சிறுபான்மை மக்களை அரவணைத்து நடந்தாலே சிறிசேன ஆட்சியும் நிலை பெற்று நீடிக்கும்!

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை சிறுபான்மை மக்களே கவிழ்த்தனர், அதே போல நல்லாட்சி அரசாங்கம் நிலைக்கப் பெறுவதும், கலைக்கப்படுவதும் சிறுபான்மை மக்களின் மனங்களை அது வெற்றி கொள்வதிலேயே தங்கி நிற்கின்றது, ஆகவே தமிழ் பேசும் மக்களை நல்லாட்சி அரசாங்கம் அரவணைத்து நடக்க வேண்டும் என்று ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தேர்தல் தொகுதி அமைப்பாளரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளரும், பிரபல அறிவிப்பாளருமான ஏ. ஆர். எம். ஜிப்ரி தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-

(“சிறுபான்மை மக்களை அரவணைத்து நடந்தாலே சிறிசேன ஆட்சியும் நிலை பெற்று நீடிக்கும்!” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையில் பாலின சமத்துவம் என்பது எட்டாக்கனியாகுமா?

(Gavitha)
அதிகாரப் பரவலாக்கமில்லாத, மிகவும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் ஒரு சமுதாயத்திலேயே, நாம் வாழ்கின்றோம். இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கும் அதிகாரப் பரவலாக்கமில்லாத ஒரு சமுதாயத்துக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக, பாலின சமத்துவமின்மை காணப்படுகின்றது என்றால் அது மிகையாகாது. பாலின சமத்துவம், மனித உரிமைகளில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. “எங்களுடைய பாடசாலையில், ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் இணைந்தே கல்வி கற்கின்றனர்.

(“இலங்கையில் பாலின சமத்துவம் என்பது எட்டாக்கனியாகுமா?” தொடர்ந்து வாசிக்க…)

மட்டக்களப்பில் பாடசாலைக் காணியை அத்து மீறி கையடக்க முயற்சி

மட்டக்களப்பு மாவட்டம் முறவாவோடை கிராமத்தில் தமிழ்ப்பாடசாலை ஒன்றிற்கு சொந்தமான காணியை சில தனிநபர்கள், அரசியல் கட்சிகள் சிலவற்றின் அனுசரனையுடன் அத்துமீறி , சட்டவிரோதமாக அபகரிக்கும் முயர்சியை கிழக்கு மாகாண தமிழ் இளைஞர்கள் ஒன்று திரண்டு தடுத்திருக்கிறார்கள்.
தமிழ்மக்களுக்காக பாடுபடுவோம் என்று தேர்தல்காலங்களில் முழக்கமிட்டு மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற தமிழ் அரசியல்வாதிகள் வளவாதிருக்க இளைஞர்கள் ஒன்று திரண்டு இதனை சாதித்திருக்கிறார்கள். அவ் இளைஞர்களுக்கு, என் அன்பு தம்பிகளுக்கு பாராட்டுகள் . வாழ்த்துக்கள்.

(“மட்டக்களப்பில் பாடசாலைக் காணியை அத்து மீறி கையடக்க முயற்சி” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 6)

கொட்டடியைச் சேர்ந்த கிளி: இரண்டு பெண் குழந்தைகளுக்கும் மூன்று ஆண் குழந்தைகளுக்கும் தாயாவார். இவரது கணவர் ஒரு பஸ் சாரதி. அதிகம் குடிப்பவர். இவர் இந்திய சமாதானப் படையினரால் கொல்லப்பட்டார். கிளியின் மூத்த சகோதரியின் மகன் ஈபிஆர்எல்எவ் அங்கத்தவர். இவர் கிளியின் வீட்டுக்கு வருவது தான் கிளி கைது செய்யப்பட்டதற்கான காரணம்.

(“புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 6)” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 5)

ஆகஸ்ட் ஆரம்பப் பகுதியில் ஜந்து கைதிகளை சுதா எழுந்து நிற்கச் சொல்லி அவர்களை விடுதலை செய்வதாகக் கூறினார். கால் விலங்குகளின் பூட்டைத் திறப்பதற்காக காலையிலிருந்து மதியம் பன்னிரண்டு மணி வரை காவலர்கள் முயற்சி செய்தனர். திறப்புகள் முதலில் வேலை செய்யவில்லை. துருப்பிடித்த பூட்டுக்களைத் திறப்பதற்கு அவற்றை அடித்தும், மண்ணெண்ணெய் ஊற்றியும் பூட்டுகள் திறக்கும்வரை அவர்கள் முயற்சித்தனர். மேலும் மூன்று வாரங்கள் இன்னொரு முகாமில் வேலை செய்ய வைக்கப்பட்டபின் பவளம்மா இறுதியில் முத்திரைச்சந்தையில் வைத்து விடுவிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது உடுத்திருந்த அதே சேலை அவர் விடுதலையான போது உக்கிக் கிழிந்து கந்தலாகி முழங்கால் வரை தான் நின்றது. அவரது சங்கில மட்டும் திருப்பிக் கொடுக்கப்பட்டது. அவரது பணம் (54.000 ரூபா) மோதிரம் ஆகியவை ஒப்படைக்கப் படவில்லை. அது களவெடுத்த பொருட்களென கைது செய்தவர்கள் கூறிக்கொண்டனர்.

(“புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 5)” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 4)

பதினைந்து நாட்களின் பின்னர் பல கைதிகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் விலங்கிடப்பட்டு ஒருவரை ஒருவர் பிடித்தபடி நடக்க உத்தரவிடப் பட்டனர். அனைவரும் வான் ஒன்றினுள் ஏற்றப்பட்டு ஓரிடத்தில் இறக்கப்பட்டு அதேபோல நடக்க வைக்கப் பட்டனர். இறங்கிய பிரதேசத்தில் அவ்வாறு நடப்பது கடினமாயிருந்தது. ஈவா அதற்கு தலைமை தாங்கினார். யாராவது ஒருவர் வரிசையில் இருந்து தவறினால் பின்னாலிருக்கும் அனைவருக்கும் தலையில் அடி விழுந்தது. அனைவரும் உரிய இடத்தை அடைந்தவுடன் முள்ளுக்கம்பி வேலிக்கு கீழால் தவழுமாறு உத்தரவிடப் பட்டனர். முள்ளுக் கம்பிக்குள் ஆடைகள் சிக்குப்பட்டவர்கள் நிற்காமல் தொடர்ந்து போக வைக்கப் பட்டதில் அவர்களது உடைகள் கிழிந்தன. பதிவான கூரையுடைய கட்டிடத்தினுள் அவர்கள் கொண்டு செல்லப் பட்டனர். பலரின் தலைகள் கூரையில் அடிபட்டன. அனைவரும் இருக்க வைக்கப்பட்டு உள்ளே தள்ளப் பட்டனர்.

(“புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 4)” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 3)

கோப்பாய் பெண்கள் முகாமில், ஒருநாள் ஒரு கைதி அம்முகாம் பொறுப்பாளரிடம் போய் மன்றாடினார். பொறுப்பாளர் எழுந்து கைதியை உதைத்ததில் சுவருடன் தலை மோத விழுந்தார்.

ஒரு கைதியின் அநுபவம்
மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த பவளம்மா என்னும் 53 வயதுடைய பெண்ணின் அனுபவத்தை இங்கு தருகின்றோம். பவளம்மா 1990 மார்ச் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்திய சமாதானப் படை வெளியேறிய பின் புலிகள் அப்பிரதேசத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

(“புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 3)” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய இலங்கை ஒப்பந்தம்….ஆய்வுக்கணோட்டம் (Part 3)

இந்தியா விடுதலைப் புலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மற்றைய விடுதலை இயக்கங்களைச் விடுதலைப்புலிகளுடன் சரிசமமாக நடாத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக அரசியல் ஆய்வாளர்கள் சிலரது கருத்து முக்கியமானதாகும். அதில், இந்திய தனது பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்த முயல்வது என்ற விடயத்தில் இராணுவ அடிப்படையில் இந்தியா அறிவுறித்தியபடியெல்லாம் புலிகள் நடந்து கொண்டனர் என்பது தான். இராணுவரீதியில் இலங்கை மீது அழுத்தத்தை கொடுப்பதற்காக இராணுவ இலக்குகள் மீது மட்டுமல்லாது சிங்கள மக்கள் இலக்குகள் மீதான தாக்குதல்களை நடாத்தும் படியும் இந்தியா வலியுறுத்தியது. இதன் அடிப்படையிலேயே அனுராதபுரத்தில் சிங்கள கிராம மக்கள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடாத்தி பல சிங்கள மக்களை படுகொலை செய்தனர். இந்தியா அறிவுறுத்தியபடி எல்லாம் விடுதலைபுலிகள் தாக்குதல்களை மேற்கொண்டு இலங்கை அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுத்தனர்.

(“இந்திய இலங்கை ஒப்பந்தம்….ஆய்வுக்கணோட்டம் (Part 3)” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 2)

இம்முகாமிலிருந்த பெண் கைதிகள் எதிர்பாராத சமயங்களில் நித்திரையிலிருந்து அடித்து எழுப்பப்பட்டு சுரங்க அறைகளுள் இழுத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். வெளியே துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் கேட்கும். அடுத்தது நீ தானென கைதிக்கு சொல்லப்படும். கடுமையான சித்திரவதைக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள், சிறிய முகாம்களுக்கு – பெரும்பாலும் தென்மராட்சிக்கு மாற்றப்படுவர். தென்னந்தோப்புக்குள் அமைந்த இம்முகாமில் ஒரே சமயத்தில் 50 பேர் வரை சிறை வைக்கப்படுவர். இங்கு சித்திரவதை செய்வதில் இன்பம் காண்பதன் உச்சக்கட்டம் ஆரம்பத்தில் இருந்தே தொடங்கும்.
வேறு முகாம்களிலும் பெண் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

(“புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 2)” தொடர்ந்து வாசிக்க…)

திருமலையில் மக்களோடு மக்களாய்

28/07/2017இன்று  தமிழர் சமூக ஜனநாயக கட்சியினரால் திருகோணமலையில் மக்கள் சந்திப்பில் கட்சியின் தலைவர் ஸ்ரீதரன்(சுகு) ,ஆலோசகர் முன்னாள் வடகிழக்கு முதல்வர் வரதராஜ பெருமாள் மற்றும் திருமலை அமைப்பாளர் சத்தியன்