வட கொரியா யுத்தத்திற்கு அறை கூவல் விடவில்லை

வ‌ட‌ கொரிய‌ ம‌க்க‌ள் எப்போதும் போருக்கு எதிராக‌த் தான் குர‌ல் கொடுத்து வ‌ருகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள‌து அர‌சு போர்வெறி கொண்டு அலைய‌வில்லை. அதைச் செய்வ‌து அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌ம். அது அந்த‌ ம‌க்க‌ளுக்கு ந‌ன்றாக‌த் தெரியும். நாளைக்கு அமெரிக்க‌ இராணுவ‌ம் ப‌டையெடுத்தால் அந்த‌ ம‌க்க‌ளை கையைக் க‌ட்டி வேடிக்கை பார்க்க‌ சொல்கிறீர்க‌ளா? அமெரிக்க‌ குண்டு வீச்சில் அப்பாவி ம‌க்க‌ள் பலியாக‌ மாட்டார்க‌ளா? த‌ங்க‌ள் நாட்டை ஆக்கிர‌மிக்க‌ வ‌ரும் அந்நிய‌ இராணுவ‌த்தை எதிர்த்து போரிடுவ‌து த‌ப்பா?

(“வட கொரியா யுத்தத்திற்கு அறை கூவல் விடவில்லை” தொடர்ந்து வாசிக்க…)

அன்றைய கதையும் இன்றைய நிஜமும்! பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகளே…வாசியுங்கள்!

(எஸ். ஹமீத்)

அன்றைய கதை இது:

ஓர் இளைஞன் ஒரு பெண்ணைக் காதலித்தான். ஆனால் அந்தப் பெண்ணோ இவனது காதலை மறுத்தாள். அவளுக்கு இளைஞன் விலையுயர்ந்த ஏராளமான பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்தான். அப்போதும் அவள் இவனை விரும்பவில்லை. இறுதியாக இளைஞன் அந்தப் பெண்ணிடம் சொன்னான். ”என்னைக் காதலிப்பதற்கு நீ என்னதான் எதிர்பார்க்கிறாய்…? சொல்; எதுவாயினும் கொண்டு வந்து தருகிறேன்!”

(“அன்றைய கதையும் இன்றைய நிஜமும்! பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகளே…வாசியுங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

நீ வந்தால் ஆனையிறவு முகாமை பிடித்துவிடலாம் கருணாவிடம் கூறிய தலைவர்.

மட்டக்களப்பு போராளிகளுக்கு நன்கு பிடித்த வெள்ளை அரிசி சோறும் மிகவும் சுவையான கறிகளும் சமைத்துக்கொண்டு தலைவர் உரிய நேரத்துக்கு வந்தார். பொட்டம்மானிடம் பொறுப்பை கொடுத்து நாங்கள் முகாம் திரும்பினோம்
ஆனையிறவு தாக்குதல் விடையாக திரிவுபடுத்துதல் தகவல்கள் வருவதால் பல நண்பர்கள் என்னிடம் ஒரு பதிவை இடும் படி வேண்டியதால் இதை எழுதுகின்றேன். பொதுவாக நாங்கள் பரந்தன் பகுதியை கைப்பற்றிய போதே ஆனையிறவையும் கைப்பற்ற வேண்டும் என்பது திட்டமாக இருந்தது இதற்காக ஒரு படைத்தொகுதியை சுண்டிக்குளம் பகுதியால் இறக்கி பின்பக்கமாக ஆனையிறவை கைப்பற்ற வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது இதை நானே தலமைதாங்கினேன் திட்டமிட்டபடி தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.

(“நீ வந்தால் ஆனையிறவு முகாமை பிடித்துவிடலாம் கருணாவிடம் கூறிய தலைவர்.” தொடர்ந்து வாசிக்க…)

தலைவனுக்கொரு மடல்…!

(எஸ். ஹமீத்.)

என்னுடையதும் எனது சமூகத்தினுடையதுமான தலைவனே…!

அஸ்ஸலாமு அலைக்கும்!

விழிகளின் கண்ணீர் வழிந்து விரல்களையும் நனைக்க நனைக்க உனக்கிந்த மடலையெழுதும் துர்ப்பாக்கியம் நேர்ந்ததெண்ணித் துடித்துத்தான் போகிறேன் தலைவா…!
தங்கமென நாம் நினைத்திருந்த தலைவன் ஒரு துருப்பிடித்த தகரமென அறிந்து கொண்டதனால் ஏற்பட்ட அக வலியை ஆற்றுப்படுத்த வழியற்றிந்தக் கடிதத்தையுந்தன் கண்களுக்கும் கல்புக்கும் சமர்ப்பிக்கின்றேன் தலைவா…!

(“தலைவனுக்கொரு மடல்…!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக தலித் இயக்கத் தலைவர்கள் மவுனம் காக்கிறார்கள்: ஜிக்னேஷ் மோவானி

குஜராத்தில் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக உனாவில் மிகப்பெரிய எழுச்சியை நீங்கள் நடத்தியிருந்தீர்கள், இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என்று பேசப்பட்டது, ஆனால் அதன் பின்னர் நடந்த உ.பி. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதே, உத்தரப் பிரதேசத்தில் 21 சதவீத தலித் மக்கள் இருக்கிறார்கள் , ஆனால் அவர்கள் மத்தியில் உனா எழுச்சி எந்தத் தாக்கத்தையும் உருவாக்கவில்லையா?

(“தமிழக தலித் இயக்கத் தலைவர்கள் மவுனம் காக்கிறார்கள்: ஜிக்னேஷ் மோவானி” தொடர்ந்து வாசிக்க…)

இதயத்தால் இணைந்தவரே!? வரலாற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்!?

எம் தேசத்து மன்னர் ஆட்சி முறைமை அன்னியர் வரவால் அகன்று, போத்துக்கேயரும் அவர் தடம் அறிந்து வந்த ஒல்லாந்தரும் ஆண்ட பின், ஆங்கிலேயர் எம் முழு தேசத்தையும் ஆக்கிரமித்தனர். ஆட்சி இலகுவிற்காக மாகாணங்களாக எம் தேசம், கொழும்பை தலைநகராக கொண்ட ஆளுமைக்கு உட்பட்டது. இரண்டாம் உலக போரின் பின் அது சிங்கள தலைமைகளிடம் கையளிக்கப்பட்டது.

(“இதயத்தால் இணைந்தவரே!? வரலாற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்!?” தொடர்ந்து வாசிக்க…)

தொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு

வடக்கு – கிழக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்களினால் மூர்க்கம் பெற்றிருக்கின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலுரைக்க வலியுறுத்தும் போராட்டங்கள், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டங்கள் மற்றும் அரச வேலை கோரும் பட்டதாரிகளின் போராட்டங்கள் என்று போராட்டங்களுக்கான காரணங்கள் தமிழர் தாயகப் பகுதியெங்கும் நிறைந்திருக்கின்றன.

(“தொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

இது அனர்த்தமா அல்லது படுகொலைகளா?

தமிழ்-சிங்கள புதுவருடமான 14.04.2017 அன்று கொலன்னாவை நகரசபைக்குட்பட்ட பிரதேசமான மீதொட்டமுல்லயில் திண்மக்கழிவு (குப்பை) மேடு சரிந்ததில், அதனைச்சூழ இருந்த 147 வீடுகள் புதையுண்டு, மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரையில் 30 சடலங்கள் மீடகப்பட்டுள்ளன. மேலும் குறைந்தது 20 பேராவது புதையுண்டிருக்கலாமென நம்பப்படுகின்றது. புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக வேறு இடங்களிலிருந்து வந்த மக்களும் அங்கு கூடியிருந்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கையினைச் சரியாகக் கணிக்க முடியாதுள்ளதாகத் தெரியவருகின்றது. உலகெங்கிலும் அடிக்கடி மண்சரிவு மற்றும் பனிச்சரிவு ஏற்படுவதுபற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் திண்மக்கழிவு மேடு சரிந்து இவ்வளவு தொகையாக மக்கள் இறந்தது முதன்முறையாக இலங்கையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.

(“இது அனர்த்தமா அல்லது படுகொலைகளா?” தொடர்ந்து வாசிக்க…)

மே மாதம் 13 ம் திகதி உலகப் போர் தொடங்கும்…! சிரிய அதிபர் அஸாத் கொல்லப்படுவார்!

எதிர்கால உலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறிந்தவன் வானத்தையும் பூமியையும் படைத்த இறைவன் ஒருவனே. மனிதர்கள் தம் அறிவைக் கொண்டோ, கற்பனையைக் கொண்டோ கணித்துக் கூறுபவை நூற்றுக்கு நூறு வீதம் சரியாக அமைந்து விடுவதில்லை. ‘நாளைக்கு மழை பெய்யும்.’ என்று மனிதன் கணிப்பது பொய்யாகி வெயிலடிக்கும். அவ்வாறே, ‘ அடுத்த வருடம் உலகம் அழிந்துவிடும்’ என்ற மனிதனின் கணிப்பைத் தாண்டி உலகம் பல ஆண்டுகள் வழமை போல இயங்கிக் கொண்டிருக்கும்.

(“மே மாதம் 13 ம் திகதி உலகப் போர் தொடங்கும்…! சிரிய அதிபர் அஸாத் கொல்லப்படுவார்!” தொடர்ந்து வாசிக்க…)

இன்று தோழர் லெனின் பிறந்த நாள்

”1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன.

(“இன்று தோழர் லெனின் பிறந்த நாள்” தொடர்ந்து வாசிக்க…)