சம்பந்தர், மைத்திரி, ரணில், மகிந்த…….!

“நடைமுறையில் தேசிய அரசாங்கம் என்பது இல்லை. தேசிய அரசாங்கம் என்று சொல்வது பம்மாத்து. வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் இருபெரும் சிங்கள கட்சிகள் இணைந்து ஒரு அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர் இச் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது தேசிய நல்லிணக்க அரசாங்கத்துக்கு நெருக்கடி குடுக்க கூடாது என்பது எல்லாம் மக்களை ஏமாற்றும் பம்மாத்து.

மைத்திரி – ஜனாதிபதி
ரணில் – பிரதமர்
சம்மந்தர் – எதிர்கட்சித்தலைவர்

இந்த கூட்டு, சீன சார்பு மகிந்தவை அகற்றுவதற்கு மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட கூட்டுச்தி

மைத்திரி – தனது கட்சிக்கும் விசுவாசமாக இல்லை நாட்டுக்கும் விசுவாசமாக இல்லை

ரணில் தன் நாட்டுக்கு விசுவாசமாக இல்லை

சம்மந்தர் தன் மக்களுக்கு விசுவாசமாக இல்லை

மூவரும் விசுவாசமாக இருப்பது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கே

சுயத்தை தொலைத்த இவர்களால் நல்லிணக்கத்தையும் கொடுக்க முடியாது நல்லாட்சியையும் கொடுக்க முடியாது அபிவிருத்தியையும் கொடுக்க முடியாது. இவர்கள் மூவரையும் ஓரணியில் வைத்திருப்பது அமெரிக்கா அங்கு நிலை மாறினால் இங்கு நிலை தடுமாறும் புதிய அரசியல் அமைப்பு சாசனம் என்பது கானல் நீராகவே போகப்போகிறது

இலங்கையின் அரசியல் அமைப்பு சாசன திருத்தத்துக்கு உண்மையாகவே உழைத்தவர் சந்திரிக்கா பண்டாரநாயக்காவே. அவர் சுதுநிலமே அமைப்பை உருவாக்கி புதிய அரசியல் அமைப்பு சாசனத்தை சிங்கள மக்களும் தமிழ்மக்களும் ஏற்கப்பண்ணுவதற்கான முன்முயர்சிகளை உளமாரவே முன்னெடுத்தார். அதனை சரியாக பயன்படுத்தாது விட்டமை புலிகள் செய்த முட்டாள் தனம். அன்று உயிருக்கு பயந்து சம்மந்தரும் சந்திரிக்காவின் தீர்வுத் திட்டத்தை ஆதரிக்கவில்லை இன்று சந்திரிக்கா பல் புடுங்கப்பட்ட நிலையில் உள்ளதுடன் மகிந்தவை பழிவாங்க வேண்டும் என்ற வெறியே மேலோங்கியுள்ளது.

தனது கூட்டமைப்குக்கு உள்ளேயே ஒருங்கிணைந்த செயற்பாட்டை உருவாக்க முடியாத, தானே அரசியலுக்கு கொண்டு வந்த விக்கினேஸ்வரனை தொடர்ந்தும் இணைத்து வைக்க தெரியாத சம்மந்தனா மகிந்தவை சமாதானப்படுத்த போகிறார் இவரா பெளத்த மட பீடங்களை அணுகி சமாதானபடுத்த போகின்றார்.

இவற்றை சாத்தியமாக்குவதற்கு ஒரு political will வேண்டும் அது இவர்கள் மூவரிடமும் இல்லை. மகிந்தவிடம் அது இருந்தது. அந்த political will தான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. இல்லாவிட்டால் இன்றும் தினமும் சராசரியாக 100 பேர் என்னத்துக்கு என்று தெரியாமல் இறந்து கொண்டே இருப்பார்கள். தற்போதைய இலங்கை ஒரு சமூக ஜனநாயக புரட்சிக்கான தேவையை உணர்த்தி நிற்கிறது. இந்த எந்த அரசியல்வாதிகளும் அதனை முன்னெடுக்கப் போவதும் இல்லை மாற்றத்தை கொண்டுவர போவதும் இல்லை. அதற்கான தேவை சிங்கள மக்களை தவிர தமிழ்மக்களுக்கே மிக மிக அவசியமாக உள்ளது ”

(Valavan)

தேசியவாத முதலாளித்துவம்: உலகமயமாக்கலிலிருந்து விடைபெறல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பூமி, சூரியனைச் சுற்றுவதோடல்லாமல் தன்னைத் தானேயும் சுற்றி வருகிறது. அதேபோலவே, நிதி மூலதனமும் புதிய புதிய வழிகளில் தனக்கான போக்கிடத்தைத் தேடினாலும் செல்லக்கூடிய இடங்கள் மட்டுப்பாடானவை. இதனால், செல்வதற்கான வழிகளை அது மாற்ற வேண்டி ஏற்படுகிறது. இது இயற்கை நிகழ்வல்ல. தொடர்ந்து மாற்றத்துக்குள்ளாகும் உலக அரங்கில், இது தவிர்க்கவியலாததாகிறது. அதேபோல, ஏற்படுகின்ற நெருக்கடிகள் இம்மாற்றங்களை விரைவுபடுத்துவதோடு குழப்பத்துக்கும் நிச்சயமின்மைக்கும் ஆளாக்குகின்றன. இதுவே இப்போது நடந்தேறுகிறது.

(“தேசியவாத முதலாளித்துவம்: உலகமயமாக்கலிலிருந்து விடைபெறல்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு மாகாண சபை அமைச்சரவை மாற்றம்! முதல்வரால் முடியாதா?

இதனை யாரோ கிளப்பிவிடும் புரளி என எவரும் எண்ண வேண்டாம். உண்மையில் அவ்வாறான முன்முயற்சிகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இருந்தும் அமைச்சர்கள் மீதான ஊழல் விசாரணைக்கான கால அவகாசத்தை மேலும் இரண்டு மாதங்கள் நீடித்ததாக, மாகாணசபை தவிசாளர் சி வி கே சிவஞானம் அறிவித்த செய்தியை பார்த்து பலருள் எழுந்த கேள்வியே இது.

(“வடக்கு மாகாண சபை அமைச்சரவை மாற்றம்! முதல்வரால் முடியாதா?” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 100 )

இந்திய இராணுவம் குடாநாட்டைக் கைப்பற்றிய பின் புலிகளை வேட்டையாடும் முயற்சிகளை மேற்கொண்டது.இதில் பல அப்பாவிகளும் கைது செய்யப்பட்டனர்.சில மனிதர்கள் பிடிக்காதவர்களை பழிவாங்க இதையும் சந்தர்ப்பமாக பயன்படுத்தினர்.

(“பற்குணம் A.F.C (பகுதி 100 )” தொடர்ந்து வாசிக்க…)

எனது நாட்டின் சுதந்திர தினத்தில் நான் அந்நியனாகவே உணரப்படுகின்றேன்

(சாகரன்)

எனக்கு அரிவரியில் இருந்து சர்வகலாசாலை வரை இலவசக் கல்வியைத் தந்தநாடு இலவசமருத்துவத்தை தந்தநாடு. ஏன் இலவச கூப்பன் அரிசியையும் தந்தநாடு. பிரிவினை வேண்டும் என்று போராடியவர்களில் நானும் ஒருவன். ஆனால் பிரிவினையில் உடன்பாடு அதிகம் எனக்கு ஏற்படவில்லை. தமிழ் சிங்களக் கலவரம் என்று யாரிடமும் அடிவாங்காதவன். உள்ளுரில் கலவரங்களால் அகதிகளாக இடம்பெயராதவன். சிங்கள சமூகத்துடன் அதிகம் பழகும் வாய்ப்புகள் கிடைக்காதவன் ஆனாலும் நான் நன்றாக பழகிய முஸ்லீம் சமூகம் அளவிற்கு எனக்கு சிங்கள சமூகத்தையும் பிடிக்கும். இது ஏனோ தெரியவில்லை.

(“எனது நாட்டின் சுதந்திர தினத்தில் நான் அந்நியனாகவே உணரப்படுகின்றேன்” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் அத்தியாயம் 9

பழையபுலிகளின்; அனுபவப்பகிர்வு எனது நினைவுகளை இரண்டுவருடம் பின் நோக்கிஇழுத்துச்சென்றது. வன்னியில் அப்பொழுது மாத்தையா கொடிகட்டிபறந்தகாலம். TRO அப்பொழுதுதான் அங்கே காலூன்ற ஆரம்பித்தது. ஒருநாள் காலைஅப்போதைய TRO பொறுப்பாளன் என்னைசந்திப்பதற்காகஅவசரஅவசரமாகவந்தான்.
“சேர் இண்டைக்குமத்தியானம் ஒரு கூட்டம் இருக்குநீங்கள் கட்டாயம் வரவேணும,; மாத்தையாஅண்ணையும் வாறார்”என்றான் கதையோடுகதையாக.

(“முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் அத்தியாயம் 9” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தலைமைகள் ஒரு குள்ளநரிக் கூட்டம்.

இயக்கங்கள் கட்சிகளை வைத்துக் கொண்டு சுய நல அலுவல்களை பாரத்துக் கொண்டு மக்களை ஏமாற்றும் குள்ளநரிக் கூட்டம் ஒன்று தன்னை தமிழர் தலைமை என்கின்றது நாம் ஏமாறுவதா??
தமிழ் தலைமைகளின் கேவலங்கள் : 2017 சுதந்திர தினம்.
உங்களுக்கு ஒரு பகிஸ்கரிப்பு தேவைப்படுகின்றதோ !! முதலில’ அரசின் சொகுசு வாகனங்களை பகிஸ்கரி
தேசியக் கூட்டமைப்பு 2016ல் அரசியல் தீர்வு என்ற பேய்க்காட்டல்
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொகுசு வாகனத்துக்கு கோட்டாவுக்கு கை நீட்டல்
தமது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பண ஆசை
தமது உறவினர்க்கும் பிள்ளைகளுக்டகும் பதவிக்கு ரனில் என்ன கோத்தா என்ன கை நீட்டுகின்றார்கள்

(“தமிழ் தலைமைகள் ஒரு குள்ளநரிக் கூட்டம்.” தொடர்ந்து வாசிக்க…)

நாடு எங்கே செல்கிறது?

இலங்கையில் இப்பொழுது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் யார்?, அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ற சந்தேகம் பலதரப்பட்டவர்களிடமும் எழுந்துள்ளது. இதுபற்றி அவர்களிடம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பதில்களைக் கூறுவார்கள்.

(“நாடு எங்கே செல்கிறது?” தொடர்ந்து வாசிக்க…)

இது- ஒரு சிரியச் சிறு பூவின் கதை!

(எஸ். ஹமீத்.)
கடந்த வருடம் சர்வதேச ஊடகங்களில் அந்த ஐந்து வயது சிரியச் சிறுமியின் வேண்டுகோள் முக்கிய பேசு பொருளாகியிருந்தது.
”என்னுடைய கண்களை எடுத்து என் தந்தைக்குப் பொருத்தி விடுங்கள். அப்போது அவரால் என்னை மீண்டும் பார்க்க முடியும்!”
இந்த வேண்டுகோள் உலகின் இதயத்தை உலுக்கி விட்டிருந்தது. ஆனாலும் அவளது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டது.

(“இது- ஒரு சிரியச் சிறு பூவின் கதை!” தொடர்ந்து வாசிக்க…)

வஞ்சிக்கப்பட்ட தமிழன் வாடிவாசல் வழி வெளியேறினான்

(பா.செயப்பிரகாசம்)

(இந்தியா பெரிய தேசம். பல அரசுகள். நிறையக் கலாசாரங்கள் இந்த உப கண்டத்தில். சில கலாசாரங்கள் விரும்பத்தக்கன, வேறு சில வெறுக்கத்தக்கன. காளை விளையாட்டைத் தமிழ் நாட்டில் தடுத்த நீதிமன்றம், ஏன் இங்கு சாதி வெறி விளையாட்டுகளைத் தடுக்கவில்லை? ஜல்லிக்கட்டு விவகாரம் இளம் சந்ததியைக் கொதிக்கச் செய்து மெரீனாவுக்கும் அழைத்துள்ளது. இந்த விவகாரம் இப்போது தீர்வைத் தேடி. தமிழின் சிறப்பான எழுத்தாளரும், இந்து மொழித் திணிப்பின் தலைமைப் போராளியாகவுமிருந்த பா. செயப்பிரகாசம் இந்த விவகாரம் மீது “காக்கைச் சிறகினிலே” எனும் காத்திரமான இதழில் மாசி மாதம் எழுதிய கட்டுரை நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.)

(“வஞ்சிக்கப்பட்ட தமிழன் வாடிவாசல் வழி வெளியேறினான்” தொடர்ந்து வாசிக்க…)