இது- ஒரு சிரியச் சிறு பூவின் கதை!

(எஸ். ஹமீத்.)
கடந்த வருடம் சர்வதேச ஊடகங்களில் அந்த ஐந்து வயது சிரியச் சிறுமியின் வேண்டுகோள் முக்கிய பேசு பொருளாகியிருந்தது.
”என்னுடைய கண்களை எடுத்து என் தந்தைக்குப் பொருத்தி விடுங்கள். அப்போது அவரால் என்னை மீண்டும் பார்க்க முடியும்!”
இந்த வேண்டுகோள் உலகின் இதயத்தை உலுக்கி விட்டிருந்தது. ஆனாலும் அவளது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டது.

(“இது- ஒரு சிரியச் சிறு பூவின் கதை!” தொடர்ந்து வாசிக்க…)

வஞ்சிக்கப்பட்ட தமிழன் வாடிவாசல் வழி வெளியேறினான்

(பா.செயப்பிரகாசம்)

(இந்தியா பெரிய தேசம். பல அரசுகள். நிறையக் கலாசாரங்கள் இந்த உப கண்டத்தில். சில கலாசாரங்கள் விரும்பத்தக்கன, வேறு சில வெறுக்கத்தக்கன. காளை விளையாட்டைத் தமிழ் நாட்டில் தடுத்த நீதிமன்றம், ஏன் இங்கு சாதி வெறி விளையாட்டுகளைத் தடுக்கவில்லை? ஜல்லிக்கட்டு விவகாரம் இளம் சந்ததியைக் கொதிக்கச் செய்து மெரீனாவுக்கும் அழைத்துள்ளது. இந்த விவகாரம் இப்போது தீர்வைத் தேடி. தமிழின் சிறப்பான எழுத்தாளரும், இந்து மொழித் திணிப்பின் தலைமைப் போராளியாகவுமிருந்த பா. செயப்பிரகாசம் இந்த விவகாரம் மீது “காக்கைச் சிறகினிலே” எனும் காத்திரமான இதழில் மாசி மாதம் எழுதிய கட்டுரை நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.)

(“வஞ்சிக்கப்பட்ட தமிழன் வாடிவாசல் வழி வெளியேறினான்” தொடர்ந்து வாசிக்க…)

சீமானின் சாதியில்லா தமிழ் தேசியம்..

காவல்துறை அடக்குமுறைக்கு எதிரா நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அண்ணன் சீமான் பேசியத இப்ப தான் பாத்தேன்.. பயங்கரமா ஹிப் ஹாப் தமிழா ஆதியவும் லாரன்ஸயும் மேடைல திட்டுறாரு.. கேட்டா ஆதி இஸ்லாமியர்கள தப்பா பேசிட்டாராம்.. அட எங்க எதுல தப்பா பேசுனார்னு கேட்டா எந்த டம்ளர்ஸ் கிட்டயும் பதில் இல்ல… கருணாஸ் அரசியலுக்கு வரும்போது வரவேத்த வாயி இன்னைக்கி லாரன்ஸ் வரேன்னு சொன்னா எதுக்குதுனா நீ எவ்ளோ பெரிய சாதி வெறியனா இருப்ப.

(“சீமானின் சாதியில்லா தமிழ் தேசியம்..” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கில் நாம் அறியவிரும்பாத மாற்றங்கள்…..

(இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விடயங்களில் எமக்கு முழுமையான உடன்பாடு இல்லை. ஆனாலும் இன்று கிழக்கில் தமிழர் முஸ்லீங்கள் இடையேயான விரிசல்கள் எந்தளவிற்கு வளர்ச்சியடைந்து செல்கின்றது இது தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் சகோதர உணர்வுகளும் உறவுகளும் ஏற்படுதப்படவேண்டும் என்பதற்காக இதனை பதிவு செய்கின்றோம் – ஆர்)

முப்பது வருட போர் முடிவடைந்து இத்துடன் சுமார் பத்து ஆண்டுகள் கழிந்த இவ்வேளையில் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்திருக்கும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு மற்றைய இனத்தவர்கள் மிகவும் மும்மூரமாக ஈடுபடுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  அங்கு தமிழர்களுக்கு எதிராக மிகவும் நூதனமான வேலைத்திட்டங்கள், மறைமுகமாகமாகவும், மற்றவர்களுக்குச் சந்தேகம் ஏற்படாத வகையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

(“கிழக்கில் நாம் அறியவிரும்பாத மாற்றங்கள்…..” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 99 )

யாழ் குடாநாடு வழமைக்குத் திரும்பியது.புலிகள் குடாநாட்டை விட்டு வன்னிக்கு தப்பி ஓடிவிட்டனர்.கிழக்கைச் சேர்ந்த பல புலிகள் எங்கும் போக முடியாமல் தடுமாறி ஒழித்து வாழ்ந்தனர்.இந்திய இராணுவ நடமாட்டம் அதிகரித்தது.பயப்படும்படியாக எதுவும் தெரியவில்லை.
அரச அலுவலகங்கள் வழமைபோல இயங்கத் தொடங்கின.சில நாட்களின் பின் யாழ்ப்பாண நகர தளபதி ஒரு அதிகாரிகள் மகாநாடு ஒன்றை ஒழுங்குபடுத்தினார்.இதற்கு பற்குணம் சென்றவேளை யாழ் நகர மையப்பகுதியில் புலிகள் கைக்குண்டு ஒன்றை வீசி தப்பி ஓடிவிட்டனர்.

(“பற்குணம் A.F.C (பகுதி 99 )” தொடர்ந்து வாசிக்க…)

எங்களுக்கு போராடுபவர்கள் வேண்டாம். போராட்டம்தான் வேண்டும்!!

கனடாவில் குளிரென்றாலும் சம்பந்தன்தான் காரணம், லண்டனில பனியென்றாலும் சுமந்திரன்தான் காரணம் என்று தொட்டதற்கெல்லாம் தமிழ் கூட்டமைப்பின் மீது தவிலடித்துக்கொண்டிருக்கும் “புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் தீர்மானிகள்” எல்லோரும் தாயகத்தில் அண்மைக்காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் பற்றி பேச்சு மூச்சுமில்லாமல் கரண்ட் அடித்த காகம் மாதிரி மூர்ச்சையாகி கிடப்பதுதான் அங்குள்ள மக்களுக்கும் புலம்பெயர்ந்த மக்களுக்கும் இடையிலான அரசியல் தேவைகளின் வித்தியாசத்தை கோடு கிழித்து காட்டியிருக்கிறது.
வவுனியாவில் நடைபெற்ற காணமலாக்கப்பட்டவர்கள் குறித்த போராட்டமானது வென்றதோ தோற்றதோ அது வேறு விடயம். ஆனால், அரசியல் கலப்படமில்லாத போராட்டமொன்றை தாங்களே இனி கையில் எடுத்தால்தான் வழி பிறக்கும் என்ற முடிவோடு பாதிக்கப்பட்ட அந்த மக்கள் வீதியில் இறங்கியதானது ஆளும் தரப்பை மட்டுமல்லாமல் தமிழ் சமூகத்தையும் குற்றவாளிக்கூண்டியில் நிறுத்தியது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இன்றும்கூட கோப்பாபுலவு மக்கள் அவ்வாறானதொரு விரக்தியோடுதான் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். (“எங்களுக்கு போராடுபவர்கள் வேண்டாம். போராட்டம்தான் வேண்டும்!!” தொடர்ந்து வாசிக்க…)

Nathuram Godse and the RSS Connection – We can forget history only at our own peril

(By Pratik Sinha)

RSS is rallying behind BJP and Modi for the 2014 elections in a big way. There are innumerable reasons to outrightly reject the RSS brand of politics which is a huge threat to the secular fabric of our country and the Constitution of India. But today, lets go back in history and see how central a role RSS played in Nathuram Godse’s life – the man who shot down Gandhiji, the Father of the Nation, in the name of ‘Hindutva’.
Nathuram Godse, RSS and Gandhiji Nathuram Godse, RSS and Gandhiji
RSS has time and again denied Nathuram Godse’s connection with them and disputes that he was a member. However RSS’s claims were completely falsified when Nathuram Godse’s brother Gopal Godse, who was also an accused in the Mahatama Gandhi murder case, spilled the beans in an interview given to Frontline on January 28, 1994.
Q. Were you a part of the RSS?

(“Nathuram Godse and the RSS Connection – We can forget history only at our own peril” தொடர்ந்து வாசிக்க…)

வெளிவந்து விட்டது வானவில் இதழ் 73

மீண்டும் அப்பாவி மக்கள் போராட்ட முனையில்…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் 23.01.2017 இல் வவுனியா, பிரதான தபாலகத்திற்கு முன்பாக சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்ட உண்ணாவிரதிகள் அமர்ந்திருந்த மேடையின் பின்னால், ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூறு”, ‘சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்,” ‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்” என்று எழுதப்பட்ட பதாகையொன்றும் தொங்கவிடப்பட்டிருந்தது. எனவே இவையே போராட்டக்காரர்களின் கோரிக்கைகளென எடுத்துக் கொள்ளலாம். போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு தினங்களின் பின்னர், வவுனியாவிற்கு நேரில் விஜயம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் பெரும் எடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(“வெளிவந்து விட்டது வானவில் இதழ் 73” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்க்கவி – வாழ்வே வழிமுறையும் ஆயுதமும்

(கருணாகரன்)

தமிழ்க்கவியை முதன்முதலில் சந்தித்தது எப்போதென்று சரியாக நினைவு கொள்ள முடியவில்லை. 1993 அல்லது 1994 ஆக இருக்கலாம். சாம்பவி என்ற பெண் போராளியோடு சந்திக்க வந்திருந்தார். (பின்னாளில் புநகரிப் படைத்தளத்தின் மீதான தாக்குதலில் சாவடைந்தார் சாம்பவி). சட்டென தமிழ்க்கவியைத் திரும்பிப்பார்க்க வைத்தது அவருடைய குரல்தான். சற்றுத் தடிப்பான குரலில் உரத்த தொனியில் பேசிக் கொண்டிருந்தார். என்ன, ஏதும் பிரச்சினையோ என்று கவனத்தைத் திருப்பிக் கூர்ந்து கவனித்தபோது, அப்படி எதுமில்லை. அவருடைய குரலும் கதைக்கும் முறையும் அப்படித்தான் என்று புரிந்தது. பேச்சிலடித்தது கிராமிய மணம். அறிமுகமில்லாத புதிய முகம். ஏறக்குறைய ஐம்பதுகளை நெருங்கிய தோற்றம். குரலைப்போலவே சற்றுத் தடித்த உடல். ஆனால், மிகச் சுறுசுறுப்பாக இயங்கும் ஆளாகத் தெரிந்தார். அவருடைய பேச்சும் அப்படித்தான். படுவேகமானது. படபடவென்று ஆயிரம் விசயங்களைப் பேசித்தள்ளி விடும் ஒரு மாய இயந்திரத்தைப்போல. இப்போதும் தமிழ்க்கவி அப்படித்தான். ஒரு பேச்சியந்திரம்.

(“தமிழ்க்கவி – வாழ்வே வழிமுறையும் ஆயுதமும்” தொடர்ந்து வாசிக்க…)

சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் நலன்கள்

(சட்டத்தரணி எஸ்.மோகனராஜன்)

கர்ப்பகால கொடுப்பனவுகள் மற்றும் அதனோடு தொடர்புடைய கர்ப்பிணிப் பெண்கள் நலன் சம்பந்தமான விடயங்ளை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான சட்டமாக பிரசவ நலக் கட்டளை சட்டம் காணப்படுகிறது. 1981 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் திருத்தங்களுக்குட்பட்ட இச்சட்டம், சர்வதேச தராதரத்துடன் ஒப்பிடும் போது இன்னும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய தேவை இப்பொழுது காணப்படுகிறது.

(“சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் நலன்கள்” தொடர்ந்து வாசிக்க…)