மரணத்தை கொண்டாடும் மனநிலையை தவிர்ப்போம்! மனித நேயத்தை வளர்போம்!!
(சாகரன்)
கடந்த வாரம் கந்தன் கருணைப் படுகொலை பற்றிய பதிவொன்றை மேற்கொண்டிருந்தேன். இதற்கு கிடைத்த ஆதரவு எதிர்வினைகள் என்னை தொடர்ந்தும் எழுதத் தூண்டியிருக்கின்றது. ஈழவிடுதலை அமைப்புக்களிடையேயான முரண்பாடு நட்பு முரண்பாடே ஒழிய பகை முரண்பாடு அல்ல என்பதை ஏற்றுக்கொண்டதனாலேயே சகோதரப்படுகொலைக்கு எதிரான பாசறையில் தொடர்ந்து பொது வெளியில் வேலை செய்து வருகின்றேன். இதனை இன்றும், இன்னமும் இறுகப் பற்றி வருகின்றேன் ஒரு மனிதனின் உயிர் வாழ்தல் என்ற மனிதாபிமான எதிர்பார்பை பகைவர் புலத்திலும் சீர்தூக்கிப் பார்க்கும் மனப் பக்குவத்தை 40 வருடங்களுக்கு முன்பு மக்களின் வடுதலைக்காக புறப்பட்ட நாட்களிலேயே எனக்குள் வளர்த்துக் கொண்டேன். இது நான் நம்பும், கைகொள்ளும் இடதுசாரி சிந்தனையில் இருந்து உருவானது.