முகாபே வீழ்த்தப்பட்டமை ஜனநாயகத்துக்காகவா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலக வரலாற்றின் ஒருபக்கம், சதிகளால் நிரம்பியது. பண்டைய வரலாறெங்கும் அரண்மனைச் சதிகள் நிறைந்திருந்தன. பின்னர், மன்னராட்சிக்கு எதிரான சதிகள் அரங்கேறின. மாறுகின்ற காலத்துக்கேற்ப இராணுவச் சதிகள் நடந்தன. ஜனநாயகம் பிரதான பேசுபொருளாகவும் அரசாட்சியின் இலக்கணமாகவும் மாறிய சூழலில், அரசமைப்புச் சதிகள், நாடாளுமன்றச் சதிகள் எனப் பலவும் நிகழ்ந்தன. இவ்வாறு நடந்த சதிகள், அந்நாடுகளின் விதியைத் தீர்மானித்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலம், ஆட்சிக் கவிழ்ப்புகளின் பிரதான கருவியாக, இராணுவச் சதிகள் மாறின. அவை, வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களைப் பெற்றன.

(“முகாபே வீழ்த்தப்பட்டமை ஜனநாயகத்துக்காகவா?” தொடர்ந்து வாசிக்க…)

சர்வேஸ்வரனின் வாதம் பிழையானது

அறுபது வருட கால நடைமுறைகளையே தான் பின்பற்றி தேசிய கொடியை ஏற்ற மறுத்ததாக தனது தவறுக்கு நியாயம் கற்பிக்கிறார்.அந்த அறுபது வருடகால நடைமுறைகளை இவர் மாற்றவேண்டும்.அந்த தவறுகளே எம்மை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளது.அதை இவரும் தொடரவேண்டுமா?

(“சர்வேஸ்வரனின் வாதம் பிழையானது” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமை சாத்தியமா?

(எஸ்.கருணாகரன்)

‘மாற்றுத் தலைமை’ ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பை, தமிழ்ச் சமூகம் இழந்து வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமகால அரசியல் கள நிலைவரங்களும் மக்களுடைய புரிதலும் இந்தக் கேள்வியை எழுப்பக் காரணமாகியுள்ளன. புதிய தலைமையை எதிர்பார்த்திருந்த மக்களுக்கும் அரசியற் சூழலுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாகவே நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. “இந்தா வருகிறது; அந்தா வருகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, அந்த மாற்று அணி எங்கே?” என்று ஆர்வமுடையவர்கள் கேட்கிறார்கள்.

(“தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமை சாத்தியமா?” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்புக்குள் பிளவு மக்களை பாதிக்குமா?

(எம்.எஸ்.எம். ஐயூப் )
பல மாதங்கள் அல்ல; பல வருடங்களாக நீடித்து வந்த, உட்பூசலொன்றின் உச்சக் கட்டத்தை எடுத்துக் காட்டும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தேர்தல்களில் தனியாகப் போட்டியிடப் போவதாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கடந்த வாரம், பகிரங்கமாக நாட்டு மக்களுக்கு அறிவித்தது.

(“கூட்டமைப்புக்குள் பிளவு மக்களை பாதிக்குமா?” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தல் வெற்றிக்கான கட்சி தாவல்களும் புதிய கூட்டணியும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) முக்கியஸ்தரும், வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினருமான துரைராசா ரவிகரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19), இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில், கடந்த காலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் வரிசையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் (2010, பொதுத் தேர்தல்), டொக்டர் சி.சிவமோகன் (2015, பொதுத் தேர்தல்) ஆகியோரைத் தொடர்ந்து, இப்போது மாகாண சபை உறுப்பினர் ரவிகரனும் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டிருக்கின்றார்.

(“தேர்தல் வெற்றிக்கான கட்சி தாவல்களும் புதிய கூட்டணியும்” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தலை நோக்கிய சயிக்கிள் ஓட்டம்….!!!!

…..கனடாவில் காய்கறி வாங்கசென்றவரின் காதில் விழுந்ததை என்காதில் போட்டார்….???

…………….கனடாவில் சயிக்கள்கட்சிக்கு இதுவரை சேர்ந்த பணம் 2 லட்ஷம் டொலர்களை கிட்டிவிட்டதாம்….
……கொடுக்கப்படும் பணம் தங்கள் இருக்கும் நாட்டின் டொலரை விட US டொலர் இலும் கொடுக்கப்படுகிறதாம்…

……கூட்டமைப்பையும் மற்றைய காட்சிகளையும் மடக்க அவர்கள் போடும் திடடம்…

(“தேர்தலை நோக்கிய சயிக்கிள் ஓட்டம்….!!!!” தொடர்ந்து வாசிக்க…)

‘நீயுமா புரூட்டஸ்?’

(கே. சஞ்சயன்)
புதிய அரசமைப்பு தொடர்பாக சிங்கள அரசியல் தலைமைகளுக்கு மத்தியில் இருந்தும், பௌத்த மத பீடங்களில் இருந்தும், முரண்பட்ட கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தாலும், சாதாரண சிங்கள மக்களின் மனோநிலை என்ன என்பது இதுவரை சரியாகத் தெரியவரவில்லை. சாதாரண சிங்கள மக்கள், ஓர் அரசமைப்பு மாற்றத்தின் தேவையை உணர்ந்து கொண்டிருக்கிறார்களா, அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காணப்பட்டு, நாட்டில் அமைதியான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்களா? என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

(“‘நீயுமா புரூட்டஸ்?’” தொடர்ந்து வாசிக்க…)

தோழமை தினம் 19.11.2017 சுவிஸ்

கட்சித்தலைமை காரியாலயத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தோழமைதின செய்தி

தோழமை தினம் 19.11.2017 சுவிஸ்

அன்புக்குரிய தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்

எங்கள் நேசிப்பிற்குரிய செயலாளர் நாயகம் அமரர் தோழர் பத்மநாபாவின் பிறந்த நாளை தோழமை தினமாக 2015 ஆண்டு முதலில் நாம் அனுஷ்டித்தோம். இன்று நவம்பர் 19 அவரது 66 வது பிறந்த தினமாகும். தோழர் பத்மநாபாவின் இலட்சியக் குறிக்கோள்களை, அவர் தலைமை ஏற்றிருந்த கட்சியின் கொள்கைகளை உரத்துச் சொல்லுகின்ற இந்த தோழமை தினத்தை இவ்வருடம் சுவிஸ் தோழர்கள் அனுஷ்டிக்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

(“தோழமை தினம் 19.11.2017 சுவிஸ்” தொடர்ந்து வாசிக்க…)

நவம்பர் 19: தோழமை தினம்.

தோழர்களே நண்பர்களே உறவுகளே நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் நமது உரிமைக்காக பல்வேறு களங்களில் போராடிக் கொண்டுதான் இருக்கின்றோம். எமது தனிப்பட்ட உரிமைகளுக்கு அப்பால் நாம் சார்ந்த மக்களின் உரிமைகளுக்காக போராடுதல் முதலாவதை விட மேலானது. இதற்கு ஒரு படி மேலே போய் நாம் சார்ந்த மக்கள் என்பதைக் கடந்து உரிமை மறுக்கப்படும் அனைத்து மக்களின் உரிமைகளை நிலைநாட்ட போராடுதல் என்பது மிகவும் சிறந்தது. இந்த சர்வ தேசியப் பார்வை எமக்குள் ஏற்பட்டால் பிரிவினை வகுப்புவாதம் பிரதேசவாதம் மத மொழிப் பிரிவுகள் ஏற்பட வாய்புகள் இல்லை.

(“நவம்பர் 19: தோழமை தினம்.” தொடர்ந்து வாசிக்க…)

எதிரியைக்கண்டால் கட்சி பேதம் மறந்த போராளிகள்

மூத்தவன் புளட்டில
நடுவிலான் டெலோவிலே
கடை குட்டி புலியில் என்று பெருமை பட்ட தாய்மார்
அயல்வீட்டு என்ஜினியர் மகன் ஈபிஆர்எவ்
முன்வீட்டு வாத்தியார் மகன் ஈரோஸ்

என்று இறுமாந்திருந்தோம்.

கோட்டையில் சைரன் ஊதி அனைவரையும் காத்த புளொட்
ஆண்களும் பெண்களுமாய் செங்கொடிகள் கட்டிய அழகிய ஈபிஆர்எல்எ வ்

அறிவாளிகள் என்று போற்றப்பட்ட ஈரோஸ்

வீரத்துடன் திகழ்ந்த ரெலோஸ்டுகள்
கட்டுக்கோப்பான ஒழுக்கமான வீரர்களாய் திகழ்ந்த புலிகள்
அழகான அந்த நாட்கள்
எதிரியைக்கண்டால் கட்சி பேதம் மறந்த போராளிகள்
விஷம் எங்கிருந்து வந்தது? தான் பெரிது என்று எண்ணாமல் தமிழ் ஈழம் தமிழ் மக்கள் பெரிது என்று சம்மந்தப்பட்டவர்கள் எண்ணி இருந்தால் நிச்சாயமாக தமிழர்கள் நாம் இன்று நடு றோட்டில் நின்றிருக்கமாட்டோம்.

நண்பரின் பதிவில் இருந்து….