புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 2)

இம்முகாமிலிருந்த பெண் கைதிகள் எதிர்பாராத சமயங்களில் நித்திரையிலிருந்து அடித்து எழுப்பப்பட்டு சுரங்க அறைகளுள் இழுத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். வெளியே துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் கேட்கும். அடுத்தது நீ தானென கைதிக்கு சொல்லப்படும். கடுமையான சித்திரவதைக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள், சிறிய முகாம்களுக்கு – பெரும்பாலும் தென்மராட்சிக்கு மாற்றப்படுவர். தென்னந்தோப்புக்குள் அமைந்த இம்முகாமில் ஒரே சமயத்தில் 50 பேர் வரை சிறை வைக்கப்படுவர். இங்கு சித்திரவதை செய்வதில் இன்பம் காண்பதன் உச்சக்கட்டம் ஆரம்பத்தில் இருந்தே தொடங்கும்.
வேறு முகாம்களிலும் பெண் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

(“புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 2)” தொடர்ந்து வாசிக்க…)

திருமலையில் மக்களோடு மக்களாய்

28/07/2017இன்று  தமிழர் சமூக ஜனநாயக கட்சியினரால் திருகோணமலையில் மக்கள் சந்திப்பில் கட்சியின் தலைவர் ஸ்ரீதரன்(சுகு) ,ஆலோசகர் முன்னாள் வடகிழக்கு முதல்வர் வரதராஜ பெருமாள் மற்றும் திருமலை அமைப்பாளர் சத்தியன்

வடமராட்சியின் ஒளி குன்றாத விளக்கு தங்கவடிவேல் மாஸ்டர்.

தான் எங்கு சென்றாலும் அந்த இடத்தில் அறிவு விளக்கை ஏற்றிவைத்த ஆசிரியப் பெருந்தகை என்று அக்காலத்தே எல்லோராலும் போற்றப்பட்டவரே வல்வை கம்பர்மலையை சேர்ந்த தங்கவடிவேல் மாஸ்டர். இவரோடு தொடர்புபட்ட ஒவ்வொருவரும் தத்தம் அறிவுக்கும் தாம் எடுத்து காரியங்களுக்கும் ஏற்ப இவருடைய ஆற்றலை விளக்கி தமது பக்கமாக சேர்த்துக் கொள்வார்கள். காரணம் இருள் உள்ள இடங்கள் எல்லாம் இந்த விளக்கை தம்மோடு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டன. பொதுவாக விளக்கை வைத்திருப்பவர் அதை இரவல் விளக்கென்று சொல்வதில்லை ஏனென்றால் ஒளி உலகத்திற்கு பொதுவானது, அதுபோல இவரும் எல்லோரும் நேசிக்கும் பொது உடமைவாதியே.

(“வடமராட்சியின் ஒளி குன்றாத விளக்கு தங்கவடிவேல் மாஸ்டர்.” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய இலங்கை ஒப்பந்தம்…..ஆய்வுக்கணோட்டம்! (Part 1)

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 வருட நிறைவுதினம் ஜூலை மாதம் 29ம் திகதியாகும். இவ் ஒப்பந்தத்தின் நோக்கம், இதன் பங்குதாரர்கள், வெற்றி-தோல்விகள், காலத்தில் அதன் முக்கியத்துவம் பற்றி 2007 ம் வருடம் கனடிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வானலையிலவ் நான் படைத்த ஆய்வுக்கணோட்டத்தின் பகுதி 1/10

இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் திகதி கைச்சாத்திடப்பட்டது. ஏறத்தாள 20 ஆண்டுகளின் பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஒப்பந்தத்தின் நோக்கம், இதன் பங்குதாரர்கள், வெற்றி, தோல்விகள், 20 வருட காலத்தில் அது தொடர்பான நிகழ்சிப் போக்குகள் என்பன பற்றிய ஆய்வுக்கண்ணோட்டமாக இத் தொடர் கட்டுரை அமைகின்றது.

(“இந்திய இலங்கை ஒப்பந்தம்…..ஆய்வுக்கணோட்டம்! (Part 1)” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 1)

புலிகளின் வதைமுகாம்.
( பெண்களுக்கான பிரத்தியே முகாம்கள்)

அறிமுகம்:
புலிகளிடமுள்ள கைதிகள் பற்றிய விவரங்களின் தொகுப்பு 5-10 வரையான எமது அறிக்கைகளில் வெளிவந்தது. கொடூரமாகவும் தரக்குறைவாகவும் கைதிகள் நடத்தப்படுவதன் கருத்தியல் பின்னணி பற்றியும் இவ்வறிக்கைகளில் அலசப்பட்டது. புலிகள் மக்கள்பாலும் தமது இயக்க உறுப்பினர்கள் தொடர்பாகவும் கொண்டுள்ள மனோபாவம் புலிகளது சமூகப்பார்வை பற்றிய வினாக்களை எழுப்புகிறது.

(“புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 1)” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமே: ஐரோப்பிய ஒன்றியம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமேயாகும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கிய போதிலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தொடர்ந்தும் புலிகள் பயங்கரவாத இயக்கமாகவே பட்டியலிடப்பட்டிருப்பர் என தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

(“விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமே: ஐரோப்பிய ஒன்றியம்” தொடர்ந்து வாசிக்க…)

இளம்செழியன் மீதான துப்பாக்கி பிரயோகவும் இதன் அதிர்வலைகளும்.

(சாகரன்)
முதலில் இத் துப்பாக்கிப் பரியோகம் இளம்செழியன் மீது நடாத்தப்பட்டதா? என்பது கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இதனை வைத்து அரசியல் நடாத்த முற்படும் தரப்பினர் கண்டனத்திற்கு உரியவர்கள் ஆவார. இலங்கைத்; தமிழர்களில் ஒரு பழக்கம் உண்டு உண்மையான பிரச்சனைகளை விட்டுவிட்டு இல்லாத பிரச்சனைகளை முன்னிறுத்தி உண்மையான பிரச்சனைகளை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள். இது அளம்செழியன் விடயத்திலும் பொய்துப் போய்விடவில்லை. விக்னேஸ்வரனுக்கு மாற்றீடாக இளம்செழியன் என்ற கோஷத்தை வலுப்படுத்த இந்த கொலை முயற்சி நடவடிக்கையை பாவிப்பதை காணமுடிகின்றது. தமிழ் மக்களுக்க ஒரு மாற்றுத் தலமை தேவையே ஒழிய மாற்றுத் தலைவர் தேவை என்பது அல்ல பிரச்சனை. யாரும் இல்லை? என்று அன்று ஒரு விக்னேஸ்வரனை கொண்டு வந்து இன்றுவரை எதனையும் செயற்படுத்தாத நிலமையே சிவி இற்கு பதிலாக இளம்செழியன் என்ன அல்லது இன்னொரு நபர் மாற்றம் ஏற்படுத்தும்.

(“இளம்செழியன் மீதான துப்பாக்கி பிரயோகவும் இதன் அதிர்வலைகளும்.” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் திரு வரதராஜபெருமாள் அவர்களைப் பேட்டி கண்டபோது

திருமதி வாசுகி சிவகுமார் அவர்கள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் திரு வரதராஜபெருமாள் அவர்களைப் பேட்டி கண்டபோது எழுப்பிய கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள்;. 23 ஜுலை 2017 தினகரன் வாரமஞ்சரியில் வெளியிடப்பட்டது.
கேள்வி 1:-
பல்வேறு அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு மத்தியில், குறுகிய காலம் மட்டுமே நீடித்திருந்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த நீங்கள் அந்த மாகாண சபைக்கும், தற்போதைய மாகாண சபைக்கும் இடையே அரசியல் மற்றும் நிர்வாகரீதியாக காணுகின்ற வேறுபாடுகள் எவை?

(“வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் திரு வரதராஜபெருமாள் அவர்களைப் பேட்டி கண்டபோது” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு இணைப்புக்கான தமிழ் மக்கள் முன்வைக்கும் நியாயங்களும்; முஸ்லிம் மக்களின் பொறுப்பும். – அ.அஸ்மின் (வ.மா.ச. உறுப்பினர்)

வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் அ. அஸ்மினால் கடந்த ஆண்டு இதே தினத்தில் எழுதப்பட்ட கட்டுரை.

“வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திற்கு முஸ்லிம் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்ற அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தொடர்தேர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற அதே சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்கள் சார்பாக இதுவரை தீர்க்கமான எவ்வித பதில்களும் முன்வைக்கப்படவில்லை. முஸ்லிம் மக்கள் வடக்குக் கிழக்கு இணைப்பு விடயத்தில் பூரண உடன்பாட்டினை இதுவரை வெளியிடவில்லை. இதனை அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான மக்கள் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் குழுவிற்கு முன்னதாக குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருப்பதன் மூலம் எம்மால் அறிந்துகொள்ள முடியுமாக இருக்கின்றது.
எனினும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வடக்குக் கிழக்கு இணைவு விடயத்தில் முஸ்லிம் மக்கள் எதிர்மறையாக நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடிகின்றது, அத்தோடு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைவுக்கு உடன்பட்டு விடுவார்கள் என்ற அச்சமும் சமூகவலைத்தளங்களில் பரவலாக முன்வைக்கப்படுகின்றது. எது எவ்வாறாயினும் மேற்படி விடயத்தை மிகவும் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்திக்கவும் கருத்தாடவும் தமிழ் முஸ்லிம் சமூகத் தலைவர்கள் முன்வரவேண்டும்.

(“வடக்கு கிழக்கு இணைப்புக்கான தமிழ் மக்கள் முன்வைக்கும் நியாயங்களும்; முஸ்லிம் மக்களின் பொறுப்பும். – அ.அஸ்மின் (வ.மா.ச. உறுப்பினர்)” தொடர்ந்து வாசிக்க…)

ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்

இறந்தவர்களைப் புதைப்பது  ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்
காரணம் ஏதுமில்லை
சத்தியமாகச் சொல்கிறேன்:
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
மேலும் அன்றாட வாழ்க்கையிலும்
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாகவே மறந்துவிடுகிறேன்
மறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை
என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது.

(“ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்” தொடர்ந்து வாசிக்க…)