மே 18 (பகுதி 13)

(அருண் நடேசன்)

இந்தியாவின் தேசியக் கட்சிகளான இடதுசாரிகளும் பாரதீய ஜனதாவும் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசுக்கெதிர் போக்கையும் வெளிப்படுத்தியிருந்தமை பிரபாகரனுக்கும் நடேசனுக்கும் அதிக நம்பிக்கையளித்தது. ஆனால், இந்திய மத்திய அரசின் போக்கில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. மாற்றம் ஏற்பட வாய்ப்புமில்லை. தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவும் அவற்றின் இணைந்த நிலைப்பாடுகளும் எவ்வாறு இருக்கும் என்பதெல்லாம் பிந்தியே புலிகளுக்கு விளங்கியது.

(“மே 18 (பகுதி 13)” தொடர்ந்து வாசிக்க…)

மே 18 (பகுதி 12)

(அருண் நடேசன்)

ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் எந்தவிதமான விமர்சனங்களுமற்று பிரபாகரனை வழிபட்டனர். புலிகளை நிபந்தனைகளற்ற முறையில் ஆதரித்தனர். ஆனால் இதைப் புலிகள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியதும் புலம்பெயர் தமிழர்கள் இதற்குப் பலியானதும் ஒன்றாகவே நடந்தன. புலிகள்மீதான விமர்சனத்தை வைத்து ஈழப் போராட்டத்தை விரிந்த தளத்தில் ஜனநாயக உள்ளடக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும் என்ற புலம்பெயர் தமிழர்களும் புத்திஜீவி களும் ஏற்கனவே புலிகளின் ஆதரவுச் சக்திகளால் ஓரங்கட்டப்பட்டு மௌனிக்கப்படுத்தப்பட்டிருந்தனர்.

(“மே 18 (பகுதி 12)” தொடர்ந்து வாசிக்க…)

மூதூர் மல்லிகை தீவு பெருவெளி சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம்

மூதூர் மல்லிகை தீவு பெருவெளி எனும் இடத்தில் ஞாயிற்று கிழமை அறநெறி வகுப்புக்கு சென்ற மூன்று சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு திருமலை தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நாம் நேரில் சென்று உண்மை நிலவரத்தை பெற்றோரிடம் கேட்டு தெரிந்து கொண்டோம். பெற்றோர் கூறியதாவது… முக நூலில் வேறு சில சம்பவத்தின் புகைப்படங்களை போட்டும், பிள்ளைகள் இறந்ததாகவும் செய்தியை பரப்பி வருகின்றனர். இது தமக்கு மிகவும் மன உளைச்சல்களை உருவாக்குகிறது என்றும் கூறினார்”.

(“மூதூர் மல்லிகை தீவு பெருவெளி சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம்” தொடர்ந்து வாசிக்க…)

பெரு வலியான பெருவெளி(மல்லிகைத் தீவு) சம்பவம்

பெருவெளி என்னும் கொட்டியாரத்து தமிழ் கிராமத்தில் 28.05.2017 ஞாயிற்று கிழமை இளம் சிறுமிகளுக்கு ஏற்பட்ட சம்பவம் மனதுக்கு பெரு வலியையும் துயரத்தையும் சுமந்து நிற்கிறது. இன நல்லுறவும் ஒருங்கிணைவும் ஒரு சிலரின் நடவடிக்கைகளினால் பாதிப்படைந்து விடக்கூடாது என்பதில் நாம் அக்கறையுடனும் அவதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் .நான் நேற்று சம்பவத்தின் உண்மை நிலை பற்றி திருச்செல்வத்துடனும் மற்றும் பலருடனும் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் மூலம் உண்மை நிலவரம் தெரிய வந்தது .

(“பெரு வலியான பெருவெளி(மல்லிகைத் தீவு) சம்பவம்” தொடர்ந்து வாசிக்க…)

பல்கலைக்கழகமும் சமூகமும்

பல்கலைக் கழகங்களே ஒரு சமுகத்தின் முற்போக்கு சிந்தனைகளின் திறவுகோல் உலக நாடுகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள் பல்கலைக்கழகங்கள் வழியேதான் முன்மொழியப் பட்டன
அறிவுச் சிந்தனை வெளியில் புதிய சிந்தனை மரபுகளை உருவாக்கியவர்கள் வரிசையில் பல்கலைக் கழக அறிவு ஜீவிகளே முன்னிலை வகிக்கின்றனர். ஆனால் இன்று நம் பல்கலைக் கழகங்கள் சுதந்திரமான சிந்தனைக் களங்களாக உள்ளனவா.

(“பல்கலைக்கழகமும் சமூகமும்” தொடர்ந்து வாசிக்க…)

மே 18 (பகுதி 11)

(அருண் நடேசன்)

இவ்வாறு சுடப்படும்போது இறந்தவர்கள் போக ஏனையோர் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனார்கள். சிலர் பயந்து பின்வாங்கினார்கள். சிலர் செத்து மடிந்தார்கள். சிலர் காயப்பட்டு மருத்துவமனையில் கிடந்தார்கள். இவ்வாறு தம்மால் சுடப்பட்டு மருத்துவமனையில் காயமடைந்து சேர்க்கப்பட்டவர்களை மேலதிகச் சிகிச்சைக்காகக் கப்பலில் எடுத்துச் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. காயப்பட்டவர்கள் புதுமாத்தளன், முள்ளி வாய்க்கால் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

(“மே 18 (பகுதி 11)” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் -தோற்றம்.

சென்னையில் தமிழர் மருத்துவ நிறுவனம் தொடங்கியபோது வெலிக்கடை சிறையில் இருந்து TRO உயிர் தப்பி வந்த டாக்டர் ஜெயகுலராஜா தலைவராக இருந்தார். நான் செயலாளராக இருந்தேன். போராளி இயக்கங்கள் ஐந்து எம்மோடு இணைந்து இருந்தது. ஒரு வருடத்திற்கு இந்தக்கூட்டு முயற்சி எதுவிதத் தடையற்று இருந்தது. இக்காலத்திலே புளட்டைத் தவிர்ந்த மற்றைய இயக்கங்கள் இணைந்திருந்தன. இயக்கத்தினருக்கும், அகதிகளுக்கும் எமது மருத்துவசேவை கிடைத்தது. அத்துடன் இந்திய வைத்தியர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடையே வேலை செய்ய இந்தக்கூட்டு முயற்சி இலகுவாக இருந்தது.

(“தமிழர் புனர்வாழ்வுக்கழகம் -தோற்றம்.” தொடர்ந்து வாசிக்க…)

பாதுகாக்கப்பட வேண்டிய நல்லிணக்கம்

(மொஹமட் பாதுஷா)
நமது நாட்டில் நம்மைச் சுற்றி என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை ஒவ்வொன்றாகச் சொல்ல வேண்டியதில்லை. இத்தேசத்தில் வாழ்கின்ற சிங்கள இனத்தவரில் ஒவ்வொருவரும், தமிழ் இனத்தவரில் ஒவ்வொருவரும், முஸ்லிம் இனத்தவரில் ஒவ்வொருவரும் நமது தேசத்தில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதை, ஒவ்வொரு வினாடியும் உணர்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள்.

(“பாதுகாக்கப்பட வேண்டிய நல்லிணக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்டாலின் அண்ணா எம்மை பிரிந்து ஆண்டு ஒன்று !?.

ஈழவிடுதலை போராட்டம் அவசரகதியில் ஆயுதபோராட்டமாக மாறவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்ட போது அதுவரை மக்களை அரசியல் மயப்படுத்தி, மக்கள் போராட்ட பாதை பற்றிய செயல் திட்டத்தில் இருந்த ஈழமாணவர் பொதுமன்றம் அதன் அரசியல் ஸ்தாபனமாக இருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இரண்டிற்கும் அது ஒரு சவாலான விடயமாக இருந்தது.

(“ஸ்டாலின் அண்ணா எம்மை பிரிந்து ஆண்டு ஒன்று !?.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் நாட்டு அரசியல் வாதிகளே,

தமிழ் நாட்டு உறவுகளே நீங்கள் எங்கள் தொப்புள் கொடி உறவாக இருந்ததால் ,இலங்கை தமிழர்கள் ஒரு அருணாக்கொடி கூட இல்லாமல் இறந்து போனார்கள். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனில் நீங்கள் தொப்புள் கொடி உறவாகஇருந்தால் மட்டும் போதும்.
இலங்கையில் ஈழம் புடுங்கி கொடுக்கிறோம் என்று கூறி மேலும் தமிழர்களை படுகுழியில் தள்ளவேண்டாம், உங்களுக்கு ஈழம் வேண்டுமென்றால் 7 கோடி
தமிழர்கள் உள்ள தமிழ்நாட்டில் ,
சீமானை வைத்து ஈழத்தை பெற்றுக்கொள்ளவும்.

(“தமிழ் நாட்டு அரசியல் வாதிகளே,” தொடர்ந்து வாசிக்க…)