வேலையில்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உற்பத்திசார் பொருளாதார கொள்கைகளே தேவை

(கருணாகரன்)

வேலைகோரும் பட்டதாரிகள் வீட்டிலும் வீதியிலுமாக நிறைந்து போயிருக்கிறார்கள். படித்துப் பட்டம் பெற்ற பிறகு வேலை கிடைக்கவில்லை என்றால், அவர்களால் என்ன செய்ய முடியும்? வேலை கேட்டுப்போராடுவார்கள். இந்தப் போராட்டத்தைப் பற்றி அரசாங்கம் அக்கறைப்படவில்லை என்றால், அதைக் கோவிப்பார்கள், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவார்கள். கூடவே தங்களுக்கு முன்னே உள்ள அரசியல்வாதிகளையும் அதிகார அமைப்புகளையும் எதிர்ப்பார்கள். இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான்.

(“வேலையில்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உற்பத்திசார் பொருளாதார கொள்கைகளே தேவை” தொடர்ந்து வாசிக்க…)

ஜக்கி:விலைபொருளாக்கும் வித்தை கூடியவர்.

தேசத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாப் பொருளாதாரம் எப்போதும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. அதிலும் பன்னாட்டு மூலதனப் பெருக்கத்திற்குப் பின் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால் ஒவ்வொரு நாடும் சுற்றுலாத் தலங்களை உருவாக்கி விளம்பரப்படுத்தி விற்கின்றன. பல நாடுகளின் சுற்றுலாக் கையேடுகளைக் கண்டும் வாசித்தும் பார்த்தால், அந்நாடுகளில் விற்பனைக் கருத்தியல் என்ன என்பதை உணர முடியும்.

(“ஜக்கி:விலைபொருளாக்கும் வித்தை கூடியவர்.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி சிறீதரன்

தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி சிறீதரனுக்கு இப்ப ஒரு நோய் பிடித்திருக்கு. எந்த விழாவிலும் தானே முன்னுக்கு நிற்க வேண்டும் என்று. இதனால் தமிழ் மக்களுக்கு எதும் தீங்கு நடக்குமா என்று அவர் யோசிப்பதில்லை. கவலைப்படுவதும் இல்லை. மாவீரர் நிகழ்வு என்றால் தானே தீபம் ஏற்ற வேண்டும் என்று அடம் பிடிப்பார். கோயில் விழா என்றால் தனக்கு பரிவட்டம் கட்ட வேண்டும் என்பார்.
ஆமி தளபதிக்கு விழா எடுத்தாலும் அதைப் பற்றி அவருக்கு கவலை இல்லை. தளபதிக்கு பரிவட்டம் கட்டி கௌரவித்தாலும் அதையிட்டு அவருக்கு கவலை இல்லை.

(“தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி சிறீதரன்” தொடர்ந்து வாசிக்க…)

வாழும் கியூபா தலைவர் பிடல் காஸ்ரோ

உலகின் இயற்கை விவசாயத்தில் முக்கிய இடம் வகிக்கும் நாடு கியூபா மட்டுமே, இரசாயன உணவுகளையும் தனது வாழ்நாளில் வாழ்ந்த காலத்தைவிட அதிக காலம் குளிர்சாதன பெட்டிக்குள் இருக்கும் உணவு பதார்த்தங்களை உண்ணும் இந்த நவீன உலகில் அதிக இயற்கை உற்பத்திகள் உள்ள ஒரு நாடு என்ற ஒரு பெருமையை கியூபா கொண்டுள்ளது. ஒரு காலத்தில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தின் ஆசீர்வாதத்துடன்  ஆட்சி செய்த புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா வின் ஆட்சியில் (1959) அதிக ரசாயன உரங்கள் காரணமாக அழிந்து வந்த விவசாய நிலத்தை இயற்கையின் உர வகைகளை பயன்படுத்தி உலகின் இயற்கை உணவு உற்பத்தி செய்யும் நாடுகளில் முதல் நாடாக ஆக்கி விட்டு போயிருக்கிறார்.

(“வாழும் கியூபா தலைவர் பிடல் காஸ்ரோ” தொடர்ந்து வாசிக்க…)

சிம்பாப்வே: ஆபிரிக்காவின் கலகக்காரன்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலக அரசியல் அரங்கில் கலகக்காரர்களுக்கு தனியான இடமுண்டு. கலகக்காரர்கள் எல்லோரும் ஓரே இயல்புடையவர்கள் அல்லர். அவர்கள் வாழ்ந்த காலம், இடம், உலகச் சூழல் என்பனவும் அவர்களின் நடத்தையுமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. கலகக்காரர்களே உலக அரசியல் அரங்கை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பதைத் துணிந்து சொல்லவியலும். அவர்கள் இல்லாவிடின் ஒற்றைப் பரிமாண உலக அரசியலை சத்தமின்றி ஏற்று நடக்கும் இயல்புடனேயே உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால், உலகம் இப்போது அவ்வாறு இயங்குவதில்லை. அவ்வாறு இயங்குவதையே அதிகார மையங்கள் விரும்புகின்ற போதும் அது சாத்தியமாவதில்லை.

(“சிம்பாப்வே: ஆபிரிக்காவின் கலகக்காரன்” தொடர்ந்து வாசிக்க…)

வெளிவந்துவிட்டது வானவில் 74….: புதிய அரசியலமைப்பு ஜே.ஆரினதை விட மோசமாக இருக்கப் போகிறது!

மாகாண சபைகளை கலைக்க அல்லது அவற்றின் அதிகாரங்களை மீளப்பெற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற விடயத்தில்
அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இணக்கம் தெரிவித்திருக்கிறது என அரசியலமைப்புச் சட்டத்தரணியும், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விக்கிரமரத்ன, நாட்டின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும்
நாட்டின் சுதந்திரம் என்பனவற்றுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு
மாகாண சபையையும் கலைப்பதற்கோ அல்லது அதனது அதிகாரங்களை மீளப் பெறுவதற்கோ மத்திய அரசுக்கு அதிகாரம்
அளிக்கும் யோசனையொன்றை புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். (தொடர்ந்து வாசிக்க….)

வடக்கிலும் கிழக்கிலும் கூட திராவிட மொழிகள்..

இன்றைய The Hindu நாளிதழில் ஒரு செய்தி. மே.வங்க மாநிலத்தின் வட புலத்தில் (Dooars) வசிக்கும் ‘ஓரோய்ன்’ (Oraon) எனும் பழங்குடியினர் பேசுகிற ‘குருக்’ (Kurukh) எனும் மொழியை திருனாமுல் காங்கிரஸ் அரசு மாநில ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. அப்பகுதியில் வாழும் 17 இலட்சம் பழங்குடியினர் அம்மொழியைப் பேசுபவர்களாம். மம்தா அரசு மேற்கொண்டுள்ள இந் நடவடிக்கை அம் மொழியை அழிவின் விளிம்பிலிருந்து காப்பற்றியுள்ளது. பாராட்டுக்கள்.

(“வடக்கிலும் கிழக்கிலும் கூட திராவிட மொழிகள்..” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ( பகுதி 113 )

வட கிழக்கு மாகாண ஆளுனர் அவர்களின் அழைப்பை ஏற்று பற்குணம் மீண்டும் மாகாண சபைக்குத் திரும்பினார்.பற்குணத்தின் பாதுகாப்புக்கும் அவரே உத்தரவாதம் அளித்தார். பற்குணம் குடியிருந்த வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் புலிகளின் புலனாய்வுத்துறை அள்ளிச் சென்றுவிட்டது.அவருடைய மகளின் சிறுவயது சம்பாசனைகள் பதிவுசெய்யப்பட்ட ஒலிப்பதிவு நாடாக்கள் கூட புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டது.எதுவும் மிஞ்சவில்லை.

(“பற்குணம் ( பகுதி 113 )” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பகுதி 112 )

நான் 1989 புரட்டாசி மாதம் கனடா வந்துவிட்டேன்.அதன்பின்பாக இலங்கை இந்திய அரசியலில் முறுகல் நிலை தொடங்கியது.புலிகளும் பிரேமதாசாவும் தேன்நிலவு கொண்டாட மாகாண சபை நிலைமை கேள்விக்குறியானது.இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்திய படைகள் வாபஸ் உறுதியானது.

(“பற்குணம் (பகுதி 112 )” தொடர்ந்து வாசிக்க…)

பேரா. சிவசேகரத்தின் அசிங்கம்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவில் ஒரு பேரவை உறுப்பினராக சிவசேகரம் தன் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக நலன்களை ஒதுக்கி செயற்பட்டுவருவது யாழிலிருந்துவரும் நம்பகரமான செய்திகளாக இருக்கிறது. 2015 சனவரியில் மைத்திரி சனாதிபதியானபின் டக்களசின் கைப்பாவைகளாக இருந்த பேரவை உறுப்பினர்கள் கலைக்கப்பட்டு தமிழரசுக்கட்சி சிபார்சு செய்த பெரும்பாலான படித்த நேர்மையானவர்கள் பேரவை உறுப்பினர்களாக்கப்பட்டார்கள்.

(“பேரா. சிவசேகரத்தின் அசிங்கம்.” தொடர்ந்து வாசிக்க…)