ஈழ வரை படத்துடன்..! கொழும்பில் ஊர்வலம்..?

ஆண்டு 1978 . அப்போது எனது வயது 22. கொழும்பு பல்கலைக்கழக முதலாம் ஆண்டில் காலடி வைத்து மிக சிறிய காலத்துள் கிழக்கில் பெரும் சூறாவளி வீசிய செய்தி வந்தது. ஓடிச்சென்று புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டதை மீண்டும் பதிவதை தவிர்த்து அங்கு நான் பெற்ற அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர்கிறேன்.

(“ஈழ வரை படத்துடன்..! கொழும்பில் ஊர்வலம்..?” தொடர்ந்து வாசிக்க…)

கொத்துரொட்டியும் கொள்கை வகுப்பும்

உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள்
அதைவிட்டு இனியும்……. என்று ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்

ஆயுத போராட்டம் ஆரம்பித்த போது எதிரிகளை தாக்குவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு எமது ஆயுத போராட்டத்திற்கான அங்கீகாரமும் முக்கியம் என்று அனைத்து விடுதலை இயக்கங்களுக்கே உணர்ந்திருந்தன விடுதலை புலிகளை தவிர . (“கொத்துரொட்டியும் கொள்கை வகுப்பும்” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் இயக்க மாவீரர்கள் பற்றி பார்வை….

1986 இலிருந்து புலிகள் மற்ற இயக்கங்களை அழித்து பாசிச ஆட்சி எடுத்தபின்னர் புலிகளில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் (75மூ) 13 க்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட வுநநயெபநச பாடசாலை மாணவர்கள். அதாவது குழந்தைப்போராளிகள். குடும்பத்தில் பாரபட்சம் காட்டப்பட்ட சிறாரும் சாதிய சமூகத்தால் பாரபட்சம் காட்டப்பட்ட தலித்தினரும் காதற் தோல்வி முதலிய பதின்மவயதுப்பிரச்சனைகளால் தற்கொலை மனநிலையோடு பாதிக்கப்பட்டோருமே இந்த பதின்ம பருவத்தில் புலிகளில் இணைந்தோரில் பெரும்பாலானவர்கள்.

(“புலிகள் இயக்க மாவீரர்கள் பற்றி பார்வை….” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் வாய்ப்புகள் அதிகம்

(வாசுகி சிவகுமார்)

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியாகப் பெயர்மாற்றம் பெற்றிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் பின் பத்மநாபா அணி, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அதனை ஏற்றுக்கொள்ளும், இணைந்த வடக்கு−கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள், அது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக் கூறுகிறார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட செவ்வி…

(“தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் வாய்ப்புகள் அதிகம்” தொடர்ந்து வாசிக்க…)

ஈ.பி.ஆர்.எல்.எவ் -சுரேஸ் அணி சொல்வதென்ன?

(கருணாகரன்)

ஈ.பி.ஆர்.எல்.எவ்.வை முடக்கிவிட வேண்டும் அல்லது அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி, தமிழரசுக் கட்சியின் உயர் மட்டத்தினர் இணைந்து வேலை செய்துவருகின்றனர். முக்கியமாக பல்வேறுபட்ட விதங்களில் எமது அங்கத்தவர்களுடன் பேரங்கள் பேசப்படுவதாகவும் அது பணமாகவோ, எதிர்காலப் பதவிகளை இலக்குவைத்து உத்தரவாதங்கள் வழங்கப்படுவதாகவோ அறிய முடிகிறது.

(“ஈ.பி.ஆர்.எல்.எவ் -சுரேஸ் அணி சொல்வதென்ன?” தொடர்ந்து வாசிக்க…)

வாய்வீர ஐயனே

புலிவாலில் தொங்குவதிலோ, ஏன் வெறும் புலி எதிர்ப்பிலோ எங்கள் அடையாளம் இல்லை. உங்களைப் போன்றவர்களுக்கு புலி என்ற முகமூடியைக் கழற்றினால் எந்த தனித்துவமான அடையாளமும் கிடையாது. நாலு பேரைச் சிந்திக்க வைக்கக் கூடிய கருத்துக்களைச் சொல்வதற்கான சிந்தனை வளமும் கிடையாது. உங்களால் முடிந்ததெல்லாம் மந்தைக் கூட்டத்தின் லைக்குகளுக்காக படம் போடுவதும் காட்டுவதும் மட்டுமே!

(“வாய்வீர ஐயனே” தொடர்ந்து வாசிக்க…)

கலங்கிய குட்டை !.. வலையோடு கட்சிகள்!.. புலம் பெயர்ந்தோர் செயல்?..

எதிர்வரும் காலம் எம் மண்ணில் நடைபெறப் போகும் தேர்தல்களில் எம் செயல்ப்பாட்டின் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அத்திவாரத்தை போடும் ஆடுகளமாக மாற்றும் பலம் எமக்கு உண்டு என்பதை விளக்குவதே எனது இந்த பதிவு. இங்கு நாம் என்ற வரையறைக்குள் அகிலம் எல்லாம் பரந்து வாழும் ஈழத் தமிழரை தான் அடக்குகிறேன்.

(“கலங்கிய குட்டை !.. வலையோடு கட்சிகள்!.. புலம் பெயர்ந்தோர் செயல்?..” தொடர்ந்து வாசிக்க…)

மாட்டு இறைச்சியை அதிகமாக உண்டவர்கள்பிராமணன்களும், அரசர்களும் தான்..

சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்….

நாக வம்சத்தினர் காலத்தில் தான் ஹரப்பா, சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது…

அப்போது வந்த வெளிறிய ஆரியர்கள் …
இங்கு நிரந்தரமாக குடியேற வேண்டும் என ஆசைப்பட்டு…

நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கி…

வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்து…சில ராஜ்யங்களை கைப்பற்றினர்..

(“மாட்டு இறைச்சியை அதிகமாக உண்டவர்கள்பிராமணன்களும், அரசர்களும் தான்..” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் மாவீரர் தின படிப்பினை. 

பிரபாகரன் பல நாட்கள் தன் குடும்பத்தாலேயே
ஒதுக்கி வைக்கப்பட்டவர். அவரது திருமணத்திற்கே
பெற்றோர் அழைக்கப்படவில்லை.
2 வீடு தமக்கு இருந்தும் பிரபாகரனால் தன்
பெற்றோர் ஊரில் இருக்க வீடு கிடைக்காமல்
எவ்வாறு அலைந்து களைத்து கடைசியில்
தமிழ்நாட்டுக்கு ஓடினார்கள் என்பதையும்
“அந்த கோபங்களின் வலி இப்போது ஆறிவிட்டது”
என்று வெளிப்படையாகவே 6 வயது மூத்த தமையன்
பிரபாகரனின் 50 வது பிறந்தநாள் மலருக்கு
எழுதியதில் குறித்துள்ளார்.
காணி அதிகாரியாக இருந்தாலும் சகாயம்
IAS போன்ற மிகநேர்மையான வேலுப்பிள்ளை
தன் குடும்பத்திற்கென ஒரு சதமும் ஊழலால்
சம்பாதிக்கவில்லை. தமிழகத்திலிருந்த மனோகரனை
வெளிநாட்டுக்கு அனுப்பவும் அவரிடம் பணமிருக்கவில்லை
தானே மனோகரன் நார்வே செல்ல உதவினார்
என்பதை நெடுமாறன் எழுதிய பிரபாகரன் சரிதப்புத்தகத்தில்
குறித்துள்ளார். 2 சகோதரிகளுக்கு சீதனம்
கொடுத்து திருமணம் செய்வித்ததே குடும்பத்துக்கு பெரும் செலவல்லவா!
மனோகரன் ஆழக்கடலோடி கப்பலில் வேலைசெய்த பணமெல்லாம்
சகோதரிகளின் திருமணத்தோடு தீர்ந்து விட்டது. தகப்பனைப்போல
களவெடுக்க தெரியாத தங்க மகன்தான் மனோகரனும்.
ஒழுக்கத்தில் தகப்பனைப்போல உரிச்சுப் படைக்கப்பட்டவர்.
மதிவதனியின் தம்பி பாலச்சந்திரன்
புலிகளுக்கு போரிட்டு மடிந்ததுபோல பிரபாகரனின்
சகோதரம் ஒன்றும் புலிகளோடு நேரடியாக
பங்கு பற்றாததையும் இப்பின்னணியிலேயே
விளங்கவேண்டும்.
2002 க்குப்பிறகே பிரபாகரனே தமக்குகொள்ளி
வைக்கவேண்டும் என்று பெற்றோர் வன்னியில்
குடிவந்தார்கள். கடைசியில் நாலு பிள்ளைகளில்
யாரும் பெற்றோருக்கு கொள்ளி வைக்கமுடியவில்லை.
பிரபாகரனுக்கு கடைசியில் கொள்ளிவைத்தது
பிரபாகரனே அரசகட்டிலிலேற்றிவைத்த மகிந்ததான்.
கல்லறையல்ல அவருக்கு ஒரு மண்ணறை
யும் கிடைக்கவில்லை.
– நட்சத்திரன் செவ்விந்தியன்.

தோழர் றேகனின் 32 வது நினைவுதினம்.

வவுனியா மாவட்டத்தில் பிறந்த இன்பராசா என்னும் இயற்பெயருடைய தோழர் றேகன் 23.11.1985ம் ஆண்டு புலிகளினால் படுகொலை செய்யப்பட்டார். 1980 களின் ஆரம்பத்தில் ஈழ மாணவர்
பொதுமன்றம்(Gues) என்னும் மாணவர் அமைப்பினூடாக தனது அரசியல் பணியை ஆரம்பத்தவர் . மக்களின் மீதும் மண்ணின் மீதும் அளவுகடந்த நேசத்துக்குரியவராகவிருந்தார். அதற்காக தன்னுடைய பல்கலைக்களக பட்டப்படிப்பையும் தூக்கியெறிந்து விட்டு பெற்றோர்கள் உயர்கல்வியை கற்பதிற்கு தேவையென கொடுத்த பணத்துடன் தன்னை போராட்டத்துடன் முழுமையாக இனைத்துக்கொண்டவர்.

(“தோழர் றேகனின் 32 வது நினைவுதினம்.” தொடர்ந்து வாசிக்க…)