நம்பிக்கை தரும் மனுஷி சந்திரிகா

(சாகரன்)
மீண்டும் ஒரு தடவை நம்பிக்கை தரும் வார்த்தைகளை உதிர்திருக்கின்றார் சந்திரிகா குமாரரணதுங்க பண்டாரநாயக்கா. “…இலங்கையில் உள்ள இரு பெரும் பெரும்பான்மைக்ட கட்சிகள் இலங்கை சுதந்திரம் அடைந்து 70 வருடங்கள் ஆகியும் தமிழர்களின் அரசசியல் பிரச்சனைக்கு தீர்வு காணத் தவறிவிட்டனர் மாறி மாறி ஆட்சிக்குவரும் போது ஒருவர் தீர்வுகளை முன்வைக்கும் போது மற்றயவர் எதிர்ப்பதன் மூலம் இது நடைபெற்றது. தற்போது இரு பெரும் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்திருப்பது தமிருக்கான தீர்வை வழங்க வாய்ப்ப ஏற்பட்டிருக்கின்றது….” என்ற விடயத்தை இது தவறும் பட்சத்தில் காரணம் கூறமுடியாத விடயம் இங்க ஒழித்திருக்கும் என்பதை தனது நம்பிக்கையும் நம்பிக்கையீனத்தையும் இணைத்து குற்றம் சாட்டும் பாணியிலிருந்து தவிர்த்து யதார்தத்தை கூறியுள்ளார்.

(“நம்பிக்கை தரும் மனுஷி சந்திரிகா” தொடர்ந்து வாசிக்க…)

வெளிவந்துவிட்டது வானவில் 75: மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு சரியான தலைமையும் வழிகாட்டலும் அவசியம்

இலங்கையில் இப்பொழுது எங்கு திரும்பினாலும் ஒரே போராட்டமயமாக இருக்கின்றது. முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மக்கள் நாளாந்தம் போராட்டக்களங்களை நோக்கி அணி வகுத்துச் செல்வதைக் காண முடிகிறது. இலங்கையில் மாத்திரமின்றி, உலகம் முழுவதும் 1960களின் பிற்பகுதியில் ஏற்பட்டது போன்ற மக்கள் எழுச்சி ஒன்றுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களில் நமது அண்டை நாடான இந்தியாவின் தமிழக மாநிலத்தில் ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டம் (ஜல்லிக்கட்டு பற்றிய எமது கருத்து
வேறாக இருந்தபோதும்), நெடுவாசல் இயற்கை எரிவாயுத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் என இரண்டு மிகப் பிரமாண்டமான மக்கள் தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன. (மேலும்….)

அசோகமித்திரன்: ஓய்வில்லா எழுத்தியக்கம்

தமிழின் மாபெரும் எழுத்தாளர்களுள் ஒருவரான அசோகமித்திரன் கடந்த 23-03-2017 அன்று காலமானார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் படைப்புலகில் தீவிரமாக இயங்கிவந்தவர் அசோகமித்திரன். இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட குறுநாவல்கள், ஒன்பது நாவல்கள், நூற்றுக்கணக்கான கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என விரியும் படைப்புலகம் அவருடையது. 1960-களில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய அவர், தன் இறுதி மூச்சுவரையிலும் எழுத்தாளராகவே வாழ்ந்தார். எண்பது வயதுக்குப் பிறகும் அவரது எழுத்து வேகம் எல்லோரையும் பிரமிக்க வைத்தது. நம் ‘தி இந்து’ நாளிதழிலும் சமீபத்தில் அவர் எழுதிய ‘மவுனத்தின் புன்னகை’ தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

(“அசோகமித்திரன்: ஓய்வில்லா எழுத்தியக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

ஆர்.கே.நகர் யாருடைய கணக்கு ஜெயிக்கும்?

(கே.கே.மகேஷ்)

யானைக் காதில் எறும்பை விடத் துடிக்கிறது திமுக

இன்னொரு இடைத்தேர்தலுக்குத் தயாராகிவிட்டது ஜெயலலிதாவின் ஆர்.கே. நகர் தொகுதி. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு, இதை மற்றுமோர் தேர்தலாக அல்லாமல், தமிழக அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக மாற்றியிருக்கிறது. ஜெயலலிதாவின் தொகுதியில் போட்டியிட்டு வெல்வதன் மூலம், ‘நாங்களே உண்மையான அதிமுக’ என்று பறைசாற்றிக்கொள்ளும் வாய்ப்பாகவே அதிமுகவுக்கு உரிமை கோரும் மூன்று அணிகளும் கருதுகின்றன.

(“ஆர்.கே.நகர் யாருடைய கணக்கு ஜெயிக்கும்?” தொடர்ந்து வாசிக்க…)

பஞ்சாபில் ஆம் ஆத்மி தோற்றது ஏன்?

(சேகர் குப்தா)

‘தோல்வி என்பது அனாதைக் குழந்தை அதற்கு யாரும் சொந்தம் கொண்டாட மாட்டார்கள்’ என்பது முதுமொழி. பிரிட்டிஷ் பத்திரிகையாளர் மைரா மெக்டொனால்ட் இதே தலைப்பில் எழுதிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பதால் எனக்கும் இது தோன்றியது. பஞ்சாபிலும் கோவாவிலும் ஆம் ஆத்மி கட்சி அடைந்த தோல்வியின் பின்னணியில் இதையே சிந்தித்தேன். வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னதாகவே அந்த கட்சி வெற்றி விழா கூட கொண்டாடியது.

(“பஞ்சாபில் ஆம் ஆத்மி தோற்றது ஏன்?” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்கொட்லாந்து: பிரிந்து போதலெனும் முரண்நகை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாட்டின் ஒருபகுதி பிரிந்து தனிநாடாவதும் அதை நிறுத்தப் போர்கள் வெடிப்பதும் அவை பேரழிவுகளாகத் தோற்றம் பெறுவதும் வரலாற்றில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்திருக்கிறது. இப்போதைய உலக ஒழுங்கு, தனிநாடுகள் உருவாவதற்கு வாய்ப்பானதாக இல்லை. இயல்பாகவே தனிநாடுகளாக உரித்துடைய பல, அவ்வாறு பிரிந்து போகாமல் பார்க்கப்பட்டுள்ள அதேவேளை, மக்களால் கோரப்படாத நிலையில் சில நாடுகள் தனிநாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை தனிநாடு என்கிற கோரிக்கையின் நியாயத்தை ஒருபுறம் கேள்விக்குட்படுத்துவதோடு, மறுபுறம் நியாயமான தனிநாட்டுக் கோரிக்கைகளை மறுதலிக்கவும் வழிசெய்கின்றன.

(“ஸ்கொட்லாந்து: பிரிந்து போதலெனும் முரண்நகை” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாணசபையின் அலட்சியப்போக்குகள் – கருணாகரன்

கடந்த வாரம் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கனடாவிலிருந்து வந்திருந்த முதலீட்டாளர் குழுவொன்று சந்தித்திருந்தது. இந்தக் குழுவில் முதலீட்டாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 29 பேர் அடங்கியிருந்தனர். இந்தச் சந்திப்பின் நோக்கம், போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் வட பகுதியை அபிவிருத்தியடைய வைப்பதற்கான முதலீடுகளைச் செய்வதற்குரிய ஏதுநிலைகளை ஆராய்வதாகும். ஆனால், “சந்திப்பு இனிக்கவில்லை. திருப்தியளிக்கவில்லை. உரிய முறையில் இதற்கான பதில்கள் கிடைக்கவில்லை. சரியான அக்கறை காட்டப்படவில்லை. சி.வி.விக்னேஸ்வரனிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே எழுத்தில் தெரியப்படுத்தியிருந்த போதிலும் அவரிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் கிட்டவில்லை என்று முதலீட்டாளர்கள் குழு கவலை தெரிவித்திருக்கிறது.

(“வடமாகாணசபையின் அலட்சியப்போக்குகள் – கருணாகரன்” தொடர்ந்து வாசிக்க…)

LTTE atrocities also have to be investigated

(BY Mirudhula Thambiah)
Former Chief Minister of the merged North-East A. Varatharaja Perumal said, there is much to investigated on LTTE atrocities and disappearances committed by them, they also have to be inquired into. But these issues are not on the agenda in any place. Only the last part of the war is on the agenda of the UNHRC in Geneva.
“Geneva has nothing to do with the political solution. It is in relation to the past and not with the future. Therefore, the section that is interested in the past, only wants to involve the latter part of the war. If it is considered from the beginning, there is so much to inquire about the LTTE as well,” he added.

(“LTTE atrocities also have to be investigated” தொடர்ந்து வாசிக்க…)

தனி நாடு பாதையை நோக்கி நகர்கிறதா ஸ்காட்லாந்து?

பிரிட்டனிலிருந்து பிரிந்து ஸ்காட்லாந்து தனி நாடாவது தொடர்பாக இரண்டாவது முறை பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியிருக்கிறார், ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன். இந்தக் கோரிக்கையை அவர் வெளியிட்ட அதே சமயத்தில்தான், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நிகோலா ஸ்டர்ஜனின் இந்தக் கோரிக்கை, பிரிட்டனிலிருந்து வெளியேற வேண்டும் எனும் கனவு, ஸ்காட்லாந்து மக்களிடம் இருந்து முற்றிலுமாக அகன்றுவிடவில்லை என்பதை பிரிட்டன் அரசுக்குச் சுட்டிக்காட்டுகிறது எனலாம். ஆனால், இது காலப் பொருத்தமிக்க கோரிக்கையா என்பது தெரியவில்லை.

(“தனி நாடு பாதையை நோக்கி நகர்கிறதா ஸ்காட்லாந்து?” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாணசபையின் அலட்சியப்போக்குகள்

(கருணாகரன்)

கடந்த வாரம் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கனடாவிலிருந்து வந்திருந்த முதலீட்டாளர் குழுவொன்று சந்தித்திருந்தது. இந்தக் குழுவில் முதலீட்டாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 29 பேர் அடங்கியிருந்தனர். இந்தச் சந்திப்பின் நோக்கம், போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் வட பகுதியை அபிவிருத்தியடைய வைப்பதற்கான முதலீடுகளைச் செய்வதற்குரிய ஏதுநிலைகளை ஆராய்வதாகும். ஆனால், “சந்திப்பு இனிக்கவில்லை. திருப்தியளிக்கவில்லை. உரிய முறையில் இதற்கான பதில்கள் கிடைக்கவில்லை. சரியான அக்கறை காட்டப்படவில்லை. சி.வி.விக்னேஸ்வரனிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே எழுத்தில் தெரியப்படுத்தியிருந்த போதிலும் அவரிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் கிட்டவில்லை என்று முதலீட்டாளர்கள் குழு கவலை தெரிவித்திருக்கிறது.

(“வடமாகாணசபையின் அலட்சியப்போக்குகள்” தொடர்ந்து வாசிக்க…)