நவம்பர் 19 நாபா பிறந்த தின நினைவுகள்!

பிறப்பும் இறப்பும் எம் கையில் இல்லை என்றாலும் வாழ்தல் நாம் வகுத்துக்கொள்ளும் வழிமுறையில் செல்கிறது. சுயநலம், உறவுகள் நலம், பொதுநலம் என்ற தெரிவும் எமதே. அடிப்படையில் நாம் சுயநலம் கொண்டவராக ஆரம்பித்து உறவுகளின் கலப்பில் அவர் சார்ந்த நலம் பேணும் நிலைக்கு ஆட்பட்டு பின்பு சமூகப் பாதிப்பில் தான் பொதுநலம் பற்றிய சிந்தனையில் ஈடுபடுகிறோம். அதில் ஓரளவு எமது பங்களிப்பை செய்தாலும் சுயநலமும் உறவுகள் நலமும் முன்னிலைப்ப டுதல் யதார்த்தம்.

(“நவம்பர் 19 நாபா பிறந்த தின நினைவுகள்!” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் பத்மநாபா அவர்களின் பிறந்த தினமாகிய 19.11.2017 உலக தோழமை தினம்.

தோழர் பத்மநாபா அவர்களின் பிறந்த தினமாகிய 19.11.2017 அன்றைய நாளை உலக தோழமை தினமாக கொண்டாடி வருகிறோம்.
ஈழத்தில் ஆய்தப்போராட்டம் முனைப்பு பெற்றபோது தோழர் நாபா அவர்கள் ஆய்தக் கலாச்சாரத்தில் உடனடியாக இறங்கவில்லை. போராட்டத்திற்கான நியாயத்தன்மைகளை மக்களிடம் எடுத்துச் சென்றார்.எமது ஈழப்பிரதேசத்தின் எல்லை எங்கும் மக்களைச் சந்திதார். இதனைவிட தெற்கிலும் சிங்கள முற்போக்கு சக்திகளிடமும் சென்றார் அவர்களை அணிதிரட்டினார். அவர்களோடும் கைகோர்த்தார். அவர்ன் தீர்க்கதரிசனத்தை இன்று எம்மால் உணரமுடிகிறது. இலங்கையின் பெரும்பான்மை மக்களாகிய சிங்கள மக்களை அணுகுவதைத் தவிர்த்து ஒரு துரும்பையேனும் நகர்த்த முடியாது என்பதை அப்போதே உணர்ந்துகொண்டார். (“தோழர் பத்மநாபா அவர்களின் பிறந்த தினமாகிய 19.11.2017 உலக தோழமை தினம்.” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் அமரர் க. பத்மநாபா பிறந்த தினம் 19.11.2017

19.11.2017 இன்று தோழர் பத்மநாபாவின் 66 வது பிறந்த தினம். தோழர் பத்மநாபா 1951 ம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ம் திகதி பிறந்தார், அவர் பாசிச்டுக்களினால் படுகொலை செய்யப்பட்டபோது அவருக்கு வயது 39 மாத்திரமே. அவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் அவர் சந்தித்த மனிதர்களிடம் அவர் ஏற்படுத்திய தாக்கம், எமது மக்களின் நியாயமான, உரிமைகளுக்காக தீர்க்கதரிசனத்துடன் அவர் வகுத்துக்கொண்ட அணுகுமுறைகள், வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் என்பது படிப்படியாக வெளிச்சத்துக்குவந்து கொண்டிருக்கின்றது.

(“தோழர் அமரர் க. பத்மநாபா பிறந்த தினம் 19.11.2017” தொடர்ந்து வாசிக்க…)

6 வது ஆண்டு நினைவாக தோழர் புரட்சித் தோழன் தங்கபாஸ்கரனை நினைவு கூருகிறோம்

யாழ் நெல்லியடியை பிறப்பிடமாக் கொண்ட தோழர் தங்கபாஸ்கரன் நெல்லியடியில் ஈ.பிஆர்.எப் இன் அரசியல் பிரிவில் செயல்பட்டு கட்சிக்காகவும்,மக்களின் நலனுக்காவும் பெரிதும் உழைத்தவர். ஏல்லோருடனும் இன்முகத்துடனும்,அவரது இயல்பான நகச்சுவை உணர்வாலும் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்ரிருந்தார்.ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையை இறைவன் கொடுத்திருப்பார் அந்த வகையில் நகைச்சுவை உணர்வை தங்கபாஸ்கரன் பெற்றிருந்தார்.

(“6 வது ஆண்டு நினைவாக தோழர் புரட்சித் தோழன் தங்கபாஸ்கரனை நினைவு கூருகிறோம்” தொடர்ந்து வாசிக்க…)

காலி சம்பவம் தொடர்பில் 19 பேர் கைது

காலி ஜின்தோட்ட பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் 19 பேரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் தலைமையகம், அங்கு பாதுகாப்பு கடமைகளுக்காக விசேட அதிரடிப்படையினர் 100 பேர் உள்ளிட்ட 300 பேர், நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. ஹிங்தோட்ட விதானகொட பகுதியில், கடந்த 16ஆம் திகதியன்று இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து, வெ ளி பிரதேசங்களைச் சேர்ந்த சிலர், ​நேற்றிரவு தாக்குதல்களை மேற்கொண்டனர் என்றும் அறியமுடிகின்றது. சம்பவத்தையடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு சட்டம் இன்னும் அமுலில் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

யார் தலைவன்….

(Paul Prahalathan )
கல்லுடைக்கும் தொழிலாளிகளோடு ஒன்றாக வாழ்ந்தவன். தானும் அதே தொழிலை அவர்களோடு செய்தவன். காலாற நடந்தவன். தோழர்களோடு தோழனாக வாழ்ந்தவன். பட்டி தொட்டி எங்கும் இடதுசாரிய முற்போக்காளர்களை தேடிக்கண்டு தோழமை அரசியல் புரிந்தவன். பதவி ஆசை இல்லாதவன். கட்சி சொத்துக்கு ஆசை கொள்ளாதவன். கொண்ட கொள்கையில் பிடிவாதம் உள்ளவன். எதற்காகவும் எவருக்காகவும் கொள்கையை விட்டுக்கொடுக்காதவன்.

(“யார் தலைவன்….” தொடர்ந்து வாசிக்க…)

ஈரோஸ் தலைவர் தோழர் பாலகுமார் கண்ட கனவு நனவாகின்ற காலம் கனிந்து விட்டது!  

(ரி. தர்மேந்திரன்)             

ஈரோஸ் அமைப்பின் தலைவர் தோழர் பாலகுமார் கண்ட கனவு நனவாகின்ற காலம் கனிந்து உள்ளது, எந்தவொரு போராட்டமாக இருந்தாலும் அந்த போராட்டத்தின் சூத்திர கயிறாக மக்கள் இருந்தால் மாத்திரமே அப்போராட்டம் வெற்றி பெறும் என்று அவர் அடிக்கடி கூறுவது வழக்கம், காணாமல் போன உறவுகளை கண்டு பிடித்து தர கோரியும், நிலங்களை விடுவிக்க கோரியும் அரசியல்வாதிகளை நம்பாமல் அரசாங்கத்துக்கு எதிராக தமிழ் மக்கள் அவர்களாகவே போராட்டங்களை முடுக்கி விட்டு இருப்பது நம்பிக்கை ஊட்டுகின்ற முன்னேற்றகரமான விடயம் ஆகும் என்று ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இராஜ. இராஜேந்திரா எமக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-

(“ஈரோஸ் தலைவர் தோழர் பாலகுமார் கண்ட கனவு நனவாகின்ற காலம் கனிந்து விட்டது!  ” தொடர்ந்து வாசிக்க…)

யார் இந்த –TNA (Tamil National Alliance)?

தமிழ்க் கூட்டமைப்பா, இந்திய நாட்டமைப்பா?

(முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் கூட்டமைப்பு எடுத்துள்ள நிலைப்பாடும் ஆற்றும் பாத்திரமும்.)

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO), ஆகிய அமைப்புக்களின் சில தனிநபர்களைக் கொண்டும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின்(LTTE) சில ஆதரவாளர்களைக் கொண்டும் 2002 ஆம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தையை ஒட்டி இக்கூட்டமைப்பு (Tamil National Alliance –TNA) தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது. (“யார் இந்த –TNA (Tamil National Alliance)?” தொடர்ந்து வாசிக்க…)

கசப்படைந்து வரும் தமிழர் முஸ்லிம் உறவும் எதிர்காலமும்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப் பட்ட பின் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே முஸ்லிம்கள் குடியிருந்த பகுதிகளில் நடத்தப் பட்ட நியாயமான குடியேற்றங்கள் தமிழ் மக்களின் அனுசரணையுடனேயே நடந்தேறின. ஆனாலும் இவை மீள்குடியேற்றம் என்ற போர்வையில் தமிழ் பகுதிகளின் குடிப்பரம்பலையே முஸ்லிம்களுக்கு சாதமாக மாற்றியமைத்து தமிழ் மக்களின் நில வளங்களை கபளீகரம் செய்யும் நிலைக்குச் சென்ற பின்பே தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன. (“கசப்படைந்து வரும் தமிழர் முஸ்லிம் உறவும் எதிர்காலமும்.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதிர்ந்தும் உதிராமலும் தனது நடையைக் கட்டுகின்றது.

(சாகரன்)

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பிரம்மா நான்தான் என்று தாராக்கியின் ஆவியில் இருந்து ஆரம்பித்து விக்னேஸ்வரனின் உறவினர் நிர்மலன் வரை உரிமை கொண்டாட இதற்கான ஆவணங்களைச் சமர்பித்து பத்தி எழுத்தாளர்கள் பலரும் எழுத ஆரம்பித்திருக்கும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதிர்ந்தும் உதிராமலும் தனது நடையைக் கட்டுகின்றது. உண்மையில் இதன் உருவாக்கம் புலிகளினால் நடைபெற்றது என்பதே உண்மையாக இருக்க முடியும். புலிகளின் பினாமிகள் பலர் தம்மை புலிகளின் ‘நல்லவேன்டா’ என்று விசுவாசிகளாகவும் அவர்களின் மீட்போராகவும் காட்டிக் கொள்ள எடுக்கும் பிரயத்தனங்களே இந்த உரிமை கோரல்கள் ஆகும் அன்றும் இன்று. அல்லது தாம் தான் புலிகளின் பாலசிங்கம் என்று காட்ட முயலும் செயற்பாடுகளின் வெளிப்பாடுகள் இவை. (“தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதிர்ந்தும் உதிராமலும் தனது நடையைக் கட்டுகின்றது.” தொடர்ந்து வாசிக்க…)