மரியாதைக்கு செய்ய கூடிய முஸ்லிம் தலைவர்கள் இன்று இல்லை!

கேள்வி:- உங்கள் குடும்பத்தின் அரசியல் பின்னணி என்ன?
பதில்:- எனது தந்தை கே. கே. மரைக்கார். பெயர் எடுத்த முன்னணி வர்த்தகர். இவர் கல்முனை பட்டினசபை தலைவராக விளங்கினார். சுயேச்சையாக தேர்தல் கேட்டு வென்றிருந்தார்.. இவருடைய காலத்தில் கல்முனை பல துறைகளிலும் செழித்து காணப்பட்டது. இவரே எனக்கு முன்னுதாரணம் ஆவார்.

(“மரியாதைக்கு செய்ய கூடிய முஸ்லிம் தலைவர்கள் இன்று இல்லை!” தொடர்ந்து வாசிக்க…)

சம்மந்தர், விக்னேஸ்வரன் சமரச உடன்பாடு…?

(சாகரன்)

ரொம்பவும் வெட்கப்படவேண்டிய விடயம். இந்த சமரசம் தவறுகளை ஒருவகையில் நியாயப்படுத்தி அதனைத் தொடருங்கள் என்று ஏந்த கூச்சமும் இன்றி அனுமதி வழங்கிய சமரசம். ஒரே வர்த்தைச் க்க சேர்ந்த இரு அணியினர் இடையே ஏற்பட்ட உடன்பாடு. மக்கள் நலன்களை முழுமையாக பின்தள்ளி தமது இஷ்டத்திற்கு மக்கள் பணங்களை வளங்களை தவறான வழியில் கையாடல் செய்த குற்றங்களை மக்களே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஏதேச்சாகராமான செயற்பாடு. அறம் இங்கு செய்துவிட்டது இதற்கு வேறு மதத் தலைவர்கள் சமரம் வீசி ஆசீர்வாதம் வழங்கிய செயற்பாடுகள் இதற்கு சமரசம் என்று பெயர் வேறு. தூ கேடு கெட்ட செயற்பாடு.

(“சம்மந்தர், விக்னேஸ்வரன் சமரச உடன்பாடு…?” தொடர்ந்து வாசிக்க…)

27வது தியாகிகள் தினம்

தோழர்பத்மநாபா மற்றும் தோழர்கள் பன்னிருவர் புலிகளால் சென்னை கோடம்பாக்கத்தில் வைத்து படுகாலை செய்யப்பட்ட ஜீன் 19 நாளை நாங்கள் தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கின்றோம். இந்த நாளில் ஈழ விடுதலைப்போராட்டத்தில் மரணித்த அனைவரையும் நினைவுகூரும் பொதுநாளாகக்கொண்டு நாங்கள் ஒருங்கிணைந்து ஒன்று கூடி அஞ்சலி செலுத்துகிறோம்.தோழர்பத்மநாபா அவர்களைப்போல் ஒரு மனிதரை, தலைவரை நாங்கள் இதுவரை பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை அவர் இல்லாத தலைமை இன்று வரை வெற்றிடமாக உள்ளதையே உணர்கிறோம்.
(“27வது தியாகிகள் தினம்” தொடர்ந்து வாசிக்க…)

கட்டார்: பாலைவனத்தில் ஒரு பனிப்போர்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பாலைவனங்கள் போருக்குரியனவல்ல. போரும் பாலைவனத்துக்குரியதல்ல. ஆனால், பாலைவனத்துக்கும் போருக்குமுரியதாய் மத்திய கிழக்கு என உலக வரைபடத்தில் குறிக்கப்பட்ட பகுதி தொடர்ந்தும் திகழ்ந்து வருகிறது. இப்பாலைவனங்கள் தங்களுக்குள் உட்பொதிந்திந்து வைத்திருந்த இயற்கை வளங்கள், சோலைவனங்களாக மாற்றும் வல்லமையுடையவை. இன்று இவ்வளங்களே பாலைவனத்தை சோகவனமாகவும் இரத்தக் களரியாகவும் மாற்றியுள்ளன. உலகளாவிய ஆதிக்கத்துக்கான போட்டியின் மூலோபாய கேந்திரமாக இதன் அமைவிடம் போர் எனும் அவல நாடகத்தை முடிவற்ற தொடர்கதையாக்கியுள்ளது.

(“கட்டார்: பாலைவனத்தில் ஒரு பனிப்போர்” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாண சபை நந்தவனத்து ஆண்டிகள்!?

பூனை குட்டிகள் கூடைக்குள் இருந்து வெளியே வந்துவிட்டன. ஆளுனரை சந்தித்து எலி பிடிக்க முடியாத தங்கள் தந்தை மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவந்து வளர்ப்பு தந்தைக்கு ஏற்பாடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த நிலை தனக்கும் முன்பு முதலமைச்சராக இருந்த வேளை வந்தது என கூறிய ஆளுநர் தந்தையின் மீதான குற்றசாட்டுகளை தரச்சொன்னார்.

(“வட மாகாண சபை நந்தவனத்து ஆண்டிகள்!?” தொடர்ந்து வாசிக்க…)

மணிப்பிரவாள நடைக்கும் இலங்கை தமிழுக்குமான உறவு பற்றி

(அருளினியன்)

மணிப்பிரவாளமும், இலங்கைத் தமிழும்.
“பாடசாலை என்கிறீர்கள், கலாநிதி என்கிறீர்கள், உபதேசம் என்கிறீர்கள் நீங்கள் பேசும் ஈழத் தமிழில்; ஏன் இத்தனை சமஸ்கிருதக் கலப்பு..” எனக் குறைபட்டார்; தனித் தமிழ்ப் பற்றாளரான தமிழ் நாட்டு நண்பர் ஒருவர். ( மேலே கூறிய வார்த்தைகள் எல்லாமே சமஸ்கிருதம்). அவர் சொல்வது உண்மைதான்; நாங்கள் ஈழத் தமிழில் அன்றாடம் உபயோகிக்கும் 50 வார்த்தைகளை பட்டியல் இட்டால் அதில் குறைந்தது 10 வார்த்தைகளாவது சமஸ்கிருதமாக இருக்கும். ( வார்த்தை- சமஸ்கிருதம், சொல்- தமிழ் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால், வார்த்தை என்ற தமிழ்ச் சொல், தமிழில் இருந்தே சமஸ்கிருதத்திற்குச் சென்றது என்போர் பக்கம் நான்)
நாங்கள் பேசும் தமிழில் ஏன் இத்தனை சமஸ்கிருத வார்த்தைகள்..? கொஞ்சம் வரலாறு பார்ப்போம். உண்மையில் ஈழத் தமிழர்களாகிய நாங்கள் பேசுவது சேர நாட்டுத் தமிழ். இன்னும் சொல்லப்போனால் மலை வாழ் மக்களின் தமிழ். மலையாளத் தமிழ். மணிப்பிரவாளத்தின் தாக்கத்தில் வந்த தமிழ்.

(“மணிப்பிரவாள நடைக்கும் இலங்கை தமிழுக்குமான உறவு பற்றி” தொடர்ந்து வாசிக்க…)

வட மகாண சபையின் நம்பிக்கைப் பிரோரணை….??

யார் யார் மீது குற்றச்சாட்டுவது…..?

யார் யாரை ஊழல் பேர் என்று கூறுவது……??

யார் யார் மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவருவது….???

யார் யாரை பதவி விலகச் சொல்வது……????

ஓரே குழப்பமாக இருக்கின்றது…..! யாரும் இங்கு சுத்தமானவர்கள் இல்லை இவர்களின் சுத்தம் பற்றியும், சுற்றல் பற்றியும், செயற்படா திறன் பற்றியும் பலரும் பல தளங்களில் புலத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் கேள்விகளையும், விமர்சனங்களை முன்வைத்தே வந்தனர். எல்லாவற்றிற்கும் அதிகாரம் இல்லை என்றும் ‘தேசியம்? இற்கு எதிரானது’ என்றும் சொல்லி இதற்கு எதிராக கேள்வி கேட்கும் விமர்சனம் செய்பவர்கள் துரோகிகள்…., சதிகாரர்கள்… என்று பொறுப்பற்ற தனமாக பதிலளித்த தலமை அமைச்சரும், இதனால் புழகாங்கிதம் அடைந்த இவர் அமைச்சர்களும், இவரது சகாக்களும், இவர்களுக்கு செம்பு தூக்கியவர்களும் இன்று ‘நீதவான்’ ஐ காப்பாற்ற வேண்டும் என்று நிற்பதும், அவரின் பரிவாரங்களுக்கு ஆலவட்டம் பிடிப்பதும், இவர்களால் தெரிவு செய்யப்பட்டு தற்போது எதிரணியின் நிற்பவர்களையும் வாக்கு போட்டு வெல்ல வைத்த போது எந்த தர்மத்தின் அடிப்படையில், அறம் சார்ந்த செயற்பாடாக செயற்பட்டனர் அன்று என்பது தற்போதுள்ள கேள்வியாகும்.

அப்போ இதற்கு என்னதான் தீர்வு….? மக்கள் நலன்களை முன்னிலைப்படுத்தும் சரியான மாற்று கூட்டுத்தலமை உருவாக்கப்படவேண்டும். இதற்கு பொன்னம்பலத்தாரில் ஆரம்பித்து சிவி வரையிலான தலைவர்கள் பற்றி மதிப்பீடம் அவரகள் சார்ந்த அரசியல் அமைப்புக்களும் மீள்வாசிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு இந்த ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தவிர்க்கப்பட்டு சகல சமூகப்பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய மக்கள் தலமை உருவாக்கப்படவேண்டும். இவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்து மக்களின் கேள்வி பதிலளிக்க வேண்டிய செயற்பாடாளர்களாக இவர்கள் உருவாக்கப்படவேண்டும். மக்கள் நினைத்தால் இது ஒன்றும் முடியாதது அல்ல! எங்கே முயற்சிப்போமா…?

 

 

 

 

யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபத்திரன் (தோழர் றொபேட்) அவர்களின் 14 ஆவது நினைவு தினம்

யாழ் மாநகர சபை உறுப்பினர் அமரர் த. சுபத்திரன் (தோழர் றொபேட்) அவர்களின் 14 ஆவது நினைவு தினம் (14.06.2003) இன்றாகும். தமிழ் மக்களது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டதில் தனது 24 ஆவது வயதில் இணைந்து கொண்ட சுபத்திரன் 46 வயதில் இறக்கும் வரை அதே குறிக்கோளுடன் உழைத்தவர்.
இன்றைக்கு, இளம் வயதில் தனது சமூகத்தைப்பற்றி தன்னை சூழவுள்ள மனிதர்களின் அவலங்கள் பற்றி பொது விவகாரங்கள் பற்றி ஆழ்ந்தாராய்ந்து சிந்திக்கின்ற இளம் சந்ததியை பெற்றிருக்கின்றோமா? எமது இளைஞர் யுவதிகளின் சமூக ஈடுபாடு குன்றிப்போனதற்கான, திசைவிலகலுக்கான காரணங்கள் என்ன? என்பன நாம் விடை தேடவேண்டிய வினாக்களாகும்.
(“யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபத்திரன் (தோழர் றொபேட்) அவர்களின் 14 ஆவது நினைவு தினம்” தொடர்ந்து வாசிக்க…)

நல்லாட்சியில் நிர்க்கதி, ஐ. தே. க – மு. கா கூட்டு சதி, சம்பந்தன் அமைதி, இது கிழக்கு பட்டதாரிகளின் விதி!

(விருட்சமுனி)

தேசிய இன பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் பின்னடைவு அடைகின்றபோது, சிறுபான்மை இனங்கள் அவர்களுடைய அபிலாஷைகள் பாதிக்கப்படுவதாக உணர்கின்றபோது, வேலை வாய்ப்பை பெறுவதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றபோது நாட்டில் அரசியல் ஸ்திர தன்மை பாதிப்படைகின்றது என்றும் இச்சூழ்நிலை கரு கொள்கின்றபோது கால ஓட்டத்தில் அரசியல் மாற்றத்துக்கான வாய்ப்புகள் உருவாகின்றன என்றும் அரசியல் அவதானிகள் எடுத்து சொல்கின்றார்கள். இவை போன்ற விடயங்களே மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தன. அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் ஆயுளையும் இவை போன்ற விடயங்களே தீர்மானிக்க கூடியவையாக உள்ளன. ஆனால் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் அதன் கண்களுக்கு முன்னால் நடமாடுகின்ற உதாரணமாக மஹிந்த ராஜபக்ஸவை கண்டு வருகின்றபோதிலும் இவை போன்ற விடயங்களை கவனத்தில் எடுத்து செயற்படுவதாக தெரியவில்லை.
(“நல்லாட்சியில் நிர்க்கதி, ஐ. தே. க – மு. கா கூட்டு சதி, சம்பந்தன் அமைதி, இது கிழக்கு பட்டதாரிகளின் விதி!” தொடர்ந்து வாசிக்க…)

காவி அணிந்த பிக்குகள் அரசியல் செய்வதும் வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அபத்தம்!

 

(ரி. தர்மேந்திரன்)

பண்டைய யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சி செய்த சிங்கை ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தில் வந்த முடிக்கு உரிய அரசர் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா நாடு கடந்து நெதர்லாந்தில் வசித்து வருகின்றார். இவர் யாழ்ப்பாண ஆரிய சக்கரவர்த்திகளின் வாரிசு என்பதை உறுதிப்படுத்தித்தான் நெதர்லாந்து அரசாங்கம் இவருக்கு புகலிடம், பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கி உள்ளது. அத்துடன் நாடுகளின் தலைவர்கள், உலகில் உள்ள அரச பரம்பரையினர், சர்வதேச சமூக பிரதிநிதிகள் இவரை ஏற்று அங்கீகரித்து உள்ளனர். மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இருந்த முன்னைய அரசாங்கம் இவரை நாட்டுக்கு திருப்பி வரவழைப்பதற்கு பகீரத முயற்சிகள் மேற்கொண்டு இருந்தது. இப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் மிக நெருக்கமான நண்பரும், சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சருமான வைத்திய கலாநிதி ராஜித சேனாரட்ண அப்போதைய அரசாங்கத்தில் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சராக இருந்தபோது ராஜா ரெமிஜியஸ் கனகராஜாவை சந்தித்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(“காவி அணிந்த பிக்குகள் அரசியல் செய்வதும் வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அபத்தம்!” தொடர்ந்து வாசிக்க…)