புதிய யுகத்துக்கான இரு சகுனங்கள்

தமிழகத்தின் சிறுவர்களும் அரசியல் பேசுகிறார்கள். அடுத்த முதல்வராகப் பதவியேற்கவுள்ள சசிகலா நாட்டையே பேசவைத்திருக்கிறார். தன் காலத்தில் தமிழக அரசியல் களத்தின் ஒவ்வொரு வரலாற்று நிகழ்விலும் தன்னுடைய பேச்சுகளால் தன்னையும் உள்ளடக்கிக்கொண்ட ஒருவர், இதுபற்றி இன்றைக்கு என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. கருணாநிதி அமைதியானதற்கு முதுமை, தள்ளாமை, நினைவிழப்பு என்று மருத்துவரீதியாக எவ்வளவோ காரணங்களை அடுக்கலாம். நான் இந்தச் சூழலைத் தர்க்கரீதியாக அணுக முயலவில்லை. ஜெயலலிதாவின் மறைவு வரை அரசியலில் வெளிப்படையாக எந்தப் பெரிய பொறுப்பிலும் இல்லாதிருந்த சசிகலா, அடுத்த இரண்டு மாதங்களில் படிப்படியாக விஸ்வரூபம் எடுப்பதையும், அதே காலகட்டத்தில் கருணாநிதி படிப்படியாக முடங்கிப்போவதையும் உருவாகிவரும் ஒரு புதிய யுகத்துக்கான இரு சகுனங்களாகவே பார்க்கிறேன்.

(“புதிய யுகத்துக்கான இரு சகுனங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

வித்தியாவின் வாடகை வீடு

இன்று ஊர்காவற் துறையில் படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் வழக்கு நீதி மன்றத்தில் விசாரணை செய்யப் பட்டது. அதன் போது பெண்களுக்கெதிரான வன்முறையை எதிர்த்து கவனயீர்ப்பொன்று ஊர்காவற்துறை நகரத்தில் நீதிமன்றத்திற்கருகில் இடம்பெற்றது. இது முடிந்த பின் வித்தியாவின் தாயாரைச் சந்திக்கச் சென்றோம். இன்றைய தினம் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

(“வித்தியாவின் வாடகை வீடு” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் மரபின் நீட்சியே ஜல்லிக்கட்டு: மாடு வளர்ப்பு, மாட்டுத் தொழுவம் மறைந்த வரலாறு

(ஒய். ஆண்டனி செல்வராஜ்)
‘மாடு இல்லா வீடு பாழ்’ என்பது பழமொழி. ஏறு பூட்டி உழவு செய்வதில் தொடங்கி, மாடு கட்டிப் போரடித்து, தட்டு வண்டியில் பாரம் ஏற்றி மக்கள் பஞ்சம் போக்கியது வரை பண்டைய தமிழகத்தில் மாடுகளோடுதான் தமிழர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. அதனால், மாடுகளுக்காகவே விழா எடுக்கப்பட்டு, அந்த விழாக் காலங்களில் பொழுதுபோக்கவும், வீரத்தை நிரூபிக்கவும் மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு, மாடு ஓட்டம், மாடு மறித்தல், பட்டிப் பொங்கல், கன்று காணிக்கை, தம்பிரன் மாடு, சலங்கை எருது ஆட்டம், மாட்டு வண்டிப் பந்தயம், மாட்டு வாகடம் போன்ற வீர விளையாட்டுகள், பாரம்பரியமாக நடைபெற்று வந்தன.

(“தமிழர் மரபின் நீட்சியே ஜல்லிக்கட்டு: மாடு வளர்ப்பு, மாட்டுத் தொழுவம் மறைந்த வரலாறு” தொடர்ந்து வாசிக்க…)

பன்னீர்செல்வம்

“இவரே பரவாயில்லை…!..இவர்தான் வேண்டும்..!” என்று மக்களை திரும்பிப்பார்க்க வைத்துள்ள தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் பற்றிய சில தகவல்கள். “பேச்சிமுத்து” என்ற கிராமத்து மணம் வீசும் தமிழ்ப்பெயர்தான் அவரின் இயற்பெயர். இந்த பெயர் வீட்டில் மூத்தவர் ஒருவரின் பெயராக இருந்ததால், பன்னீர்செல்வமாக மாறினார். இளவயதில் எம்ஜிஆர் பக்தராக வலம்வந்த இவர் அவரைப்போலவே “ஓபிஎஸ்” என்னும் மூன்றெழுத்துடன் அரசியல் உலகில் வலம்வரத்தொடங்கினார்.

(“பன்னீர்செல்வம்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 101 )

பற்குணத்தின் மகள் அபிராமியை மன்னார் முன்னாள் அரச அதிபர் வாமதேவன் சுண்டுக்குளி மகளிர் க்ல்லூரியில் சேர்ப்பதற்கு உதவினார்.எனக்கு வேலை இல்லை என்பதால் நான் அவளை பள்ளிக்கு கொண்டு செல்லும்வேலையை பொறுப்பெடுத்தேன்.

(“பற்குணம் A.F.C (பகுதி 101 )” தொடர்ந்து வாசிக்க…)

தன் திண்ணைக்குள் நடாத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள்.

(சாகரன்)
 
1981 மே 31 யாழ் நூலகம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்த சுதந்தர மாணவர் அமைப்பு (இதில் அனேகர் சிங்கள் மாணவர்கள் அங்கம் வகித்தனர்) யாழ் இற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். தமக்கான உயிராபத்தையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மேற்கொண்ட சுதந்திரமான விஜயம் இது. இந்த விஜயத்தின் நோக்கம்; யாழ்ப்பாணத்தில் நூலக எரிப்பு யாழ் சந்தை எரிப்பு சுன்னாகம் சந்தை எரிப்பு போன்ற விடயங்களின் உண்மைத் தன்மையை அறிந்து புகைப்படங்களின் உதவியுடன் இதனை கொழும்பு பல்கலைக் கழத்திலும் அதனூடு எனைய சிங்கள் மக்கள் மத்தியிலும் இலங்கை அரசின் செயற்பாட்டினை அம்பலப்படுத்துவதாகும்.

(“தன் திண்ணைக்குள் நடாத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள்.” தொடர்ந்து வாசிக்க…)

“உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக தொடர்ந்து ஏழாவது நாளாக இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் பொறுமையை இழந்த மக்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதாவது, “இன்று (07-02-2017) மாலை 6 மணிக்குள் உரிய பதில்கள் கிடைக்காவிட்டால் எமது போராட்ட வடிவம் மாறும், எங்களில் ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

(““உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”” தொடர்ந்து வாசிக்க…)

கண்டன அறிக்கை

ஆணாதிக்க சமுதாயமானது பொதுவெளியை ஆண்களுக்கென்றே ஒதுக்கி வைத்துள்ளது. பெண்களுக்கு என்று இந்த பால்வாத சமுதாயம் விட்டுவைத்திருப்பது வீடும் அது சார்ந்த வெளிகளும் மட்டுமே. ஆனாலும் ஆளுமைமிக்க பெண்கள் தொடர்ச்சியாக இந்த பொது – தனிப்பட்டது என்ற பாகுபாட்டிற்கு எதிராக தொடர்ந்தும் போராடி வந்துள்ளார்கள். இப்படியாக போராடும் பெண்கள் மீது பால்வாதம் தொடர்ச்சியாக தாக்குதலை தொடுத்து வந்திருக்கிறது. இப்படிப்பட்ட தாக்குதல்களின் போது பால்வாதம் எப்போதும் பெண் உடல், அதன் செயற்பாடுகள், பெண்களது நடத்தைகள் என்பவற்றின் மீதே தனது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றது. இந்த வகையில் பெண்களை தொடர்ந்தும் வீட்டினுள் முடக்கி வைப்பதற்கு பால்வாதம் பாவிக்கும் ஆயுதமாகவே பாலியல்ரீதியான தாக்குதல்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். (“கண்டன அறிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

நந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை

சில மரணங்கள் கொடுமைகள் பொருளாதாரம் சாதி அழகு அந்தஸ்து போன்றவற்றினால் சம்பந்தப்பட்டவர்களை விட மற்றவர்களினால் மறக்கப்பட்டு விடும் என்னவோ. நீதி என்பது வக்கிரமானவர்களின் கைகளில் வசமாக மாட்டிக்கொண்டு தவிப்பது மேலும் மேலும் இப்படியான நிகழ்வுகளால் நிரூபிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.

(“நந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை” தொடர்ந்து வாசிக்க…)

சிங்கள ஆட்சியாளர்களுக்கு பணிந்து போகாத வடகிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்

இணைந்த வடகிழக்கு மாகாண அரசின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் அவர்கள், மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடன், வடகிழக்கு மாகாண அரசுக்காண அதிகாரங்களை பகிர்வது தொடர்பான ஒரு சந்திப்பில் கிளிக் செய்த புகைப்படம் ஒன்றையே நீங்கள் இங்கு காண்கிறீர்கள்.
வடகிழக்கு மாகாண அரசு அமைத்து மிகக் குறுகிய காலத்தில் பெரும் நெருக்கடிகளின் மத்தியிலும் பல சாதனைகளை புரிந்தவர் திரு. வரதராஜப்பெருமாள் அவர்கள். ‘இது மாகாண சபை அல்ல மாகாண அரசு’ என இலங்கை அரசுடன் வாதிட்டவர். மாகாண அரசிற்கான அதிகாரங்களை கேட்டு இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடிகளை கொடுத்தவர். ‘எங்களோடு ஒத்துழைப்பீர்களானால் உங்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம்’ என்ற தொனியில் பேசி ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் விலைக்கு வாங்க முற்பட்ட வேளைகளில் எல்லாம் அதைத் புறக்கணித்து மாகாண அரசுக்குரிய அதிகாரங்களை பெறுவதிலேயே குறியாக இருந்தவர் திரு. வரதராஜப்பெருமாள் அவர்கள். (“சிங்கள ஆட்சியாளர்களுக்கு பணிந்து போகாத வடகிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்” தொடர்ந்து வாசிக்க…)