என்னை நல் மாணாக்கனாக்கிய ஆசிரியர் அனைவருக்கும் ஆசிரியர் தினத்தில் மீண்டும் எனது மரியாதை கலந்த வணக்கங்கள். அருவரியில் ஆரம்பித்து பல்கலைக் கழகம் வரையும் மரத்தடி விளையாட்டுத்திடலில் ஆரம்பித்து மக்களின் விடுதலைக்காகான பொதுவாழ்வில் பயணத்தை மேற்கொள்வதற்கு எனக்கு பல்வேறு ஆசிரியர்களின் வழிகாட்டல் பேருதவியாக இருந்தது. என்னைப் பெற்றெடுத்த என் தந்தையர் எனது இன்று வரையிலானான மாசீக குரு. அவர் தனது காலத்தில் கல்வி கற்றது வெறும் 3ம் வகுப்பு என்றாலும் இன்று சபையில் நான் தலை நிமிர்ந்து நடப்பதற்கான நேர்மை, நீதி, ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து இவர் வகுத்துக் கொடுத்த வாழ்கைப் பாதை தான் முதல் காரணமாக அமைகின்றது. இதனைத் தொடர்ந்து அவையத்து முன்னிருக்க எனது குஞ்சியப்பு மாமா போன்றவர்கள் பேருதவியாக செயற்பட்டனர். இதில் தான் ஈற்றெடுக்காவிட்டாலும் தனது இரத்தம் என்று எனக்கு வழிகாட்டியாக நின்ற அந்த குஞ்சப்புவையும் மாமாவையும் நான் அடிக்கடி நினைவில் நிறுத்துவதுண்டு.
(“என்னை நல் ஆசான் ஆக்கிய ஆசான்களை வணங்கி நிற்கின்றேன்” தொடர்ந்து வாசிக்க…)