ஸ்டாலின் அண்ணா எம்மை பிரிந்து ஆண்டு ஒன்று !?.

ஈழவிடுதலை போராட்டம் அவசரகதியில் ஆயுதபோராட்டமாக மாறவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்ட போது அதுவரை மக்களை அரசியல் மயப்படுத்தி, மக்கள் போராட்ட பாதை பற்றிய செயல் திட்டத்தில் இருந்த ஈழமாணவர் பொதுமன்றம் அதன் அரசியல் ஸ்தாபனமாக இருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இரண்டிற்கும் அது ஒரு சவாலான விடயமாக இருந்தது.

(“ஸ்டாலின் அண்ணா எம்மை பிரிந்து ஆண்டு ஒன்று !?.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் நாட்டு அரசியல் வாதிகளே,

தமிழ் நாட்டு உறவுகளே நீங்கள் எங்கள் தொப்புள் கொடி உறவாக இருந்ததால் ,இலங்கை தமிழர்கள் ஒரு அருணாக்கொடி கூட இல்லாமல் இறந்து போனார்கள். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனில் நீங்கள் தொப்புள் கொடி உறவாகஇருந்தால் மட்டும் போதும்.
இலங்கையில் ஈழம் புடுங்கி கொடுக்கிறோம் என்று கூறி மேலும் தமிழர்களை படுகுழியில் தள்ளவேண்டாம், உங்களுக்கு ஈழம் வேண்டுமென்றால் 7 கோடி
தமிழர்கள் உள்ள தமிழ்நாட்டில் ,
சீமானை வைத்து ஈழத்தை பெற்றுக்கொள்ளவும்.

(“தமிழ் நாட்டு அரசியல் வாதிகளே,” தொடர்ந்து வாசிக்க…)

நாலு முடிச்சுக் கயிற்றுக்கு வழியில்லாது போன முள்ளிவாய்க்கால் 2017

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2017 என்பது தமிழர்கள் தமக்குள் நுள்ளுப்படுவதையும்¸ ஒரு விடயத்தை ஒழுங்கமைக்கும் வல்லமை இல்லாதவர்கள் என்பதையும்¸ இழந்த மக்களின் ஆத்திரத்தையும் வெளிக்காட்டிய நிகழ்வாகும். இன்னோர் வகையில் கூறுவதானால் சாவீட்டைக்கூட ஒழுங்காக அனுஷ்டிக்க முடியாத நிலையில் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.

(“நாலு முடிச்சுக் கயிற்றுக்கு வழியில்லாது போன முள்ளிவாய்க்கால் 2017” தொடர்ந்து வாசிக்க…)

மே 18 (பகுதி 10)

(அருண் நடேசன்)

ஆனால் யாராலும் விளங்கிக் கொள்ள முடியாத விசயமாக இருப்பது புலிகளின் கரும்புலிகள் அணிகள் ஏன் செயற்பட முடியாமல் ஆகின என்பதே. படைத்தரப்பு புலிகளின் ஒவ்வொரு கோட்டையையும் கைப்பற்றி முன்னேறும்போது புலிகளின் உறுப்பினர்களின் மத்தியிலும் சனங்களின் மனதிலும் கரும்புலிகளின் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தவிரவும் பிரபாகரன் அரசியல்ரீதியாகச் சாணக்கியமோ கெட்டிக்காரத்தனமோ அக்கறையோ இல்லாதவராக இருந்தாலும் இராணுவரீதியாக மிகவும் ஆற்றலுள்ளவராக மதிக்கப்பட்டவர். ஆனால், எவருக்கும் தெரியாத, விளங்காத ஒரு புதிராக அவர் அமைதி காத்தபடி பின்வாங்கிக்கொண்டிருந்தார்.

(“மே 18 (பகுதி 10)” தொடர்ந்து வாசிக்க…)

தென்னிலங்கை வெள்ள அனர்ந்த நிவாரணங்களின் இணைவோம்

(சாகரன்)

தென்னிலங்கை மக்களுக்கான நிவாரணங்களில் இணைவோம் மனிதாபிமானத்துடன் கூடிய சகோதரத்துவத்தை வளர்போம் நாம் நாகரீகமான சமூகத்தின் அங்கம் என்பதை நிறுவி நிற்போம்.

(“தென்னிலங்கை வெள்ள அனர்ந்த நிவாரணங்களின் இணைவோம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பெண்ணின் வீட்டுக்குள் இரகசியமாக புகுந்த சிங்கள அரச அதிபர்! நடந்தது என்ன?

பௌத்த தீவிரவாத அமைப்பாக புதிதாக நாட்டில் முளைத்து சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்ட பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரரை நாய் கூண்டில் அடைப்பார்கள் என்று கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எதிர் கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, இவரை ஆதரித்து பிரசாரம் செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் மேடைகளில் முழங்கினார்கள். இப்பேச்சுகள் முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரிதும் எடுபட்டன. இதனால் அத்தேர்தலில் ஆட்சி மாற்றத்தை வேண்டி முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு வாக்களித்தனர். சில இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வி அடைவதற்கும், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறுவதற்கும் அவ்வாக்குகளே தீர்மானிக்கும் சக்திகளாக மாறின. (“தமிழ் பெண்ணின் வீட்டுக்குள் இரகசியமாக புகுந்த சிங்கள அரச அதிபர்! நடந்தது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

மே 18 (பகுதி 9)

(அருண் நடேசன்)

புலிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்குக் கொல்லப்படும் சனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு. அப்படி என்றால்தான் இந்தப் படுகொலைகளை முன்னிட்டு ஐ.நாவோ இந்தியாவோ சர்வதேசச் சமூகமோ தலையிடக்கூடிய வாய்ப்பு உண்டாகும் என்று அவர்கள் நம்பினார்கள். அதை அவர்கள் முழுதாகவே எதிர்பார்த்தார்கள். எனவே கொலைப்பட்டியலை நீட்டிக் காட்டுவதற்கேற்ற முறையில் இராணுவத்தைச் சீண்டும் விதமாகக் கோப மூட்டும் வகையில் தமது தாக்குதல்களைத் தொடுத்தனர். படைத்தரப்புக்குத் தப்பியோடித் தங்களிடம் வரும் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட வேண்டிய அவசியம். சனங்களைப் புலிகளிடமிருந்து பிரித்துவிட்டால் புலிகளால் ஒரு நாளைக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்று அவர்கள் சரியாக மதிப்பிட்டிருந்தனர். எனவே சனங்களை மையமாக வைத்து, சனங்களின் உயிரைப் பணயமாக வைத்து இரண்டு தரப்பும் தமது தாக்குதல்களைத் தொடுத்தன.

(“மே 18 (பகுதி 9)” தொடர்ந்து வாசிக்க…)

பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள்: உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி!

இலங்கையில் ஒருத்தன் நிலத்துக்கு கீழ இருந்து தானும் மனைவி , பிள்ளைகளுடனும் சந்தோசமாக இருந்தான் , பாகிஸ்தானில் ஒருவன் நிலத்துக்கு மேல 4 மனைவியுடனும் பிள்ளைகளுடனும் சந்தோசமாக இருந்தான், இவர்கள் இருவரும் அடுத்தவர்களை போர்க்களங்களில் சாகடித்து தாங்கள் பாதுகாப்பாக இருந்து அறிக்கையை மட்டும் விட்டுக்கொண்டு இருந்தார்கள். இறுதியில் சுயநலவாதிகளான இருவருக்கும் எப்படியான மரணம் ஏற்பட்டது என்பதை உலகமே அறிந்தது.

(“பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள்: உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி!” தொடர்ந்து வாசிக்க…)

வாழ்வின் பின்னோக்கிய பயணமிது! தொடர்ச்சி….. (Part 1) 

(சிவகாமி)

புலிகளின்  இருபாலை பெண்கள் முகாமின்  சிறையில் சிவகாமி இருந்த போது தான் இந்திய இராணுவத்தினரால் உணவுப்பொட்டலங்கள்  வானூர்தி மூலம் போடப்பட்டது. இதை அங்கிருந்த பெண் போராளிகள் சிலர் மிகவும் சந்தோசமாக எடுத்துக் கொண்டார்கள். இனி தமிழர்களுக்கு விடிவு வந்து விடப் போகிறது என்ற பார்வையில்.இந்தியாவின் ஆக்கிரமிப்பு அரசியலை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை அவர்களின் பேச்சுக்களிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது. அவர்கள் எல்லோருமே ஆயுதப்பயிற்சிக்கு  உட்படுத்தப்பட்டவர்கள் தான்.வேறு எந்த விதமான அரசியல் சித்தாந்தமோ தர்மமோ போதிக்கப்படவில்லை என்பது அவர்களின் நடவடிக்கைகளும் பேச்சுக்களுமிருந்தது. ஆமாம்  சில போராளிகளின் தனிமனித தேடல்களும் தர்ம சிந்தனையும் தான் அங்குள்ளவர்களின் நடவடிக்கைகளில் தெரிந்தது. சரியான போதனையற்ற ஆயுதப்போராட்டமே உயிர்களையும் உடமைகளையும் மதிக்காது கொடிய அழிவுகளை ஏற்படுத்தியிருப்பது என்பது தான்  சிலரால் சீரணிக்க முடியாத உண்மை.

(“வாழ்வின் பின்னோக்கிய பயணமிது! தொடர்ச்சி….. (Part 1) ” தொடர்ந்து வாசிக்க…)

வரலாறு மிகச்சிறந்த ஆசான்

யூதவிழாக்களுக்குத் தடைவிதிப்பதன் மூலமாகவே தன் கணக்கை ஆரம்பித்தான் ஹிட்லர். ஆங்காங்கே எழுந்த மெல்லிய எதிர்ப்புக்குரல்கள் தேசவெறிக்கும்பலின் வெறிக்கூச்சலில் அமுங்கிப்போனது. நொந்துகொண்ட யூதர்கள், மறைந்து ஒளிந்து தங்கள் வீடுகளுக்குள் மதச்சடங்குகளை அஞ்சியஞ்சிக் கொண்டாடினார்கள்.

(“வரலாறு மிகச்சிறந்த ஆசான்” தொடர்ந்து வாசிக்க…)