எங்கே செல்லும் இந்தப் பாதை?

(காரை துர்க்கா)
“வடக்கு மாகாணத்தில், தூரத்து இடங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் செல்ல மறுக்கும், வசதி குறைந்த பாடசாலைகளை மூடுவதுடன், நகர்ப் புறத்து பாடசாலைகளையும் ஆசிரியர்கள் வந்து செல்லக் கூடிய வசதிகள் உள்ள பாடசாலைகளையும் மட்டும் இயக்குவதே, ஆசிரியர்கள் வளப் பங்கீட்டுப் பிரச்சினைக்கான தீர்வு” என, வடக்கு மாகாண அமைச்சர் யோசனை தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை அமர்வில், அமைச்சர் இவ்வாறான ஆலோசனை பகர்ந்துள்ளார்.

(“எங்கே செல்லும் இந்தப் பாதை?” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். இளைஞர்கள் சோம்பேறிகள் என்ற புனைவு

(Ahilan Kadirgamar)

சிறிது காலத்துக்கு முன்பு, போர் முடிவடைந்ததன் பின்பு, யாழ்ப்பாணச் சமூகம் பற்றித் திரும்பத் திரும்பக் கூறப்பட்ட ஒரு விடயமாக, அந்த மக்கள், எவ்வளவு கடின உழைப்பாளிகள் என்பதுவும் சிக்கனமாகச் செயற்படுவர்கள் என்பதுவும் மதிநுட்பம் கொண்டவர்கள் என்பதுவும் காணப்பட்டது. ஆனால் இன்று, யாழ்ப்பாணச் சமூகம், சோம்பேறித்தனமாக வந்துவிட்டது எனவும், ஊதாரித்தனமாகச் செலவுசெய்து, கடனில் மூழ்குகிறது எனவும் மக்கள் கதைப்பதைக் கேட்கக்கூடியதாக உள்ளது.

(“யாழ். இளைஞர்கள் சோம்பேறிகள் என்ற புனைவு” தொடர்ந்து வாசிக்க…)

நேர்காணல்:

“துவக்குகள் பேசிய காலத்தில் வண்டிலுக்குப் பின்னால் பூட்டிய மாடுகள் போல் பேனைகள் இருந்தன.”

(வி. ரி. இளங்கோவன்)

அலட்டல்கள் இல்லாத இலகு தமிழ் சொல்லாடல்களுக்குச் சொந்தக்காரர் வி. ரி. இளங்கோவன். அன்றில் இருந்து இன்றுவரை இவரது பேனை ஓய்ந்தது இல்லை. ஈழத்தின் வடபுலமான தீவகங்களில் ஒன்றான புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டு பாரிஸில் வாழ்ந்துவரும் வி. ரி. இளங்கோவன் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், இடதுசாரிய சிந்தனையாளர், ஊடகவியலாளர், சித்த ஆயுர்வேத மருத்துவர் என்று பல்துறைசார் ஆளுமைகளை தன்னகத்தே கொண்ட பாரிஸின் மூத்த இலக்கிய ஆளுமையாக எம்மிடையே இருக்கின்றார். கே.டானியலின் பாசறையில் வளர்ந்த முதன்மைப் போராளி. இவர் தனது புனைபெயரை ‘அசலகேசரி‘ என்று வைத்துக்கொண்டாலும் தனது சொந்தப் பெயரிலேயே பல படைப்புகளை எமக்குத் தந்திருக்கின்றார்.

(“நேர்காணல்:” தொடர்ந்து வாசிக்க…)

சரியான மாற்றுத் தலமை தேவை….!

(சாகரன்)

தற்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலமை தோற்றுப் போகும், தோற்றுப் போன உசுப்பேத்தும் அரசியலை நடாத்துகின்றதா? அல்லது இராஜதந்திர அரசியலை நடாத்துகின்றதா?. இதில் விக்னேஸ்வரன், சம்மந்தன் இருவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகவே பார்க்க முடியும். இதில் ஒருவர் தமிழரசுக் கட்சியினர், மற்றவர் தமிழ் மக்கள் பேரவையினர் என்று பிரித்து பார்க்க முடியவில்லை. இவர்களுக்கு மாற்றீடாக ஒரு சரியான மாற்றுத் தலமையை ஏற்படுத்த ஏன் முடியவில்லை. அவ்வாறு ஏற்படுத்தும் இடத்து தலமைப் பொறுப்புக்களை ஏற்று நடத்த யார் யார் எம்மிடையே இருக்கின்றனர். இதற்கு எவ்வாறு செயற்படலாம் என்ற விவாதக் களத்தை திறந்துவைக்கின்றேன் ஆரோக்கியமான கருத்துக்களைப் பரிமாறுவோம்.

(“சரியான மாற்றுத் தலமை தேவை….!” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையில் போர் முடிவிற்கு வந்து 8வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

போரில் இறந்த மக்களின் சரியான புள்ளிவிபரம், காணாமல் போனவர்களுடைய, சிறையில் இருப்பவர்களுடைய சரியான புள்ளிவிபரங்கள் இதுவரை ஒரு அமைப்பிடமும் இல்லை. அதை ஏன் இன்றுவரை ஒரு அமைப்போ அல்லது அரசியல் கட்சியோ செய்யவில்லை(?)

(“இலங்கையில் போர் முடிவிற்கு வந்து 8வருடங்களுக்கு மேலாகிவிட்டது.” தொடர்ந்து வாசிக்க…)

குண்டுச் சட்டிக்குள் ஓடும் தமிழ் அரசியல் குதிரைகள்

(எஸ்.கருணாகரன்)

நீங்கள் ‘விஐபி’யாக வேண்டுமா? யோசிக்காமல் அரசியலில் ஈடுபடுங்கள். அதிலும் போராட்டம், புரட்சி, காந்தி, காந்தியம், சேகுவேரா, பிடல், பிரபாகரன், புலிகள், தமிழ்த்தேசியம், சுயாட்சி, தனிநாடு, தமிழீழம், மாவீரர்கள், எரித்திரியா, தீபெத், கொசோவா என்று சில பெயர்ச் சொற்களைச் சொல்லத் தெரிந்து விட்டால்போதும்; உங்களுடைய காட்டில் மழைதான்….” என்று சொல்லிச் சிரிக்கிறார் நண்பர் ஒருவர்.

(“குண்டுச் சட்டிக்குள் ஓடும் தமிழ் அரசியல் குதிரைகள்” தொடர்ந்து வாசிக்க…)

பலஸ்தீனிய போராட்டம்: ஹமாஸ் – ஃபட்டா

ஹமாஸ் (Hamas) மற்றும் ஃபட்டா (Fatah) ஆகிய இரண்டு பலஸ்தீனிய பிரிவுகளுக்கு இடையிலான, ஒரு தசாப்தகால யுத்தத்தையும் பிரிவினையையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய பணிகளில் ஒன்றாக, இருபிரிவினரும் கெய்ரோவில் சமரச ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், காஸா (Gaza) நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை ஃபட்டா ஆயுதக்குழுவின் ஆதரவுடன் ஹமாஸ் இயக்கம், தொடர்ச்சியாகப் பேணலாம் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எகிப்தின் இராஜதந்திரிகளே, கெய்ரோவில் குறித்த இந்த இணக்கப்பாடு ஏற்பட, தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(“பலஸ்தீனிய போராட்டம்: ஹமாஸ் – ஃபட்டா” தொடர்ந்து வாசிக்க…)

பலிக்கடாக்களாகும் அரசியல் கைதிகள்

(கே. சஞ்சயன்)

அநுராதபுர சிறைச்சாலையில், மூன்று தமிழ் அரசியல் கைதிகள் நடாத்தி வரும், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், மீண்டும் தீவிர கவனிப்புக்குரிய விவகாரமாக மாறியிருக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில், அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணிகள் விடுவிப்பு விவகாரம் என்பன, அவ்வப்போது சில சம்பவங்கள், போராட்டங்களால் உச்ச கவனிப்புக்குரியதாக மாறுவதும், பின்னர் அது தணிக்கப்படுவதும் அல்லது தணிந்து போவதும் வழக்கமாகியுள்ளன.

(“பலிக்கடாக்களாகும் அரசியல் கைதிகள்” தொடர்ந்து வாசிக்க…)

நெஞ்சம் மறப்பதில்லை……….

எழுபதுகளின் பிற்பகுதி எண்பதுகளின் ஆரம்பம் என் வாழ்வில் மறக்க முடியாத இனிமேலும் கிடைக்க முடியாத தன்னலமற்ற உறவுகளை தந்த காலம். ஒன்றிரண்டு வயசு மட்டுமே வித்தியாசமான அதற்கு முன்பு எந்தவித அறிமுகமும் இல்லாத இளையவர் நாம் ஒன்றாக அணிதிரண்ட காலம். இனம் பற்றிய சிந்தனை மட்டுமே எம் மனதில் இருந்த நாம் வரித்துக்கொண்ட இலட்சியம்.

(“நெஞ்சம் மறப்பதில்லை……….” தொடர்ந்து வாசிக்க…)