யார் யாரை பதவி விலகச் சொல்வது……????
ஓரே குழப்பமாக இருக்கின்றது…..! யாரும் இங்கு சுத்தமானவர்கள் இல்லை இவர்களின் சுத்தம் பற்றியும், சுற்றல் பற்றியும், செயற்படா திறன் பற்றியும் பலரும் பல தளங்களில் புலத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் கேள்விகளையும், விமர்சனங்களை முன்வைத்தே வந்தனர். எல்லாவற்றிற்கும் அதிகாரம் இல்லை என்றும் ‘தேசியம்? இற்கு எதிரானது’ என்றும் சொல்லி இதற்கு எதிராக கேள்வி கேட்கும் விமர்சனம் செய்பவர்கள் துரோகிகள்…., சதிகாரர்கள்… என்று பொறுப்பற்ற தனமாக பதிலளித்த தலமை அமைச்சரும், இதனால் புழகாங்கிதம் அடைந்த இவர் அமைச்சர்களும், இவரது சகாக்களும், இவர்களுக்கு செம்பு தூக்கியவர்களும் இன்று ‘நீதவான்’ ஐ காப்பாற்ற வேண்டும் என்று நிற்பதும், அவரின் பரிவாரங்களுக்கு ஆலவட்டம் பிடிப்பதும், இவர்களால் தெரிவு செய்யப்பட்டு தற்போது எதிரணியின் நிற்பவர்களையும் வாக்கு போட்டு வெல்ல வைத்த போது எந்த தர்மத்தின் அடிப்படையில், அறம் சார்ந்த செயற்பாடாக செயற்பட்டனர் அன்று என்பது தற்போதுள்ள கேள்வியாகும்.
அப்போ இதற்கு என்னதான் தீர்வு….? மக்கள் நலன்களை முன்னிலைப்படுத்தும் சரியான மாற்று கூட்டுத்தலமை உருவாக்கப்படவேண்டும். இதற்கு பொன்னம்பலத்தாரில் ஆரம்பித்து சிவி வரையிலான தலைவர்கள் பற்றி மதிப்பீடம் அவரகள் சார்ந்த அரசியல் அமைப்புக்களும் மீள்வாசிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு இந்த ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தவிர்க்கப்பட்டு சகல சமூகப்பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய மக்கள் தலமை உருவாக்கப்படவேண்டும். இவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்து மக்களின் கேள்வி பதிலளிக்க வேண்டிய செயற்பாடாளர்களாக இவர்கள் உருவாக்கப்படவேண்டும். மக்கள் நினைத்தால் இது ஒன்றும் முடியாதது அல்ல! எங்கே முயற்சிப்போமா…?