மே 18 (பகுதி 1)

(அருண் நடேசன்)

எங்கள் தேசத்தில் எம் இனத்தை கொலைகளத்தில் பலி கொடுக்கப்பட்ட நாள் , இறந்த அனைவருக்கும் எனது அஞ்சலிகள். ஆனால் இது யாரால் ஏற்பட்டது ? போரின் இறுதி நாட்கள் எவ்வாறு இருந்தன?வன்னியில் என்ன நடந்தது? பிரபாகரன் இறுதியாக The Three Hundred என்ற ஆங்கில படத்தை
பார்த்த பின்னர் எடுத்த முடிவு என்ன?
கொஞ்சம் நீளமான பதிவு ஆனால் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு பதிவு, ஒரு 20 நிமிடங்கள் ஒதுக்கி இதனை முழுவதும் படிக்கவும்.
களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு.

(“மே 18 (பகுதி 1)” தொடர்ந்து வாசிக்க…)

ஈழப்போரின் இறுதி நாட்கள்

காலச்சுவடு 1994இல் மீண்டும் துவங்கப்பட்ட காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் இதழியல் அறங்களில் ஒன்று, எந்தப் படைப்பையும் மறைவான பெயரில் வெளியிடுவதில்லை என்பது. இது தமிழக எழுத்துக்களுக்கு உறுதியாகக் கடைபிடிக்கப்பட்டாலும் இலங்கை அரசியல் சூழலைக் கருதி அன்றிலிருந்தே விதிவிலக்காகப் பல ஈழத்துப் பதிவுகளை மாற்றுப் பெயர்களில் வெளியிட்டு வருகிறோம். எனினும் அவர்கள் அடையாளம் எங்களுக்குத் தெரிந்திருக்கும். எழுதியவர் அடையாளம் தெரியாமல் ‘காலச்சுவடில்’ வெளிவந்த முதல் எழுத்து ‘அநாமதேயன் குறிப்புகள்’. மீண்டும் இலங்கை அரசியல் சூழலைக் கணக்கில்கொண்டு எடுக்கப்பட்ட முடிவு அது.

(“ஈழப்போரின் இறுதி நாட்கள்” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளி வாய்க்கால்

1984 காலப்பகுதியில் புலிகள் அடிக்கடி கண்ணி வெடி தாக்குதல்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள்.இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கை மட்டுமே செய்திகளாக வரும்.இந்த தாக்குதல்களின் பின் விளைவுகள் ஒரு பொழுதும் செய்திகளாக வந்ததில்லை. இதே காலப்பகுதியில் யாழ்பாணத்தில் பொதுவாக தமிழர்கள் புலிகள் அடிக்கிறார்கள்.மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே கேள்வி. போதாக்குறைக்கு வெளிநாட்டில் புகலிடம் கோரிய தமிழர்களும் இதே கேள்விதான்.

(“முள்ளி வாய்க்கால்” தொடர்ந்து வாசிக்க…)

என் மனவலையிலிருந்து……!

(சாகரன்)

கம்யூட்டர் வைரஸ்: மனிதனை  தோற்கடிக்குமா…? மனிதனால் உருவான மெ(வ)ன் மூளை…!

வழமையாக வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதற்கு ரஷ்யா தான் காரணம் எனக் குற்றம் சாட்டப்படுவது வழக்கம். இதில் சில உண்மைகளும் இல்லாமல் இல்லை. இந்த தடவை ரஷ்ய நிறுவனங்களின் கணனிகள் பெருமளவில் இந்த வைரஸ் என்ற மென்பொருள் ஆயுதத்தால்  பாதிக்கப்பட்டுள்ளன. அதனாலும் இதற்கான கிரிமினல்கள் அமெரிக்காவில் இருந்தே இயங்கலாம் என்று நம்பப்படுகின்றது. தற்காலத்தில் அனைத்தும் இணையவலைப் பின்னலுக்குள் அடங்குகின்றன. இது கிரிமினல்களுக்கும் வாய்ப்பாகிவிடுகிறது.

(“என் மனவலையிலிருந்து……!” தொடர்ந்து வாசிக்க…)

மென்பொருள் ஆயுதம்: அமெரிக்க இலத்திரனியல் ஓட்டையூடு குழப்பம் விளைவிக்கும்

இன்று உல‌க‌ம் முழுவ‌தும் ப‌ர‌வி வ‌ரும் க‌ண‌னிக‌ளை செய‌லிழ‌க்க‌ வைக்கும் வைர‌ஸ் அமெரிக்காவில் இருந்து ப‌ர‌வி இருக்க‌லாம் என‌ ந‌ம்ப‌ப் ப‌டுகின்ற‌து. அத‌ற்குக் கார‌ண‌ம் அமெரிக்க‌ உள‌வு நிறுவ‌ன‌ம் NSA ஹேக்க‌ர்ஸ் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ பாதையின் ஊடாக‌த் தான் இந்த‌ வைர‌ஸ் ப‌ர‌வுகின்ற‌து. அதாவ‌து வின்டோஸ் மென்பொருளில் ஒரு பாதுகாப்பு ஓட்டை உள்ள‌து. அத‌ன் மூல‌மாக‌த் தான் கிரிமின‌ல்க‌ள் வைர‌ஸ் அனுப்புகிறார்க‌ள். இந்த‌ பாதுகாப்பு ஓட்டை NSA உள‌வறிவ‌த‌ற்காக‌ உண்டாக்க‌ப் ப‌ட்ட‌து.

(“மென்பொருள் ஆயுதம்: அமெரிக்க இலத்திரனியல் ஓட்டையூடு குழப்பம் விளைவிக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

திறந்த வெளிப்படையான கடிதம்!!

(பூரணமாகவும், கச்சிதமாகவும், மற்றும் உண்மையாய் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையுடன்)

பெறுனர்:
திரு. நீரஜ் டேவிட் மற்றும் திரு. ரவி அருணாச்சலம்,
IBC Tamil,
London, UK

திரு நீரஜ் டேவிட் மற்றும் திரு ரவி அருணாச்சலம் அவர்களுக்கு,

எனது பெயர் யோகீசன். 1980 களின் தொடக்கத்திலிருந்து எழுத்தாளரகவும், சமூக ஊடகங்களில் பல்வேறு தளங்களில் பங்களிப்பாளனாகவும் இன்று வரை நான் எழுத்துப் பணியில் இருக்கிறேன். மற்றும் பல்வேறு தலைப்புகளின் கீழ் சமூக ஊடகத்தில் பல கட்டுரைகள் கொடுத்துள்ள “புலோலியூரான்” என்ற ஒரு நன்கு அறியப்பட்ட நபர். IBC, TRT போன்ற தமிழ் ஊடகத்திலும் நன்கு பிரசித்தமானவன். எழுத்து மற்றும் கருத்துப் பதிவுகள் இதுவே என் பேரார்வம், மற்றும் அறியப்பட்ட மட்டத்தில் பொது ஊடகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளுடனும் என்னை நான் இணைத்துள்ளேன்.

(“திறந்த வெளிப்படையான கடிதம்!!” தொடர்ந்து வாசிக்க…)

மோடியின் இலங்கை வருகை: பிராந்திய ஆதிக்க வெளிப்பாடு

(கருணாகரன்)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வந்து திரும்பி விட்டார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குள், மோடியினுடைய இரண்டாவது இலங்கை விஜயம் இது. முதல் பயணம், 2015இல் நடந்தது. அப்போது அவர், வடக்கே – யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தார். இப்பொழுது இரண்டாவது பயணத்தில், மத்திய பகுதியான மலையகத்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார். இரண்டு பயணங்களும், இந்திய நோக்கு நிலையிலும் வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கிலும், முக்கியமானவை.

(“மோடியின் இலங்கை வருகை: பிராந்திய ஆதிக்க வெளிப்பாடு” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சோமு: கரைத் தொடாமல் காற்றுடன் கலந்துவிட்ட கரைப் பொறுப்பாளனே!

(தோழர் ஜேம்ஸ்)
வெலிக்கடைப் படுகொலையில் எதிரி உன் உயிரை பறிக்க முடியவில்லை. பிணக் குவியலுக்குள் பிணம் போல் படுத்துறங்கி விழித்தெழுந்தவனே. 1983 வெலிக்கடைப் படுகொலையை சர்வதேசம் எங்கும் உன் பதிவு மூலம் பதிய வைத்தவன் நீ. ஈழவிடுதலைக்கான புரட்சிகர இலக்கியம் அருளரின் இலங்காராணிக்கு அடுத்ததாக உன்னுடைய வெலிக்கடைப் படுகொலை விபரிப்பாகத்தான் இருக்க வேண்டும்.

(“தோழர் சோமு: கரைத் தொடாமல் காற்றுடன் கலந்துவிட்ட கரைப் பொறுப்பாளனே!” தொடர்ந்து வாசிக்க…)

ஆனாரூனாவும் நல்லகண்ணுவின் காரும்!

(இளவேனில்)

தமிழ்,தமிழர் நலனோடு தம் வாழ்வைப் பிணைத்துக்கொண்ட நா.அருணாசலம், ‘தமிழ்ச் சான்றோர் பேரவை’, ‘தந்தை பெரியார் தமிழிசை மன்றம்’ உள்ளிட்ட அமைப்புகளை நிறுவியவர். தமிழிசை மன்றத்தின் சார்பாக ஆண்டுதோறும் மார்கழி இசை விழாக்களை நடத்தியவர். ‘நந்தன்’ இதழின் ஆசிரியராக இருந்தவர். இலங்கை தமிழர் விவகாரத்திலும் தமிழ்வழிக்கல்விக்காகவும் தொடர்ந்து பணியாற்றியவர். தமிழறிஞர்களையும் எழுத்தாளர்களையும் ஆதரித்த அருணாசலத்துக்கு இன்னொரு பெயர் இருந்தது. அதன் வாயிலாக அவரைத் தமிழகம் அறிந்திருதிருந்தது. ஆனாரூனா!

(“ஆனாரூனாவும் நல்லகண்ணுவின் காரும்!” தொடர்ந்து வாசிக்க…)

உண்மையான ஜனநாயகத்தை கட்டியெழுப்ப இடதுசாரிய இயக்கங்களை பலப்படுத்த வேண்டும்- குமார் குணரத்தினம்

கடந்த மே 1ம் திகதி கொழும்பு புறக்கோட்டையில் இடம்டபெற்ற சர்வதேச தொழிலானர் தின கூட்டத்தில் முன்னிலை சோசலிச கட்சியின் அமைப்பு செயலாளர் குமமர் குணரத்தினம் ஆற்றிய உரையின் சாரம்சம் இது. 131 வருடங்களுக்கு முன் உழைக்கும் மக்கள் 8 மணித்தியால வேலை நாள் கேட்டு போராடினார்கள். 131 வருடங்களுக்கு பின் இன்று 10,12 மணித்தியால வேலை செய்ய கேட்கின்றனர். இரண்டு மூன்று தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

(“உண்மையான ஜனநாயகத்தை கட்டியெழுப்ப இடதுசாரிய இயக்கங்களை பலப்படுத்த வேண்டும்- குமார் குணரத்தினம்” தொடர்ந்து வாசிக்க…)