ஆனாரூனாவும் நல்லகண்ணுவின் காரும்!

(இளவேனில்)

தமிழ்,தமிழர் நலனோடு தம் வாழ்வைப் பிணைத்துக்கொண்ட நா.அருணாசலம், ‘தமிழ்ச் சான்றோர் பேரவை’, ‘தந்தை பெரியார் தமிழிசை மன்றம்’ உள்ளிட்ட அமைப்புகளை நிறுவியவர். தமிழிசை மன்றத்தின் சார்பாக ஆண்டுதோறும் மார்கழி இசை விழாக்களை நடத்தியவர். ‘நந்தன்’ இதழின் ஆசிரியராக இருந்தவர். இலங்கை தமிழர் விவகாரத்திலும் தமிழ்வழிக்கல்விக்காகவும் தொடர்ந்து பணியாற்றியவர். தமிழறிஞர்களையும் எழுத்தாளர்களையும் ஆதரித்த அருணாசலத்துக்கு இன்னொரு பெயர் இருந்தது. அதன் வாயிலாக அவரைத் தமிழகம் அறிந்திருதிருந்தது. ஆனாரூனா!

(“ஆனாரூனாவும் நல்லகண்ணுவின் காரும்!” தொடர்ந்து வாசிக்க…)

உண்மையான ஜனநாயகத்தை கட்டியெழுப்ப இடதுசாரிய இயக்கங்களை பலப்படுத்த வேண்டும்- குமார் குணரத்தினம்

கடந்த மே 1ம் திகதி கொழும்பு புறக்கோட்டையில் இடம்டபெற்ற சர்வதேச தொழிலானர் தின கூட்டத்தில் முன்னிலை சோசலிச கட்சியின் அமைப்பு செயலாளர் குமமர் குணரத்தினம் ஆற்றிய உரையின் சாரம்சம் இது. 131 வருடங்களுக்கு முன் உழைக்கும் மக்கள் 8 மணித்தியால வேலை நாள் கேட்டு போராடினார்கள். 131 வருடங்களுக்கு பின் இன்று 10,12 மணித்தியால வேலை செய்ய கேட்கின்றனர். இரண்டு மூன்று தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

(“உண்மையான ஜனநாயகத்தை கட்டியெழுப்ப இடதுசாரிய இயக்கங்களை பலப்படுத்த வேண்டும்- குமார் குணரத்தினம்” தொடர்ந்து வாசிக்க…)

பலாலியை சிவில் விமான நிலையமாக மாற்ற வேண்டும்

பலாலி விமான நிலையத்தையும் காங்கேசன்துறை துறைமுகத்தையும் மிக விரைவில் சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றியமையுங்கள். இதற்கான நடவடிக்கைகளை உடன் எடுங்கள். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் யாழ்ப்பாண வணிகர் கழகம் கோரியுள்ளது. இது தொடர்பாக கடிதம் ஒன்றை வணிகர் கழகம் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.

(“பலாலியை சிவில் விமான நிலையமாக மாற்ற வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் ஆயர் ஞானப்பிரகாசம்

(நட்சத்திரன் செவ்விந்தியன்)

யாழ் ஆயர் ஞானப்பிரகாசம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவில் தரவுகளையும் தருக்கத்தையும் திரித்து கண்டனம் தெரிவித்திருப்பது ஒரு மதத்தலைவர் அரசியலிலும் பல்கலைக்கழக நடைமுறைகளிலும் அத்துமீறி தலையிடுவதற்கப்பால் தனிப்பட்ட அதிகார நலன்களுக்காக conflict of interest அடிப்படைகளிலும் கடுமையாக எதிர்க்கப்படவும் அலசி ஆராயப்படவும் வேண்டியது. ரோமன் கத்தோலிக்கர்கள் அல்லாத வேறுபல கிறிஸ்தவ பிரிவினரும் முஸ்லீம்களும் இந்துக்களும் பௌத்தர்களும் வாழும் பல்லின பல்கலாச்சார மாகாணத்தில் மிகச்சிறுபான்மையரான கத்தோலிக்கரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயர் யாழின் போப்பாண்டவர் போல அத்துமீறுகிறார்.

(“யாழ் ஆயர் ஞானப்பிரகாசம்” தொடர்ந்து வாசிக்க…)

தனித்து விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகள்

(கனகலிங்கம் கோபிகிருஷ்ணா)

தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய முன்னாள் போராளிகள் பலர், தற்போது நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததுதான். இதில், மட்டக்களப்பு, செங்கலடியைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளியொருவர், சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார் என அறிவிக்கப்பட்டது. அவரது கணவரும் முன்னாள் போராளி என்று தெரிவிக்கும் செய்தி, கணவர் இறந்த பின்னர், குடும்பத்தைக் கொண்டுசெல்ல இயலாமல், மன அழுத்தத்துக்கு மத்தியிலேயே இந்த முடிவை எடுத்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு, ஆறு வயதில் பிள்ளையொன்றும் உள்ளது.

(“தனித்து விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகள்” தொடர்ந்து வாசிக்க…)

போட்டோ ரீக்கோ: வங்குரோத்தான அமெரிக்காவின் நவகொலனி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாடுகள் சுதந்திரமானவை. ஒருபுறம் இக்கூற்று உண்மையாக இருக்கிறபோதும், மறுபுறம் இக்கூற்று எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உண்மையல்ல என்பதை நாமறிவோம். பல நாடுகள் சுதந்திர நாடுகள் போல் தோற்றங் காட்டினாலும் அவை அதன் இயங்குநிலையில் அவ்வாறல்ல. குறிப்பாக கொலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த நாடுகள் பல நீண்டகாலத்துக்கு கொலனித்துவ ஆதிக்கவாதிகளின் நலன்களுக்குப் பங்கமில்லாமல் நடந்து கொண்டன. ஆனால் அது என்றென்றைக்கும் ஆனதல்ல என்பதைப் பலநாடுகளில் உருப்பெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள் காட்டி நின்றன.

(“போட்டோ ரீக்கோ: வங்குரோத்தான அமெரிக்காவின் நவகொலனி” தொடர்ந்து வாசிக்க…)

புலம்பெயர் தரப்புகளின் தாயக வருகை; சாதித்தவை எவை?

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த இரண்டு ஆண்டுகளில் தாயகப் பகுதிகளை நோக்கி வருகை தரும் புலம்பெயர் தமிழ் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக, புலம்பெயர்அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களின் வருகை எதிர்பார்க்கப்பட்ட அளவினைத் தாண்டியிருக்கின்றது.

(“புலம்பெயர் தரப்புகளின் தாயக வருகை; சாதித்தவை எவை?” தொடர்ந்து வாசிக்க…)

காளியம்மா…. உயிர் பலி கேட்கும் காளியம்மா….

(சாகரன்)

உயிர் பலிகள் புலிகளால்
.
ரெலோவிற்கு எதிரான ஆயுத கொலைகளை புலிகள் ஆரம்பித்தவுடன் யாழ்ப்பாணத்தில் புலிகள் கிட்டுவின்;; தலமையில் யாழ்ப்பாண வீதி எங்கும் இரவு பகலாக ரோந்தும் காவலும் செய்தனர.; எல்லாப் பொதுமக்களும் விசாரணைக்குள்பட்டனர் சோதனைக்கள்பட்டனர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர் கடல் மார்க்கமாக போராளிகள் தப்பி ஓடுவதற்கான பாதைகளை அடைத்து காவலும் செய்தனர்.

(“காளியம்மா…. உயிர் பலி கேட்கும் காளியம்மா….” தொடர்ந்து வாசிக்க…)

ஈழப் போராட்டத்தில் தோழர் சிறி

(தோழர் க. பத்மநாபா)

1986 இல் எழுதியது

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பெரும் தூணாக விளங்கிவந்த தோழர் சிறி எம்மிடையே இன்று இல்லாமல் போனது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். அதனிலும் மேலாக சிறி எப்படி இறந்தார் என்பது உலக நாகரீகத்தின் முன்னால் தமிழினமே வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றாக அமைந்தது தான் என்னை மிகவும் ஆழ்ந்த வேதனைக்குள்ளாக்குகின்றது.

(“ஈழப் போராட்டத்தில் தோழர் சிறி” தொடர்ந்து வாசிக்க…)

வரலாறு எம்மை விடுதலை செய்யும்

வரலாறு விடுதலை செய்யும் என்ற பிடல் காஸ்ரோவின் வாக்கு இற்கு அமைய இன்று ஈழவிடுதலைக்காக போராடி தம்மை அர்பணித்த ரெலோ போராளிகளை மக்கள் தம்முடன் இணைத்துள்ளனர். வரலாறு இந்தப் போராளிகளை விடுதலை செய்து விட்டது. இந்த கொடும் செயலுக்கு மூல காரணமான புலிகளை வரலாறு என்றும் விடுதலை செய்யப் போவது இல்லை அது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்து மண்டியிட்டபோதும். இதனை வரலாறு எழுதிவிட்டும் சென்றிருக்கின்றது.

(“வரலாறு எம்மை விடுதலை செய்யும்” தொடர்ந்து வாசிக்க…)