப்பித்துவிடுவர். நானும் இன்னும் சிலரும் செருப்பை கழற்றிவிட்டு, கலைத்துக்கொண்டு வரும் “தோழருக்கு” இரண்டு அடிகொடுத்துவிட்டுப்போவதுதான் வழக்கம். அடியை ஞாபகம் வைத்துக்கொண்டு அந்த நாய், முதல்நாள் அடிக்காதவர்களையும் அடுத்தநாள் கலைக்கும். இவ்வளவும் ஏன், அடிகொடுத்தது நாங்கள்தான் என்பதை மறந்துகொண்டு அந்த வழியால் போகும் வேறுபலரையும் கலைத்துக்கொண்டோடும். மொத்தத்தில் அந்த நாயின் வேலை அந்த வீதியில் படுத்துக்கிடந்து இரவு பகல் பாராது போய் வருவோரை கலைப்பதும் குரைப்பதும்தான்.

(“OPERATION சுமந்திரன்!” தொடர்ந்து வாசிக்க…)

உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா?

அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை.

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.

போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை.

(“உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா?” தொடர்ந்து வாசிக்க…)

கறி மணக்கும்…..(Part1)

(SLM ஹனிபா)

1970ம் ஆண்டு சுதந்திர இலங்கையின் 7வது பொதுத் தேர்தல். அக்கரைப்பற்றிலிருந்து வெலிக்கந்தைக்கு மாற்றம் பெற்று வந்த ஓரிரு மாதங்களில் நிகழ்ந்தது. இந்த நாட்களில் தான் பொலன்னறுவை மாவட்டத்தில் TA ஆக கடமையாற்றிய உமா மகேஷ்வரன் அவர்களையும் மூன்று வருடங்களுக்கு முதல் காலமான திரு. அம்பிகை பாகன் (கூபா முதலாளி) அவர்களையும் சந்திக்கிறேன்.

(“கறி மணக்கும்…..(Part1)” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு உண்மையான அக்கறை

கருணாநிதி சுகவீனமுற்ற நிலையில் அவரை துரோகியாக்கி அரசியல் ஆதாயம் தேட சிலர் முனைந்தனர்.சிலர் அறிவீனம் காரணமாக அவரை துரோகி என்று எழுதினார்கள்.இதனைத் தொடர்ந்து நண்பர் ராஜ் செல்வபதி வடக்கு கிழக்கு மாகாண சபையின் இறுதிக்காலம் தொடர்பான ஒரு பதிவினை எழுதிவருகிறார்.இது தொடர்பாக நண்பர் யோகா வளவனும் ஏற்கனவே சில தகவல்களை பதிவு செய்திருந்தார்.

(“ஒரு உண்மையான அக்கறை” தொடர்ந்து வாசிக்க…)

வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வர சிந்தனை மாற்றத்தை எற்படுத்தி ஒரு பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

(சாகரன்)

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வரும் வன்முறைகளை கட்டுப்படுத்தி இல்லாமல் செய்ய இளைஞ்கள் மத்தியில் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு பண்பாடு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்கு சகலவும் உழைக்க வேண்டும் குரல் கொடுக்க வேண்டும் பல்கலைக் கழகம் பாடசாலை கிராமத்தில் உள்ள சனசமூக நிலையங்கள் விளையாட்டுக் கழகங்கள் கோவில் பரிபாலன சபைகள் என்று எல்லாஇடங்களிலும் சிந்தனையில் மாற்றத்தை உருவாக்க செயற்பட வேண்டும்.

(“வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வர சிந்தனை மாற்றத்தை எற்படுத்தி ஒரு பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

போராட்ட அமைப்புக்களில் தனித்துவமான அரசியலில் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது ஓர் நோக்கு!

அன்பார்ந்த போராளிகளே, ஆயுதரீதியாக போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்களே அனைவருக்கும் வணக்கம்! 1983ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் எழுச்சியுற்ற போராட்ட அமைப்புக்களின் வளர்ச்சியின் பின்னாலும், துரதிஷ்டவசமாக 1986ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் போராட்ட அமைப்புக்களுக்கிடையே, ஏற்பட்ட முரண்பாடுகளில் சிதைந்துபோன போராளிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு எவ்வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று வினவினால், இல்லை என்ற பதிலே விடையாகக் கிடைக்கிறது. கண்துடைப்புக்காக, இன்னுமொருவரின் வற்புறுத்தலுக்காக இதயசுத்தியற்ற, தொலைநோக்குப் பார்வையற்ற ஓர் ஒற்றுமையே மேலெழுந்தவாரியாகக் காணப்பட்டது. (“போராட்ட அமைப்புக்களில் தனித்துவமான அரசியலில் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது ஓர் நோக்கு!” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணத்திற்கு மேலதிக பொலிஸ்

அன்று பொதுவாக வன்முறைகள் அற்ற பிரதேசம் என அழைக்கப்பட்ட யாழ் மாவட்டம் உண்மையிலேயே வன்முறைகள் மலிந்த பூமியாகவே இருந்தது.இந்த வன்முறைகளின் பின்னணியில் யாழ்ப்பாண மேல்தட்டு வர்க்கம் துணையாகவும் காவல் துறை பக்க பலமாகவும் இருந்தது.இவை செய்துகள்களின் வெளிவருவது இல்லை.

(“யாழ்ப்பாணத்திற்கு மேலதிக பொலிஸ்” தொடர்ந்து வாசிக்க…)

காத்தான்குடி படுகொலைகள்

(Vijay Baskaran)
புலிகள் அமைப்பின் கொலைவெறியின் உச்சமாக நடந்தகொலைகள்.கிழக்கே இந்து இஸ்லாமிய மக்களிடையே பிளவை ஏற்படுத்த நடந்த படுகொலைகள்.ஒரு போராட்டத்தின் பெயரால் அறுபதுக்கும் அதிகமான குழந்தைகள் உட்பட அதுவும் அப்பாவிகளை தொழுகையின்போது சுட்டுக் கொன்றார்கள்.

(“காத்தான்குடி படுகொலைகள்” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…… (Part 1)

எனது தமிழ்நாட்டுப் பயணத்தை முடித்து சென்னை விமான நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட நடுச்சாமம் கட்டுநாயக்கா விமாநிலையத்தை சென்றடைந்தேன். சென்னை விமான நிலையத்திலிருக்கும் போது என் நீண்டநாள் சகாவின் புதல்வி இலங்கை அரசு, புலிகள் என்ற இரு தரப்பு பாதுகாப்பு பிரச்சனைகளால் அகதிகளாக இந்தியாவிற்கு இடம் பெயர்ந்து வளர்ந்து படித்து தற்போது இந்தியாவின் விமானப் போக்குவரத்தில் விமானியாக (இவர்தான் இலங்கையின் முதல் தமிழ் பெண் விமான ஓட்டியென்றே எண்ணுகின்றேன்) வேலை செய்வது இடையிடையே வந்து போனது.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…… (Part 1)” தொடர்ந்து வாசிக்க…)

பாகிஸ்தான் தேர்தல் 2018: இராணுவ ஜனநாயகம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஜனநாயகம் பற்றி நாம் நிறையவே பேசுகிறோம். தேர்தல் அதன் அளவுகோலாயுள்ளது. தேர்தல்களின் மூலம் தெரியப்படும் தலைவர்களை, நாம் ஜனநாயகத்தின் பகுதியாகப் பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். இதனால், தேர்தல்களில் பெறப்படும் வெற்றிகளுக்கான பெறுமதி அதிகம். ஆனால், தேர்தல்கள் உண்மையில் ஜனநாயகத்தின் அளவுகோலாக முடியுமா என்ற கேள்வி, நெடுங்காலமாக வினவப்பட்டு வந்துள்ளது.

(“பாகிஸ்தான் தேர்தல் 2018: இராணுவ ஜனநாயகம்” தொடர்ந்து வாசிக்க…)